பானகம்

 "வெப்பத்தை தணிக்கும் இயற்கை #பானகம்"


பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாக சேர்ந்த ஒரு கூட்டுச்சுவை பானம். பனைவெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலில் வெப்பத்தினால் ஏற்படும் சூட்டை குறைத்து களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் தரக்கூடிய, மீண்டும் மீண்டும் பருக தூண்டும் அதிரடி பானம்.


#தேவையான_பொருட்கள் :


புளி - சிறிய எலுமிச்சை அளவு,

பனைவெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்,

சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்,

மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்,

தண்ணீர் - 2 கப்


#செய்முறை :

பனைவெல்லத்தை பொடியாக்கிக்கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு கரைக்கவும். உடன் புளிநீரில் பனைவெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும் வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் வடித்து. இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்.

கூடுதல் சுவைக்கு எலுமிச்சை, வாழைப்பழம், தக்காளி சேர்த்து கரைத்துக் கொள்வது சிறப்பு. மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கி புது தெம்புடன் புத்துணர்ச்சி பெரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி