Pineal gland

 🇨🇭#பீனியல்_சுரப்பி

[#pineal_gland]


🇨🇭#பற்றி_தெரிந்துகொள்ளுங்கள்❓


✴ முதுகுநாண்களின் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையேயும் மூளையின் நடுப்பகுதியிலும் காணப்படும் ஒரு அரிசியின் அளவே உள்ள சிறிய சுரப்பி ஆகும். இதுதான் மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும். இது ஐந்து முதல் எட்டு மில்லி மீட்டர்(5-8mm) அளவே உள்ளது. இது உடல் செயல் பாட்டில் பெரும் பங்கினை வகிக்கிறது. 


இது மிகச் சிறியது. இதன் அளவு (8x4x4)மி.மீ ஆகும். இதன் சராசரி எடை 120 கிராம்(120gm) ஆகும்.


இது செரட்டோனினின் வழிப்பொருளான தூக்கத்தினைத் தூண்டும் மெலட்டோனினைச் சுரக்கிறது.மெலட்டோனின்தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) எதிர்க்கவும், பெண்களின் முதல் மாதவிடாயை முறைப்படுத்தவும் துணை நிற்கிறது. 


இந்த சுரப்பின் செயல்பாட்டினை நிறுத்தினால் தூக்கம் கெடுவதுடன் பல திடுக்கிடும் உடல்நலக் குறைவுகளும் ஏற்படுகிறது.

இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல்/பீனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது

இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.


இச் சுரப்பி குழந்தைகளில் பெரியதாகவும் வளர வளர சிறிதாகி கால்சியம் படிந்து போகும். ஆகவே எக்ஸ்றே-கதிர் படத்தில் இது தெளிவாகத் தெரியும். 

மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் புற்றுக்கட்டி வளருமாயின் மையப்பகுதியில் காணப்பட வேண்டிய சுரப்பி X-கதிர் படத்தில் நடுவிலகிக் காணப்படும்.


இச்சுரப்பியில் படியும் சுண்ணாம்புச் சத்தினால் ஏற்படும் அழுத்தம் வலியினை தோற்றுவிக்கிறது. 

#சோடியம்_ஃபுளூரைடு நாம் அருந்தும் நீரில் உள்ளது. பிற உணவுப் பொருட்களிலும் காணப்படும் ஃபூளுரைடு பீனியல் சுரப்பியில் கல்சியம் சேருவதாலேயே நோய்கள் ஏற்படுகின்றன. 


தைராய்டு சுரப்பி எவ்வாறு ஐயோடினை சிறப்பாக ஏற்கிறதோ அதேபோல் பீனியல் சுரப்பி ஃபூளுரைடை ஏற்கிறது. 


.

⭕ #பீனியல்__சுரப்பிப்_புற்றுநோய்❗


பீனியல் சுரப்பிப் புற்றுநோய் என்பது நாளமில்லாச் சுரப்பியான கூம்புச் சுரப்பியில் தோன்றும் புற்றுநோயாகும். 


.

❓#புற்றிற்கான_அறிகுறி❓


👉1.மைய நரம்பு மண்டல நீர் தடைபடுதல், 


👉2.கண்களின் இயக்கத்தில் மாற்றம், 


👉3.தலைவலி, 


👉4.வாந்தி, 


👉5.குமட்டல், 


👉6.எல்லாம் இரண்டாகத் தோன்றுவது போன்றவையாகும்.


பீனியோசைட்டோமா மெதுவாக வளரும் பலவகையான உயிரணுக்களுடன் காணப்படும். பீனியோபிளாஸ்டோமா வீரியம் மிக்கது. 


மூளைப்புற்று நோயில், பீனியல் புற்றுநோய் ஒரு வீதமாக(1%) உள்ளது.3 முதல் 8 வீதம்(3-8%) சிறுவர்களிடமும் காணப்படுகின்றது. 

20 முதல் 40 வயதினரிடம் அதிகமாக உள்ளது. 


பினியல்பிளாஸ்டோமா மூளைதண்டுவட நீர்/மூளையயமுண்ணான் பாய்மம் (csf) வழியாக பிற இடங்களுக்கு எளிதில் பரவுகிறது. இந்த புற்றுத் தோன்ற காரணம் இதுவரை தெரியவில்லை. மரபணுவில் ஏற்படும் சடுதிமாற்றம் (mutation) காரணமாக இருக்கலாம். 


.

🇨🇭 #இந்த_ஆனந்தச்சுரப்பியை #எவ்வாறு_தூண்டி_செயற்பட #வைப்பது❓


💊1.சரியான தூக்கம்

    

அதாவது இரவில் நித்திரை கொள்ளவேண்டும். னெனில் இருளில்தான்(Dark) இந்த சுரப்பி சரியாகவும் விரைவாகவும் செயற்பட்டு(Activated) சுரப்புக்களை சுரக்கும். வெளிச்சம்(Light) ஆனது இந்தச் சுரப்பினை ஊக்குவிக்குமே தவிர. 

      

இரவுவேலை செய்பவர்களில் இருளான அரையிலாவது தூங்குவது ஒரளவு பரவாயில்லை.


💊2. சாதாரண மூச்சுப்பயிற்சிகள் மூலம் இதன் செயற்பாட்டை தூண்டிவிடமுடியும்.

     


💊3.விஷேடமாக முள்ளந்தண்டிற்கான மூச்சுப்பயிற்சி செயதல் வேண்டும்.(Spinal cord breathing)

   

அதாவது உடவை பின்பக்கமாக வளைத்து செய்தல் வேண்டும். இதன்போது மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுதல் வேண்டும். படத்தை பாருங்கள்.


💊4.தியானம் செய்யுங்கள்.(Meditation)

    

உங்களுக்கு பிடித்த அமைதியான இடத்தில் செய்ய முயற்சி செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி