மூட்டு சவ்வு சரிசெய்ய

 அடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்!


கேள்வி: கீழே விழுந்ததில் கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து விட்டது. என்ன மருந்து முயற்சி செய்யலாம்.


பதில்: நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம். 

எளிய முறை முயற்சி செய்து பாருங்கள்.


மூட்டு சவ்வு கிழிந்ததற்கான மருந்து .

நாட்டு பாக்கு10, புளியங்கொட்டை 10,  இவை இரண்டையும் நன்றாக ஊற வைத்து தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலக்கி முட்டியில் பற்று போடவும். 


வெள்ளை துணியால் பற்று கீழே விழாமல் கட்டி துணியின் மீது நல்லெண்ணைய் சிறிது ஊற்றவும். அது காய்ந்த பின் மறுபடியும் எண்ணை ஊற்றவும். இப்படியே செய்து வந்தால் உடைந்த ஜவ்வு கூடும். 3 நாட்களுக்கு ஒரு முறை பழைய கட்டை பிரித்து விட்டு வென்னீரில் காலை கழுவிய பின் மீண்டும் பத்து போடவும்.


காலுக்கு ஓய்வு அவசியம். முட்டியை அசைப்பதை தவிர்க்கவும்.


நலம் வாழ, 

ஈஸ்வரி. 


ஹோமியோபதி மருத்துவத்தில் 30 ஆண்டுகள் அனுபவமுள்ளவர் கூறிய முறை கீழே குறிப்பிட்டுள்ளேன். நன்றி bns.


ஹோமியோபதி மருந்து: 

தினசரி ஆர்னிகா - 30 ch மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 5 சொட்டுகள் இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடிக்கவும். இப்படியே ஒரு மாதம் தொடர்ந்து எடுக்கவும். 


மேலும் தினசரி இரவில் தூங்கும் போது ஒரு நாள் இரவு CALCAREA PHOS - 30 ch 5 சொட்டுகளும், மறுநாள் இரவு CALCAREA FLUORICA - 30 Ch 5 சொட்டுகளும் என 

மாற்றி, மாற்றி ஒரு டோஸ் மட்டும் தொடர்ந்து சரியாகும் வரை சாப்பிடவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி