Sun stroke

 🇨🇭#வெயிலுக்கு_மரணம்_என்று #படிக்கிறோமே_தவிர……


🇨🇭#எதனால்_மரணம்_என்பதை #பெரும்பாலோர்_உணருவதில்லை.❗


💀 விழிப்புணர்வு இருந்தால் உயிர் பலிகளை தவிர்க்கலாம்.❗


☀ " #சன்_ஸ்ட்ரோக்" ஆரம்பம். அந்த நிலையில்……


▶உடலில் நீர் வற்றிப்போகிறது.


▶வெப்பம் அதிகரிக்கிறது. 


⬆ அதனால், உறுப்புகள் பாதிக்கின்றன விளைவு, உச்சகட்டமாக மரணம் தான்.


↙வெயிலில் அலையாதீங்க❗


↙சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல❗


↙முன்னெச்சரிக்கை மிக முக்கியம்❗


☀ கோடைக்காலத்தில் ஏற்படும் 'சன் ஸ்ட்ரோக்' (SunStroke) மிக ஆபத்தானது. இதை '#ஹீட்_ஸ்ட்ரோக்' (Heat Stroke) என்றும் சொல்லலாம்.


``அதிக வெப்பத்தின் காரணமாக, நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான் 'ஹீட் ஸ்ட்ரோக்.’ நம் உடலின் உள் வெப்பநிலையும், பிஹெச்-ம் (pH) எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தமும் உறையாமலிருக்கும். 


நம் உடலில் ரத்த சுழற்சிக்கு வெப்பம் மிக அவசியம். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் அப்படியே உறைந்துவிடும். 


⭐ நம் உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு #தெர்மோஸ்டாட் (Thermostat) இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலில் வெப்பம் அதிகரிக்கும்போது, நம் உடலின் உள்வெப்பநிலையும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.  அதைத் தடுப்பதற்காக, வியர்வையின் மூலமாகவும், தோல்களின் வழியாகவும் வெப்பத்தை வெளியேற்றும் வேலையை இது செய்கிறது. குளிரான பிரதேசத்தில் இருக்கும்போது நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும். இப்படித் தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.


இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்து 

(#Break_down) போகும் நிலைக்கு 

'ஹீட் ஸ்ட்ரோக்' என்று பெயர். 


அதற்குப் பிறகு நம் உடலின் உள்வெப்பநிலை கட்டுக்குள் இருக்காது. 


106, 107... 112... என மிக உச்சநிலையை அடையும். 'ஹைப்பர்பைரெக்ஸியா' 

(Hiperpirexia) என்னும் அதிகமான காய்ச்சல் உண்டாகும். நினைவிழப்பு ஏற்படும்’’ 


☀#ஹீட்ஸ்ட்ரோக்_எப்போது

#உண்டாகும்❓ 


``இதில் இரண்டு வகைகள் உள்ளன. 


👉#நான்_எக்ஸ்டர்னல் 

ஹீட் ஸ்ட்ரோக் (Non exertional heat stroke)  


எந்தச் செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவது நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Non Exertional Heat Stroke). 


வெறுமனே, உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே இது உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும்.


👉#எக்ஸ்டர்னல் 

ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke).


வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுவது எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke) இள வயதுக்காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இது உண்டாகும்.


❓#யாருக்கு_வரும்❓


பெரும்பாலும் வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கு வரும். வெயிலிலேயே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும். அதனால், அவர்களை வெயிலில் அலைய விடாமல் செய்தால் தவிர்க்கலாம்.

இதய, சர்க்கரை, சிறுநீரக நோய்க்காக மருந்து சாப்பிடுவோர் , வெயிலில் போகவே கூடாது; அப்படி போனால், தற்காத்துக்கொள்வது நல்லது. அவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வரும் வாய்ப்பு அதிகம்.


🔴 #98_3_ஐ_தாண்டக்கூடாதுங்க❗


* நம் உடல் வெப்பம் 98.3 செல்சியஸ் டிகிரியாக இருக்க வேண்டும். இதை தாண்டினால், முதலில்…… 

◀காய்ச்சல் அடுத்து ‘சன் ஸ்ட்ரோக்’ தான்.


☀ இத்தகைய சன் ஸ்ட்ரோட் இருப்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறியலாம். உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால்……⬇


▶மலச்சிக்கல்


▶தலைசுற்றல்


▶கிறுகிறுப்பு


▶வாந்தி 


▶மயக்கம், 


▶காய்ச்சலின் போது 40 டிகிரி செல்சியலுக்கு மேல் வெப்பநிலை இருப்பது, 


▶தலைவலி, 


▶நாடித்துடிப்புகள் அதிகமாக இருப்பது, 


▶வியர்வையின் அளவு குறைவாக இருப்பது, 


▶தசை வலி மற்றும் பிடிப்பு, 


▶வேகமாக சுவாசித்தல் 


▶சருமம் சூடாகவும், வறட்சியுடனும் இருக்கும்.


▶மனநிலையானது மிகுந்த குழப்பத்துடன் இருக்கும்.


▶பெண்களுக்கு முகப்பரு வரவும் இது தான் காரணம்.


⭕ #தலைசுற்றல்_வாந்தியா❓


இதற்கு அறிகுறிகள் பல உண்டு; தொடர்ந்து, வெயிலில் அலைந்து கொண்டிருப்பவர்கள், அதிலும் வயதானவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, காய்ச்சல் போல உணர்வர்; தண்ணீர் மேல் தண்ணீர் குடிப்பர். ஆனால், வெப்பம் தாங்க முடியாது.

இது மட்டுமின்றி, வாந்தி, மயக்கம் ஏற்படும்; சோர்வு வரும்; படுக்கலாம் என்றால் தலை சுற்றும். கிறுகிறுப்பு தொடர்ந்து இருக்கும். சில சமயம், மாரடைப்பு போல, பெரும் வலி இருக்கும். தசைப்பிடிப்பு வெடிப்புகளும் ஏற்படும்.


⭕ #திணறும்_மூச்சு❗


உடலில் வெப்பம் ஏறிய நிலையில், வியர்வை வராது; மூச்சு திணறும்; உடலில் ஆங்காங்கு சிவந்து போகும். தடிப்பும், வெடிப்பும் ஏற்படும். எதிலும் கவனம் போகாது; இது தான் உச்சகட்டம்; உடனே டாக்டரிடம் போய்விடுவது தான் நல்லது. உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை வெளியேற்ற போதுமான நீர்ச்சத்து தேவை. அப்படி இருந்தால் தான் தோல் வழியாக வியர்வையாக வெளியேறும். இல்லாவிட்டால், வெப்பம் தங்கி விடும்.இந்த நிலையை தான் தண்ணீர் வற்றிப்போய் விட்டதாக கருதுகிறோம். தண்ணீர் வற்றி விட்டால் சன் ஸ்ட்ரோக் வருவது நிச்சயம்.


☀' #சன்ஸ்ட்ரோக்_வராமல்_தடுக்க 

#என்ன_வழி ❓


*சாதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். கோடைக்காலத்தில் வியர்வை, உடல் வெப்பம் ஆகியவை அதிகரிப்பதால், குடிக்கும் தண்ணீரின் அளவை இருமடங்கு ஆக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.


*தண்ணீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக் குடிப்பதே நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிப்பதற்கும், ஐஸ் க்யூப்ஸ் தயாரிப்பதற் கும் கூட காய்ச்சிய தண்ணீரையே உபயோகியுங்கள்.


*முடிந்தவரை மினரல் வாட்டர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. மினரல் வாட்டராக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் அந்த தண்ணீரில் உள்ள வைரஸ் கிருமிகள் பெருகி, உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.


*உடலில் உஷ்ணம் அதிகமாகி நீர்ச்சத்து குறையும்போது, ’சன் ஸ்ட்ரோக்’ ஏற்பட வாய்ப் புண்டு. இவர்களுக்கு குடிக்க நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, உட லில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


*உஷ்ணத்தால் ஏற்படும் கண் ஒவ்வாமை நோய், நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு, நீச்சல்குளத் தண்ணீரில் உள்ள கிருமிகளால் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, அதிக நேரம் நீச்சல் பயிற்சி வேண்டாம்.


*கோடையில் அதிக நேரம் வேகமாக நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றால் வியர்வை அதிகம் வெளியேறி, உடலின் தண்ணீர் சத்து குறைந்துவிடும். இதற்கு கலோரி குறைவாக உள்ள பானங்கள் அல்லது தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தசைப் பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகும்.


*கர்ப்பிணிப் பெண் களுக்கு கோடையில் உட லின் வெப்பம் அதிகமாவ தால். நீர்ச்சுருக்கு ஏற்பட்டு, சிறுநீரக உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரிதல், எரிச்சல் ஆகியவை ஏற்படும். இதற்கு அதிக தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த மருத்துவம்.


*தண்ணீருக்கு பதிலாக பழச்சாறு, நீர்மோர், இளநீர், கஞ்சி, கூழ் போன்ற பானங்களை அருந்தலாம். குளிர்பானங்களை விடவும் பழச்சாறு நல்லது. இளநீரில் பொட்டாஷியம் அதிகம் உள்ளது.


*காய்ச்சல், சளி, ஜலதோஷம் இருந்தாலும் தண்ணீர் குடிப்பதை நிறுத்தவேண்டாம். சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்தவேண்டும்.


*குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், தண்ணீர் கொடுக்கலாம். ஆனால், ஐஸ் வாட்டர் வேண்டாம்.


*தலை குளித்ததும், தலையை நன்கு துவட்டிவிட வேண்டும். ஈரம் சொட்ட சொட்ட இருப்பது, தலையை காயவிடாமல் வெயிலில் செல்வது ஆகியவை நல்லதல்ல.


* அதிக வெப்பமான இடங்களில் இருக்கக் கூடாது. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறினால், ரத்தத்தில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைத்துக்கொள்ளும்.


* சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.


* வெப்பத்தை உட்கிரகிக்கும் உடைகளை அணியக் கூடாது.


* உடலுக்குக் குளிர்ச்சி தரும், நீர்சத்துகள் நிறைந்த பழ வகைகளைச் சாப்பிடவேண்டும்.


* பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. பகலில் வெளியில் செல்ல வேண்டியது அவசியம் ஏற்பட்டால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும்.


* கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். சருமத்தில் ‘சன் ஸ்கிரீன் லோஷ’னைப் பூசிக்கொள்ளலாம். கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.


☀ #கோடை_காலத்திற்கேற்ற_உணவு #வகைகள்❓


கோடைக்கு ஏற்ற அரிசி சம்பாவாகும். அதனிலும் பழைய நெல்லைக் குத்தி அரிசியாக்கி உபயோகிப்பதே உடலிற்கு குளிர்ச்சியை அளிக்கும். பச்சரிசியும் சூட்டை தணிப்பதில் சிறந்தது.


பச்சைப் பயறு மற்றும் உளுந்து உஷ்ணத்தை நீக்கும். கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றால் உஷ்ண தாகம் குறையும்.


வெந்தய கீரை ,வள்ளைக் கீரை, பரட்டைக் கீரை, பொன்னாங்காணி கீரை, முருங்கைக் கீரை, புளியாரைக் கீரை ஆகியவற்றிற்கு உடல் சூட்டைப் போக்கும் குணம் உண்டு.வெங்காயப்பூ குளிர்ச்சி தரும்.

 கீரைத்தண்டு மற்றும் வாழைத்தண்டு போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும்.


வாழைக்காய், அத்திக்காய், கத்தரிக்காய்,வெண்டைக்காய், பெரும் பூசணிக்காய், பரங்கிக்காய், எலுமிச்சங்காய், புடலங்காய், களாக்காய் போன்றவை உடல் சூட்டை நீக்கும்.கத்தரிப்பிஞ்சு,

வெள்ளரிப்பிஞ்சு முருங்கைப் பிஞ்சு போன்றவை உஷ்ணத்தைக் குறைக்கும்.


பேயன் வாழை, அத்திப்பழம், விளாம்பழம், இலந்தைப் பழம், நெல்லிக்கனி, புளியம்பழம், நாவற்பழம், கொட்டை முந்திரிப்பழம், மாதுளம் பழம், திராட்சைப் பழம் போன்றவை குளிர்ச்சியைக் கொடுக்கும். இவற்றில் நெல்லிக்கனியை உணவிற்கு முன்னும், இலந்தைப் பழத்தை உணவிற்குப் பின்னும் உண்பது சிறப்பு.


கரும்பின் ரசம், வெல்லம், பழைய வெல்லப்பாகு, ஈச்சம் வெல்லம், சர்க்கரை போன்றவை குளிர்ச்சியை உண்டாக்கும்.


பசும்பாலைக் கறந்து சூடு ஆறவதற்கு முன்னால் உதய காலத்தில் பருக உடலின் சூடு தணியும்.


பசுந்தயிர் தாகத்தை தணிக்கும், எருமைத்தயிர் குளிர்ச்சியை உண்டாக்கும். 


வெள்ளாட்டு வெண்ணெய் குளிர்ச்சியை உண்டாக்கும்.


கறி வகைகளில் வான்கோழிக் கறி குளிர்ச்சியை உண்டாக்கும்.


❌ #தவிர்க்க_வேண்டியவை❓


அதிக காரம், எண்ணெய் பொருட்கள், தயிர், புளித்த உணவு வகைகள், குளிர்சாதன பொருட்கள், மதுபானங்கள். கோழி கறி,மைதா உணவுகள் , எண்ணையில் பொறித்த உணவுகள் ..


எசன்ஸ் கலந்து ,சாக்கரின் கலந்த திடீர் கடைகளில் விற்கும் ஜீஸ் வகைகள் ,குளிர் பானங்கள் ..


❗இந்த குளிர்பானத்தில் இருப்பது 

என்ன ❓


நன்னாரி சர்பத் ,ரோஸ் மில்க் ,சோற்று கற்றாழை சர்பத் ,என்று பாட்டில்களில் விற்கும் எல்லா பாட்டில்களிலும் , மெத்திலிமிடாசோல்,சிட்ரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், காஃபின், சோடியம்சைக்லாமேட்,சுக்ரோஸ், கலர் சாயங்கள் போன்றவையே இருக்கிறது

இதனால் வரும் பக்கவிலைவு……👇


வயிற்றில் எரிச்சல், குமட்டல், வாந்தி, தோல் அழற்சி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மட்டுமல்லாமல் உயிர் கொள்ளி நோயான புற்றுநோய் அபாயமும் அதிகம்.


💢 #சன்_ஸ்ட்ரோக்கால்_ஒருவர் #பாதிக்கப்பட்டால்_என்ன_செய்ய #வேண்டும்❓


☀ முதல் உதவி என்ன❓


👫👉 குழந்தைகளுக்கு…… தெர்மோஸ்டாட் வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடைக்காலத்தில் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 


👴👵👉 முதியவர்களுக்கு…… தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். அதனால் அவர்களும் கவனமாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு 'தெர்மாஸ்டாட்' நல்லநிலையில் இருந்தாலும், புறச் செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தை உதாசீனப்படுத்தாமல் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.


வெயிலில் மயக்கம் அடைந்தோ, கிறுகிறுத்தோ போவோரை கண்டால், அவர்களை, நிழலில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை குளிர்ப்படுத்த வேண்டும்; தண்ணீர் தெளிக்க வேண்டும். பின், உடலில் இருந்து வியர்வை வெளியேற, அவர் அருகே மின்விசிறியை வைத்து காற்று வர வைக்க வேண்டும்.


உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும். அழைத்துச் செல்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் தொடை இடுக்கு, கைகள் இடுப்பு, கழுத்து பக்கவாட்டு பகுதிகளில் ஐஸ் ‘பேக்கிங்’ வைக்கலாம்.அப்படி செய்தால், உடல் வெப்பம் 100 பாரன்ஹீட் டிகிரிக்கு குறையும்.


அவருக்கு உப்பு – தண்ணீர் கரைசலை தரலாம். இப்போது ‘எலக்ட்ரால்’ கரைசல் கடைகளில் விற்கப்படுகிறது. அதைதந்தால் அவர் உடல் வெப்பம் குறைந்து விடும். இதை ஒரு முதலுதவியாக மட்டுமே செய்ய வேண்டும்... கவனம்❗


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


    ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி