பார்க்கின்சன் நோய்

 #பார்கின்சன்_என்பது

#நோய்_கிடையாது_அது_ஒரு

#குறைபாடு……❓❗


#அது_வாத_நோய்யும்_அல்ல…❗❗❗


பார்கின்சன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுவதர்க்கு முன் ❗❗❗


⭕நரம்பு மண்டல ரகசியங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்…❓


மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும். அனைத்து செயல்களுக்கும் 

அடிப்படையாக உள்ளது. 


⭐மூச்சு விடுவது முதல்……


⭐தசைகளின் அசைவுகளை 

கட்டுப்படுத்துவது, 


⭐சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. 


⭕ நரம்பு மண்டலம் 

கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... ❓


⃣ தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: 


இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் 

இவற்றிற்குப் பொறுப்பாகின்றது. 


⃣ மோட்டார் நரம்பு பிரிவு: 


அசைவுகளையும், செயல்களையும் 

மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க 

வைக்கின்றது. 


⃣ சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு: 


தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், 

மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற 

உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரணமாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வாழ்வினை 

வெகுவாக பாதித்து விடுகின்றது. 


⭕ நரம்பு வலியின் 

அறிகுறி என்ன…❓


நரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித 

அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, தண்டுவடத்திலா அல்லது 

பரவியுள்ள புற நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும். 


♦தன்னிச்சை இயக்க நரம்பு பாதிக்கப்படும் பொழுது... ❓


 * நெஞ்சு வலியினை உணர முடியாது.


* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை இருக்கும். 


 * வறண்ட கண், வாய் காணப்படும். 


 * மலச்சிக்கல் ஏற்படும். 


 * சிறுநீரகபை சரிவர இயங்காது.

 

 * உடல் உறவில் பிரச்சனை இருக்கும். 


♦மோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் பொழுது.❓


 * உடல் சோர்வு ஏற்படும். 


 * தசை தேய்மானம் காணப்படும். 


 * தசை துடிப்பு இருக்கும். 


 * பக்கவாதம் ஏற்படும். 


♦சென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு ஏற்படும் பொழுது..❓


 * வலி இருக்கும். 


 * மதமதப்பு இருக்கும். 


 * குறுகுறுப்பு, குத்தல் இருக்கும். 


 * எரிச்சல் இருக்கும். 


 * குளிர், சூடு தாங்காமை இருக்கும். 

சிலருக்கு இரண்டு மூன்று தொந்தரவுகள் 

கூட அறிகுறிகளாகத் தெரியலாம். 


பொதுவாக 100 வகையான நரம்பு பாதிப்புகள் உள்ளன. வயது கூடும் பொழுது புற நரம்பு பாதிப்பு கூடும். 


சர்க்கரை நோயாளிக்கு இப்பாதிப்பு எளிதில் ஏற்படும். 


புற்றுநோய் பாதிப்பு நரம்புகளை பாதிக்கலாம். 


விபத்துக்கள், சில மருந்துகள் போன்றவை கூட நரம்புகளை பாதிக்கலாம். சத்து குறைபாடு,தொற்றுநோய்போன்றவைகளும் நரம்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம். 


அதிக நபர்களுக்கு இதனை முழுமையாக சரி செய்ய முடிகின்றது. சின்ன அறிகுறி இருந்தாலும், உடனடி பெறும் மருத்துவ ஆலோசனை நல்ல நிவாரணம் அளிக்கும். அடிப்படை காரணம் அறிந்து சிகிச்சை செய்யவேண்டும். 


 * சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை 

அளவினை சரி செய்யவேண்டும். 


 * சத்து குறைபாடுகளை சரி 

 செய்யவேண்டும். 


 * பாதிப்பு தரும் மருந்துகளை மருத்துவர் 

ஆலோசனைப்படி நீக்குதல் வேண்டும். 


 * அடிபட்ட இடத்தில் தகுந்த சிகிச்சை தர 

 வேண்டும் 


* மற்ற பாதிப்புகளுக்கு உரிய மருந்து 

 எடுத்துக் கொள்ள வேண்டும் 


சிலருக்கு திடீரென கால், கை சற்று சோர்வாய் இருப்பது போன்று இருக்கும். நரம்பு முறையாய் வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு இது. 


அதிக கவலை, டென்ஷன் 

இருப்பவர்களுக்கு அதிகமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகின்றது..

அடிபட்ட பிறகு, முதுகுவலி, கழுத்துவலி 

 இருக்கும்போது இத்தகு பாதிப்பு 

 ஏற்படுகின்றது. 


அதிக சோர்வு, அதிக வேலை.செய்து ஓய்ந்துப் போகுதல் போன்றவை இத்தகு பிரச்சினைகளை உருவாக்கும்..


இதற்கு உடற்பயிற்சியும், பிஸியோதெரபி எனப்படும் குறிப்பிட்ட பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும். 


சிலருக்கு வளைந்த விரல்கள் இருக்கலாம். மணிகட்டு சுழன்று கை கீழ்நோக்கி பிரண்டு இருக்கலாம். அவரவர்.உடலுக்கு ஒரு வரைப்படம் உண்டு. சிலகாரணங்களால் மூளை இந்த மடிந்தவிரல்களையும், பிசகிய கையினையும் சரியான வரைபடமாக எடுத்துக் கொள்கின்றது. 


மூளையை மீண்டும் சரியான வரைபடத்திற்கு.மாற்றுவதே பயிற்சி ஆகின்றது அல்லது 

தொடர்ந்து அப்படியே இருந்தால் பாதிக்கப்பட்டபகுதி நலிந்து செயலிழக்கின்றது. 


 * அடிக்கடி உட்கார்ந்து, எழுந்து, நடந்து 

பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க 

வேண்டும். 


 * மருத்துவ ஆலோசனை மிக அவசியம். 


★திடீரென ஒருவர் உடல் உதறி அப்படியே 

நினைவற்று விழுந்து விடுவார். சற்று 

கூடுதல் நேரம் அவ்வாறே இருப்பார். பிறகு எழுந்து விடுவார். இதன் காரணம், 

நரம்பின் இயக்கம் சிறிது நேரம் முறையாக இயங்காததால் ஏற்படும் பாதிப்பு ஆகின்றது. 


 

 * சோபாவிலோ, படுக்கையிலோ ஓய்வில் இருக்கும் பொழுது பலருக்கு இது ஏற்படுவதுண்டு. 


 * நீண்ட நேர பாதிப்பு இருந்தாலோ 


* தலை, கை, கால்கள் முறையற்று நடுங்குதல் இருந்தாலோ. 


 * வாய் விட்டு திடீரென அதிக மூச்சு 

விடுவது போன்று கண்டிப்பாய் மருத்துவசிகிச்சை பெற வேண்டும். 


பொதுவில் பலமின்மை என்பதனை அதிக சோர்வுடன் இருந்தாலும் வழக்கில் கூறுவர். 

பலமின்மை என்பது சோர்வுடன் இருந்தாலும், ஒரு சாதாரண பொருளை 

(பால் டம்ளர்) தூக்க முடியாமல் இருப்பதோ, நகர்த்த முடியாமல் இருப்பதோ ஆகும். 


⭐ உதாரணம்


ஒருவரது வலது கால் பலமிழந்து 

இருக்கின்றது என்றால் அவரது 

வலது பக்க தண்டு வடமோ அல்லது இடது பக்கமூளையோ பாதிப்படைந்து 

இருக்கக்கூடும்.இதனை செயல்பாட்டு பலவீனம் என்று கூறுவர். 


தலையில் அடிபட்டால் 

சாதாரணமாக தலையில் இடித்துக் 

கொள்வதில் இருந்து, ரோட்டில் ஏற்படும் 

விபத்து வரை என பல காரணங்களால் 

தலையில் அடிபடக் கூடும். மண்டையில் சற்று அமுங்கினால் போல் இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல்

தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள வேண்டும். 


💢 இந்த பாதிப்பு ஏற்பட்டவர்...❓


 * நினைவின்றி விழுந்தாலோ 


* சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் நினைவின்றி விழுந்தாலோ 


* கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக 

 அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் போல் தெரிந்தாலோ 


* கை, கால் அசைவுகள் மிகவும் 

 குறைந்தாலோ, அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக அவசர சிகிச்சை தேவை 

 என்பதனை உணருங்கள். 


சிலர் அடிபட்ட சில மணி 

நேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் கூட கழித்து மயங்கி விழுவர். 


👉இவர்களுக்கு…………


* தலைவலி 


* குழம்பிய பேச்சு 


* வாந்தி 


* மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் 

கசிவோ அல்லது திரவ கசிவோ இருக்கும்..


ஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை 

என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை 

 அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். 


மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு 

சற்று அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். 


முகம், தலை இவற்றுக்கு ரத்த ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட 

அதிக ரத்தப்போக்கினைத் தரும். இருப்பினும், காயம் சிறியதா, பெரியதா 

 என்பதை மருத்துவரே முடிவு செய்யவேண்டும். 


இம்மாதிரி அடிபடும் 

ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் கொண்டுலேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி கொண்டு, 

காயம்பட்ட இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கலாம். 


காயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் தலையையும், தோள்பட்டையையும் நாம் 

பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். 

மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை.அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள்.


பார்கின்சன் என்பது

நடுக்குவாத நோய் அல்ல…❓❗


பார்கின்சன் நோய் உடம்பில் மற்றும் மூளை உள்ள செல்களை பாதிக்கும் ஒரு தீவிரமான குறைபாடு கொண்ட நோய்.


மூளையின் மைய நரம்பு மண்டலத்தை இந்நோய் தாக்குவதாலே இவ்வாறு ஏற்படுகிறது. 


மனித உடலின் மிக முக்கியமான இரண்டு பகுதிகள்’ என மூளையையும் இதயத்தையும் சொல்லலாம். 


உயிர் இயக்கத்துக்கு இதயம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு உடலின் இயக்கத்துக்கு மூளை அவசியம். 


அப்படிப்பட்ட மூளை செயல்பாட்டுக்கு உதவுவது நரம்பு மண்டலங்கள். 


பார்க்கின்சன் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோய். 


மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனக் குறைபாட்டால் ஏற்படுகிறது. 


நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில்……


1, ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி முதல் இடத்திலும், 


2, ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன. 


அல்சைமர் பாதிப்பு, பலராலும் அறியப்பட்ட ஒன்று! 


#அது_என்ன__பார்கின்சன்_பாதிப்பு❓


நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் #டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன்.


நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும். நிலைமை கடினமாகும்போது, நிற்பது, நடப்பது,


பொருள்களைக் கையாள்வது, உடலை பேலன்ஸ் செய்வது... என அன்றாடச் செயல்கள் பலவும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை முழுமையாக குணப்படுத்த 

முடியும்.


இது ஒரு நோய். இது மைய நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சிதைக்கக்கூடிய நோய் ஆகும். இதன் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் சரிவர தெரிவதில்லை. 


போக போக இதன் வீரியம் அதிகமாகும். இதில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயக்கத்திறன், பேச்சு சரிவர இருப்பதில்லை.


இதன் முக்கியமான அறிகுறி “#Tremors” அதாவது #நடுக்கம். இந்த நடுக்கம் முதலில் கையில் ஏற்படும். 


நடுக்கம் ஏற்படும் கை ஓய்வு நிலையில் உள்ளபோது மட்டுமே நடுக்கம் இருக்கும். 


பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் ஏற்படாது நடுக்கம் ஏற்பட்டால் கூட ஓய்வு நிலையில் ஏற்படும் நடுக்கத்தைவிட குறைவாகவே இருக்கும். 


மனசோர்வு, கோவம் ஏற்படும்போது நடுக்கம் அதிகமாகும். 


இவ்வாறு நடுக்கம் ஏற்படுவதால் இதனை நடுக்குவாத நோய் என்று நினைத்து விடக்கூடாது. 


🔴👉 இது நடுக்குவாத நோய் அல்ல!..


தசைநார் வலிப்பாக நோய். இந்நோய் பாதிக்கப்பட்ட 30% பேர்களுக்கு அந்நோய் தொடங்கும் கட்டத்தில் தசைநார் வலிப்பு ஏற்படுவதில்லை. 


"பார்கின்சன் பாதிப்பு ஏற்படுவதற்கு, வயது முதிர்வு, மரபுக்குறைபாடு, குடும்பச்சூழல் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. 


பெரும்பாலும் 50 முதல் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, இப்போது சிறு வயதினறுக்கும் பார்கின்சன் எளிதில் ஏற்படுகிறது. பாதிக்கப்படுபவர்களில் ஆண்கள்தான் அதிகமிருக்கிறார்கள். 


பார்கின்சன் தசை இயக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களால் தொடர்ந்து பேசவோ, எழுதவோ, ஒரு பொருளைச் சரியாகப் பிடிக்கவோ முடியாது. 


கை நடுக்கம், சுருக்கமாகப் பேசுவது, முறையற்ற கையழுத்து நடை, கவனச்சிதறல் இவர்களுக்கு இருக்கும்.”


#அறிகுறிகள்_என்ன…❓❓❓


🔴 உடல் இயக்கம் தொடர்பான 

பிரச்னைகள் - 


கை, விரல் நடுக்கங்கள், உடலியக்கம் மாற்றம், மிக மெதுவாகச் செயல்களைச் செய்தல், கூன் விழுவது போன்ற உணர்வு, நடப்பதில் சிக்கல் போன்றவை.


🔴 ஆற்றல் பிரச்னைகள் - 


உடலில் திடீரென எந்தச் செயல்களையும் சரியாகச் செய்ய முடியாமல் சக்தி குறைந்துபோவது.


🔴 தகவல் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள் - 


பேசுவது, எழுதுவதில் பிரச்னை. பேசும்போது கோர்வையாக வார்த்தை வராமல் தடுமாறுவது. எழுதும்போது எழுத்து வழக்கம்போல் இல்லாமல், கிறுக்கலாக விழுவது.


🔴 தூக்கப் பிரச்னைகள் - 


அரைத் தூக்கத்தில் விழித்துக்கொள்ளுதல், தூக்கமின்மை போன்றவை. 


🔴பார்வைப் பிரச்னைகள் - 


எதிரில் இருக்கும் பிம்பங்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது சரியாகப் புலனாகாமல் இருத்தல். இவையெல்லாம், பொதுவான சில அறிகுறிகள். சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடு


* பேச்சுத்திறன் மெதுவாக குறையும். 


* பேசுவதைப் புரிந்து கொள்ளுவதிலும் சிரமம் ஏற்படும். 


* துரிதமாகச் செயல்படும் நிலை குறையும். 


* முக பாவனைகள் குறையும். 


* பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். 


* தசைகளில் இறுக்கம் ஏற்படும். 


* நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். 


* நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. 


* பொதுவாகக் கால், கை, தாடை, முகம் போன்றவற்றில் நடுக்கம்.


* செயல்பாடுகளில் வேகம் குறைந்த உணர்வு.


* கை, கால்கள், முதுகுப் பகுதியில் இறுக்கம். 


* ஒரு செயல்பாட்டை நேர்த்தியாக செய்வதில் சிரமம் இருக்கும். 


* களைப்பு, 


* மனச் சோர்வு, 


* மலச்சிக்கல்,  


* சொற்களை உச்சரித்தல் போன்றனவும் கடினமாகும்.


* நடுங்கிய பேச்சு


* பேச்சுக்குளறல்


* உணர்ச்சியின்மை


* பதற்றம்


* முகர்தல் உணர்வுக் குறைவு அல்லது இழப்பு


* வலி, நரம்பு நோய், தசை, மூட்டுகள் மற்றும் தசைநாண்கள், நெருக்கடியை ஏற்படுத்துதல்.


* குற்றுநிலை குறைந்த இரத்த அழுத்தம்.


* எண்ணெய்ப் பசையுள்ள சருமம் மற்றும் 


*சிவந்த தோல் அழற்சி


*சிறுநீரக அடங்காமை  இரவில் சிறுநீர் மிகைப்பு (இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தல்)


* மாறிய பாலுணர்வுச் செயல்பாடு,

   பாலியல் விழிப்புணர்ச்சி

   வலுக்குறை.


* அதிகப்படியாக வியர்த்தல்


*இமைத்தல் விகிதம் குறைந்துவிடல்.


*கண் பகுதிகளில் அழற்சி


* கண்ணீர் திரையில் மாற்றம்


* காட்சிக்குரிய மாயத்தோற்றங்கள்.


* கண் குவிதல் குறைதல்


* இமைச் சுருக்கம்.

 

* விழியசைவில் மாற்றங்கள் 


* இமைகளைத் திறப்பதற்குச் சிரமமாக இருத்தல்.


மூளையின் மைய நரம்பு மண்டலத்தை இந்நோய் தாக்குவதாலே இவ்வாறு ஏற்படுகிறது. 


இது பொதுவாக மூளையின் டோபோமினர்ஜிக் நரம்பணுக்களில் உற்பத்தியாகும் டோபாமைனின் பற்றாக்குறையான உருவாக்கம் மற்றும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது.


பார்கின்சன் நோய் உடம்பில் மற்றும் மூளை உள்ள செல்களை பாதிக்கூம் ஒரு தீவிரமான குறைபாடு கொண்ட நோய். 


இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உடற்பயிற்சி தேவை. நாட்கள் செல்ல செல்ல இதன் அறிகுறிகள் மிக மோசமாக மாறும். அதாவது……… 


நம் தோற்றத்தில் கூட மாறுபாடுகள் ஏற்படும். 


மூட்டு விறைப்பு ஏற்பட்டு நடை மற்றும் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். 


மங்கிய தோற்றம் உண்டாகும். 


பதற்றம் அதிகமாக இருக்கும். 


தற்போது  parkinson’s dieseas நோயை குணப்படுத்த ஆங்கில மருந்து முறைகள் இல்லை. 


இது ஒரு உயிக்கொல்லி நோய் அல்ல. காலத்தால் ஏற்பட்டு தீவிரமடைய கூடிய ஒரு வகையான நோய். ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் குறைவுதான். 


உடற்பயிற்சி, குடும்ப நபர்களின் ஆதரவு, அன்பு அதிகமாக கிடைத்தால் வெகு விரைவாக இதிலிருந்து குணமடைந்து விடலாம். 


ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதும் மிக அவசியம். 


மனசோர்வு இல்லாமல், ஆரோக்கியமான உணவு அருந்துதல் இதை மேற்கொண்டால் ஒரு நோயும் நம்மை அணுகாமல் வாழலாம்!…


#உங்கள்……


வீட்டிலோ அல்லது உங்களுக்கு அருகாமையிலோ இப்படி யாரேனும் இருந்தால் அந்த நோயைக் கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த……


நோய்யின் ஆரம்பத்தில் தொடர்பு கொள்ளுவது மிகவும் சிறப்பு.


#வைத்தியர்_யாஸீன்


999 437 9988

81 4849 6869


#மேலப்பாளையம்,

#திருநெல்வேலி.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி