ஆண்குறியில் ஏற்படும் பரு

 🇨🇭#ஆண்குறியில்_பருக்கள்_ஏற்படுவது #எதனால்❓


💊#அதற்கான_தீர்வு_என்ன❓💊


⭐ பருக்கள் முகத்தில் வருவதால் தான் அதை முகப்பரு என்றே கூறுகிறோம். ஆனால், சிலருக்கு, மார்பு, தோள்பட்டை, முதுகில் கூட பருக்கள் வருவது உண்டு. இது அவரவர் உடல் மற்றும் சரும நிலையை பொருத்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிலருக்கு ஆண்குறியில் கூட பருக்கள் ஏற்படுவது உண்டு. ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியானது விதைகளுக்கு பின்னால் உருவாகக்கூடியது. ஒருவேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப்பையானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.


கூச்சத்தின் காரணாமாக சிலர் வெளியே கூறுவது இல்லை. சிலர் பயத்தின் காரணமாக மருத்துவரை அணுகுவதில்லை. ஆனால், இவ்வாறு ஆண்குறியில் பருக்கள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்... 


ஆண்குறியில் பருக்கள் வரக் காரணம் எண்ணெய் சுரப்பிகள் தான் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்படும் குளறுபடியால் தான் ஆண்குறியில் புடைத்திருப்பது போன்ற பருக்கள் தோன்றுகிறது. 


ஆண்குறியில் மயிர்கால்கள் பகுதியில் சரும அழற்சி ஏற்பட்டாலும் கூட ஆண்குறியில் பருக்கள் வர வாய்ப்புகள் உண்டு. பருவமடைதல் சிலருக்கு பருவமடையும் போது கூட இவ்வாறு பருக்கள் போன்ற சிறு சிறு புடைப்புகள் ஆண்குறியில் தோன்ற வாய்ப்புகள் இருக்கின்றன.


வயது வந்தோர் மத்தியில் சரும மெழுகு சுரப்பி அல்லது சிறு சிறு பருக்கள் தோன்றுவது மிகவும் சாதாரணம் தான் இதற்கு சிகிச்சை என்று ஏதும் தேவையில்லை. அதுவே, தானாக சரியாகிவிடும். 


ஆண்குறி கீழ் பகுதியில் வளரும் மயிர்க்கால்களில் சரும தொற்றுகள் ஏற்பட்டாலும் இவ்வாறு பருக்கள் தோன்றலாம். அதற்கு மருத்துவரிடம் சென்று ஆண்டி-பயாடிக் பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் அதுக் கூட தேவையில்லை, தானாக சரியாகிவிடும். 


ஒருவேளை உடலுறவு கொண்ட பிறகு இவ்வாறு ஆண்குறி பகுதியில் பருக்கள் தென்பட்டால் அது ஹெர்பெஸ் (herpes) எனும் பாலியல் தொற்று பாதிப்பாக இருக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள துவங்குங்கள். 


சிலர் சுய இன்பம் கொள்வதால் தான் ஆண்குறியில் பருக்கள் ஏற்படுகின்றன என தவறாக எண்ணுகிறார்கள். ஆனால், அப்படி ஏதும் இல்லை.


நாம் அணியும் ஆடைகள் சருமத்தில் உரசும் போது ஏற்படும் பாதிப்பு ஷேஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது. இதனால் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான ஷேஃப்டிங் பிரச்சினை தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில், மார்பக காம்புகளில் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை அவ்வளவு சாதாரணமாக விட்டு விடவும் கூடாது. இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். எல்லார் முன்னிலையிலும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.


நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது ஏற்படும் உராய்வினாலும் பிறப்புறுப்பில் வலி மற்றும் அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


👉 #ஆண்குறியில்_கூட_பருக்கள்

#காரணங்கள்❓


▶உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு


▶சுய இன்பம் காணுதல்


▶இறுக்கமான உள்ளாடைகள்


▶அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல்.


▶உடல் பருமன்


💢 #அறிகுறிகள்❓


👉எண்ணெய் சுரப்பிகள்


இதுப் போன்று ஆண்குறியில் பருக்கள் வரக் காரணம் எண்ணெய் சுரப்பிகள் தான் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்படும் குளறுபடியால் தான் ஆண்குறியில் புடைத்திருப்பது போன்ற பருக்கள் தோன்றுகிறது.


👉மயிர்க்கால்கள் அழற்சி


ஆண்குறியில் மயிர்கால்கள் பகுதியில் சரும அழற்சி ஏற்பட்டாலும் கூட ஆண்குறியில் பருக்கள் வர வாய்ப்புகள் உண்டு.


👉பருவமடைதல்


சிலருக்கு பருவமடையும் போது கூட இவ்வாறு பருக்கள் போன்ற சிறு சிறு புடைப்புகள் ஆண்குறியில் தோன்ற வாய்ப்புகள் இருக்கின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


👉சரும மெழுகுசுரப்பி 

(Sebaceous Glands)


வயது வந்தோர் மத்தியில் சரும மெழுகு சுரப்பி அல்லது சிறு சிறு பருக்கள் தோன்றுவது மிகவும் சாதாரணம் தான் இதற்கு சிகிச்சை என்று ஏதும் தேவையில்லை. அதுவே, தானாக சரியாகிவிடும். என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.


👉சரும தொற்று


ஆண்குறி கீழ் பகுதியில் வளரும் மயிர்க்கால்களில் சரும தொற்றுகள் ஏற்பட்டாலும் இவ்வாறு பருக்கள் தோன்றலாம். அதற்கு மருத்துவரிடம் சென்று ஆண்டி-பயாடிக் பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் அதுக் கூட தேவையில்லை, தானாக சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள்.


👉உடலுறவுக் கொண்டிருந்தால்


ஒருவேளை உடலுறவு கொண்ட பிறகு இவ்வாறு ஆண்குறி பகுதியில் பருக்கள் தென்பட்டால் அது ஹெர்பெஸ் (herpes) எனும் பாலியல் தொற்று பாதிப்பாக இருக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள துவங்குங்கள்.


👉சுய இன்பம் காரணமா❓


சிலர் சுய இன்பம் கொள்வதால் தான் ஆண்குறியில் பருக்கள் ஏற்படுகின்றன என தவறாக எண்ணுகிறார்கள். ஆனால், அப்படி ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


⭕ #இயற்கை_முறை_வைத்தியம்❓


⭐ சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. இது ஒரு ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு தன்மை காலை கொண்டது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.


⭐1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.


⭐ வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. அதனால் தான் இது நிறைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.


⭐ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.


⭐ கற்றாழை ஒரு மேஜிக் தாவரம் என்றே கூறலாம். இதன் ஜெல்லை பகுதியில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்பட்ட சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகி விடும்.


⭐கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்


🔯 #ஆண்_உறுப்பில்_கட்டிகள் 

#கரை_அல்லது_உடைய…❓


⭐ அரிசி மாவையும் மஞ்சள் பொடியையும் விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்து களியாக்கி கட்டி மேல் வைத்து துணியால் கட்ட கட்டி உடைந்து விடும்.


⭐ பாதாள (சப்பாத்திகள்ளி)  மூலியின் பூவெடுத்து அம்மியில் வைத்து அரைத்து கட்டியின் மீது தடவ கட்டி உடைந்து விடும் ஒரே வேளையில் குணம் காணலாம்


⭐ கட்டிகள் உடலிலோ எந்த இடத்தில் இருந்தாலும் சரி அல்லது முகத்திலோ காணப் பட்டால், எருக்கன் இலைகளை எடுத்து விளக்கெண்ணை இட்டு சூட்டில் வதக்கி, அந்த இலையை, கட்டி அல்லது வீக்கத்தில் வைத்து இரவில் கட்டிவர, அவை சரியாகும்.


⭐ சிறிதளவு தேன் மற்றும் சிறிது சுண்ணாம்பு எடுத்து நன்கு கலக்கி, அந்தக் கலவையை கட்டிகளின் மேல் பூசலாம்.


⭐ மஞ்சளை இழைத்து அந்த மஞ்சளுடன் சலவை சோப்பை சேர்த்து கலக்க, கருஞ்சிவப்பு நிறத்தில் அந்தக் கலவை மாறும். அதனை எடுத்து கட்டி உள்ள இடத்தில்  தடவி வரலாம்.


⭐ உடையாத கட்டிகளுக்கு வாழைப்பழத்தை குழைத்து கட்டியின் மீது பூசிவர கட்டி பழுத்து உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.


⭐ உடம்பில் ஏற்படும் புண் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டை இரண்டையும் சேர்த்து நல்லெண்ணெயில் கலக்கி தடவினால் கட்டிகள் உடைந்து விடும்.


🈵 #தடுக்கும்_முறைகள்❓


⏩ இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.


⏩ குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.


⏩ நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.


⏩ உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


⏩ ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.


⏩ பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.


⏩ இந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக அந்த பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


   999 437 9988 ☎ 81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி