Posts

Showing posts from March, 2022

தேங்காய் மகத்துவம்

 இது மருந்தல்ல             மாபெரும் விருந்து மருத்துவ குணத்தை தருகின்ற பத்தியம் இல்லாத உணவு முறைகள்     ஒரு மாதுளம் பழத்தின் முத்துக்களும் அதே அளவு துருவிய தேங்காயும் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் இதனால் கிடைக்கின்றது          நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் கிடைப்பதற்கு இதுவே முதன்மையான உணவாக இருப்பதாக சித்தர்களின் பாடல்கள் கூறுகின்றன   தேங்காயும் வாழைப்பழமும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு களைப்பு உடல் சோர்வு ஏற்படுவதில்லை   இதனால்தான் விரதம் இருப்பவருக்கு விரதம் முடிந்தவுடன் இதை முதல் உணவாக தருகிறார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது    தேங்காயுடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடலுக்கு நல்ல வலிமையும் கிடைக்கின்றது   மைதாவில் தயாரிக்கின்ற பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளை உண்பதால் குடலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது இதனால் அஜீரண கோளாறுகள் உண்டாகின்றன     எனவே இதற்கு பதிலாக எளிதாக கிடைக்கின்ற பப்பாளி பழம் கொய்யா பழம் அத்திப்பழம் பேரீச்சை பழங்களை சாப்பிடலாம் இ

குடலிறக்கம் குணமாக

 🇨🇭#குடல்_இறக்கம்_ஹெர்னியா #எனப்படும்_பிரச்சனைக்கான 🇨🇭#இயற்கை_வைத்தியங்கள்…❓❗ 💊 குடலிறக்கம் என்ற ஹெர்னியா💊 குணமாக…❓❗❗ ⭕ #மருந்து_01 சித்தரத்தை-200கிராம் கடுக்காய் -200 கிராம்  திப்பிலி-200கிராம்  வால் மிளகு-400கிராம்  சாதிக்காய் 150 கிராம்  மேற்கண்ட கடைசரக்குகளை  புடைத்து தூசி நீக்கி சிறிது பசுநெய் விட்டு பொன்னிறமாக வறுத்து தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.  மேற்கண்ட சூரணத்தை கால் (அ) அரைதேக்கரண்டி வீதம் தேனில்  அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிட நாட்பட்ட  பசியின்மை நாருசியின்மை குமட்டல் வாந்தி வயிறு உப்பிசம் பொருமல்  மருந்தீடு (இடுமருந்து) காமாலை ரத்த சோகை வாய்வு பிடிப்பு அண்ட வாயு (விரைவாதம்)குடல் வாய்வு (ஹெர்னியா) என சகல வாய்வுகளும் தீரும். சளி இருமல் பீனிசம் சுவாசகாசம் (ஆஸ்துமா) மூக்கடைப்பு தொண்டையில் சதை அடைப்பு(டான்சில்) கபத்தினாலும் வாய்வினால் வரும் மூச்சுதிணறலுக்கு குணமளிக்கும் ஒர் அரு மருந்து.  💊 #மருந்து_02💊 முருங்கைக்கீரை 20 கிராம்.                                  பூண்டு     10 கிராம்.                                     மிளகு2கிராம்.  இவைகளை எல்லாம் அரைவேக்காடு வேகவ

உடனடி இட்லி மாவு ஆபத்து

 தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா? இதப் படிச்சா இனிமேல் யூஸ் பண்ணவே மாட்டிங்க!... #எச்சரிக்கைப்பதிவு..!!! உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு சிறந்த உணவு என கூறப்பட்டுள்ள ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான். இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது. ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்.... ◆ சுகாதாரமின்மை! முன்பெல்லாம் ஆட்டாங்கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்த பின் ஆட்டாங்கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின்புறத்தில் குப்பையாக தான் கிடைக்கிறது. ◆ காணாமல் போன ஆட்டாங்கல்! ஆட்டாங்கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் நம் வீட்டு ஆட்களுக்கு இருந்தது. ஆனால், கடைகளில் விற்

மூலம் குணமாக

 🇨🇭#மூலம்_நோய்_குணமாக 🇨🇭#வீட்டு_வைத்திய_குறிப்புகள்…❓ 💢பிரண்டை சூரணம்💢 உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீக்கும் பிரண்டைச் சத்துமாவு ❓தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம். ❓செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம். ★மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும். 🔴 இரத்த மூலம்  சூரணம் மூலத்திலிருந்து   இரத்தம்  வாருவது  ஒரு  வாரத்துகுள்   நின்று விடும்   பேதியையும்  கட்டுப்படுத்தி உடல்  வெப்பத்தையும்  தணிக்கும். 1. ஓமம்                       35 கிராம் 2. இந்துப்பு                   15 கிராம் 3. கடுக்காய் தோல்

ஜீவனே சிவன்

 "ஜீவசிவோஹம்"  அன்பு சகோதர, சகோதரிகளுக்கு, சூரியனாய், சூரியனால் பிறப்பெடுத்த சூச்சுமமே! கருமமதை கருத்துடனே கபலமேற்றுவீர், கருமமான வாயுவதை கபாலமேற்றுவீரே! காலமதை வெல்லலாம், காலனையும் உதைக்கலாம்! தூங்கும் போது ஒடுங்கும் மனமதை , தூங்காமல் ஒடுக்கியே, சீவனை சிவனாக உணர்வீர், உணர்வை பிரம்மமாக... சித்தம், புத்தி, மனம், அகங்காரம் என பிரம்மம் உன்னில், சுக்கிலமான, சுப்ரமணியனாக சுடர்விடட்டும்! சுக்கிலம் பிரம்மமாய் சூரியனால் சூலில் கூடி பிறப்பதுவே அடைந்திட்டாய், சூட்சுமத்தை நீ உணர்வாய் சுக்கிலத்தை போசித்தே... மனமடங்க, மனம் குருவாகும், மனம் பிறழ மனம் இயமனாகும். மனமதை நவதூவாரங்களினூடே நசியாமல், நாசியில் மனதைக்கட்டு, நலமதை உணர்ந்திடலாம்! நன்மையும், தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையால் ஆளப்படும்! நன்மையை நாடி , நன்மெய்யை நாடி, நடு நாடியை அடைந்திடுவாய்... நடுவை அடைந்த சீவன் , தன் நாட்டை அடைந்திடுமே! ஆம் தன் தா(ழ்)ய் நாட்டை அடைந்திடுமே... தாய்நாட்டை , அடைந்திட்டால் , தன் தாய், தந்தையை உணர்ந்திடலாம். அநாதையாய் திரிந்த மனம், நாதனை கண்டிட்டால், நாதனோடு நர்த்தனமே புரிந்திடுமே... நர்த்தனம் புரிந்து