Posts

Showing posts from January, 2022

4Life immunity

 ஐயா, 4 life என்ற நிறுவனத்தின் உணவு பொருட்கள் பசுவின் சீம்பாலிலிருந்தும், முட்டையின் மஞ்சள் கருவிலும் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட "Transfer factor molecules" ஆகும். இது மனித உடலில் உள்ள Transfer factor க்கு சமமான மூலக்கூறாகும். மனிதர்களின் உடல், நோயெதிர்ப்பாற்றலை பதிவு செய்து அதை தன்னுடைய சந்ததிகளுக்கு அதை பாலின் மூலம் கடத்தப்படும், பரிமாற்றம் செய்யப்படும் மகா நன்கொடை இந்த Transfer factor. இதை ஆராய்ச்சியின் மூலம் பிரித்தெடுத்து தன்னுடைய உணவு பொருட்களின் மூலம் நேரடி விற்பனை அடிப்படையில் இதை விற்பனை செய்கிறது 4Life நிறுவனம்.  இது மனிதர்களுக்கு அத்தியாவசியமான , அதி முக்கியமான மூலக்கூறுகளாகும். எல்லாவிதமான நோய்களை தீர்க்க அடிப்படை ஆதாரம் Transfer factor ஆகும்.  இதை நம்முடைய உறவினர்களுக்கும், சுற்றத்தாருக்கும் நாம் அறிமுகப்படுத்துவதன் மூலம் நல்லதொரு சேவையையும், வருமானத்தையும் பெற முடியும். இதை online மூலமாக உலகம் முழுவதற்க்கும் எல்லா தனிமனிதனும் செய்ய ஏதுவாக இந்நிறுவனம் சிறப்பான இணையதள ஏற்பாடுகளை செய்துள்ளது. இதை பயன்படுத்தி நாமும், நம் உற்றார் உறவினரும், சுற்றத்தாரும் இன்று நிலவு

முருங்கை உப்பு

 முருங்கை உப்பு மருத்துவகுணம் உள்ளது. முருங்கை இலையை 3 நாள் நிழலில் காயவைத்து பின்பு வெய்யிலில் காயவைத்து மண் சட்டியில் எரித்து சாம்பல் ஆக்கி இருமடங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனை தட்டில் ஊற்றி வெய்யிலில் காயவைக்க உப்பு கிடைக்கும். ஓர் அரிசி எடை உப்பை தேனில் கலந்து  உண்ண மூட்டுவலி குணமாகும், எலும்பு தேயுமானம் நீங்கும், செரிமானம் சீராகும், ஆண்மை குறைபாடு நீங்கும்,   கண் நோய் குணமாகும், உடல்வலி மற்றும் நரம்பு வலி நீங்கும்.

கால் ஆணி குணமாக

 காலில் ஆணி உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சையின்றி இயற்கை முறையில் அகற்ற அருமையான ஒரு வழி - தேவையான பொருட்கள் - 1 டீ ஸ்பூன் அளவுக்கு :- சிறிய வெங்காய பேஸ்ட், 1 டீ ஸ்பூன் அளவுக்கு :- 2 பெரிய பூண்டு பேஸ்ட், 1 டீ ஸ்பூன் அளவுக்கு :- இஞ்சி பேஸ்ட் மற்றும் 1 டீ ஸ்பூன் அளவுக்கு :-  மஞ்சள் பொடி இந்த 4 பொருட்களின் கலவையை ஒரு வெற்றிலையில் வைத்து 10 நிமிஷம் அழுத்தி பிடிக்கும் போது இந்த கலவையின் சாறு காலில் இருக்கும் ஆணியின் கடை வேருக்கு இறங்கும். அந்த வலி அளவுக்கு அதிகமாக இருக்கும். பொறுத்து கொண்டால் முழு ஆணியும் வெளியில் வந்து விடும். சில நேரங்களில் அந்த ஆணியுடன் சிறிது ரத்தமும் வர வாய்ப்புள்ளது. பயப்பட தேவையில்லை. ரத்தம் வந்தால் முழுவதும் வந்து விட்டது என அர்த்தம். ரத்தம் வரவில்லையென்றால், 1 வார இடைவெளியில் மீண்டும் ஒரு முறை இதே முறையை கடை பிடித்து பலன் பெறுங்கள். தகவல் - எஸ்.ஜெ.

குடல் எரிச்சல் குணமாக

 *குடல் எரிச்சல் குணமாக* 1) கடுக்காயுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட குடல் எரிச்சல் குணமாகும். 2) நெல்லிக்கனி – 50 கிராம்    மஞ்சள் – 50 கிராம்    படிகாரபற்பம் – 10 கிராம் மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் (2 கிராம்) வீதம் சாப்பிட்டு வர குடல் எரிச்சல் குணமாகும். 3)  மணத்தக்காளி – 50 கிராம்     சுண்டைக்காய் – 25 கிராம்     மஞ்சள் – 10 கிராம்  மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் (2 கிராம்) வீதம் காலை-மாலை இருவேளை சாப்பிட குடல் எரிச்சல் குணமாகும். 4)  அம்மான் பச்சரிசி இலையை சிறிது மஞ்சள் சேர்த்து, உப்புப்போடாமால் கடைந்து சாப்பிட குடல் எரிச்சல் தீரும். 5)  வெண்டைக்காயுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, உப்புப்போடாமால் கடைந்து சாப்பிட குடல் எரிச்சல் தீரும். *🍃*

படிகாரம் மருத்துவ பயன்கள்

 படிகாரத்தின் மருத்துவ பயன்கள் படிகாரபற்ப பற்பொடி   ஐம்பது கிராம் படிகாரத்தை பொடி செய்து இதை ஒரு மண் சட்டியில் போட்டு லேசான தீயில் கிளறிக் கொண்டு வரவேண்டும் படிகார பொடியானது சிறிது நேரத்தில் தண்ணீராக மாறிவிடும்.     மீண்டும் கிளறிக்கொண்டே வர படிகார தண்ணீர் சுண்டி படிகாரமானது சட்டியில் ஒட்டிக்கொள்ளும் மீண்டும் கிளறிக் கொண்டே வர படிகாரம் உதிரியாகிவிடும் இதை பொடி செய்து கொள்ள வேண்டும்   இந்த படிகார பொடியுடன் வறுத்து பொடி செய்த கொட்டைப்பாக்கு பொடியை சமமாக கலந்து வைத்து கொண்டு பல் துலக்கி வர வேண்டும் பயன்கள் காவி பற்கள் வெண்ணிறமாக மாறும் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும்  பற்களின் நரம்புகள் பலப்படும் லேசாக ஆடுகின்ற பற்கள் இதை பயன்படுத்தி வந்தால் ஆடாமல் உறுதிபெறும் பல் சம்பந்தமான நோய்கள் அனைத்திற்கும் தீர்வு உண்டாகும் மேலும் வாய் கொப்பளங்கள் வாய்ப்புண்கள் வராது  பல் வலி நீங்கிவிடும் ஈறுகளில் ரத்தம் வருவது நின்றுவிடும் வாய் துர்நாற்றம் நீங்கி வாய் நாக்கு பற்கள் அனைத்தும் சுத்தமாக இருக்கும்   2 பாதம் மற்றும் கண் பராமரிப்பில்     படிகாரத்தின் மருத்துவ பயன்கள்         மூன்று லிட்டர் தண்ணீரை லேசாக கொ

வயிற்றுப்புண் ஆற

 வயிற்று புண் ஆற மனிதனின் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது. தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இதனைத் தவிர்க்க காலை உணவை சரிவர உண்ண வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும். புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மதுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன. வயிற்று புண் அறிகுறிகள் வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும். வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள். வயிற்றுப் புண்ணிற்கு தமிழ் மருந்துகள் வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே வயிற்றுப் புண்ணை விரட்டலாம்.   வயிற்று புண் ஆற சுண்டை வற்றல் மருந்து வயிற்று புண் ஆற சுண்டை வற்றலை அதிகம் உணவில் சேர்த

இரத்த. அணுக்கள் பெருக

 🇨🇭#இரத்தத்தில்_ஹீமோகுளோபின் #அதிகரிக்க……❓❓❓❓ 💊#தேவையான_மூலப்பொருட்கள்❓ 1.உலர் அத்திப்பழம் – 1/4 கிலோ 2.உலர் கருப்பு பேரீச்சம்பழம் – 1/4 கிலோ 3.உலர்ந்த கருப்பு திராட்சை – 1/4 கிலோ 4.தேன் – 1/4 லிட்டர் 💊#செய்முறை❓ மேற்கூறிய பழங்களை உலர் பழங்களாக வாங்கி கொள்ளுங்கள் ✍🏿முடிந்த அளவு தரம் அதிகமான உலர் பழங்களை வாங்கி கொள்ளுங்கள் ✍🏿1/4 லி சுத்தமான தேனில் மேற் கூறிய அளவுள்ள பழங்களை பொடியாக நறுக்கி தேனில் ஊற வைக்கவும் ✍🏿சுமார் 7 நாட்கள் வரை ஊறியதும் சாப்பிட தொடங்கலாம் 💊#சாப்பிடும்_முறை❓ தினமும் இரவு 1 அல்லது 2 ஸ்பூன் அளவு நேரடியாக சாப்பிடவும் முடிந்தால் பால் குடித்தால் மிகவும் நல்லது  இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது ஆனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது ⭐#பலன்கள்❓ 1.ரத்தம் அதிகம் உற்பத்தி ஆகும் 2.ரத்த அணுக்கள் அதிகரிக்கும் 3.உடல் பலம் பெறும் 4.தேகம் நிறம் மாறும் 5.உடல் எடை கூடும் 6.உடல் சோர்வு நீங்கும் 7.தூக்கம் அதிகரிக்கும் 8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்

தேமல் குறைய

 இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் காணாமல் போகும் தெரியுமா?இதை முயன்று பாருங்கள்   தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்… ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனவே முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்க

கர்ப்பிணிகளுக்கான காபி

 🇨🇭#கர்ப்பிணிகளுக்கும்... #ஆரோக்கியமான_முறையில்… 🇨🇭#ஹெர்பல்_காபி_டீ_பால் #கொடுக்க_வேண்டுமா…❓❓❓ 💚 கர்ப்பிணிகள், தாய்மார்கள்,  1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஹெர்பல்  காபி, டீ, பால் கொடுக்க வேண்டுமா…❗ காபி, டீ குடிக்காமலே நம்மால் வாழ முடியும்.❗ அசத்தலான, புதுமையான சுவையில் ஆரோக்கிய டீ, காபி, பால் வகைகளை எப்படி செய்வது எனப் பார்க்கலாம். ⭕ 9 வகை ஆரோக்கிய         காபி, டீ மற்றும் பால்……❗❗❗ 💊 #இஞ்சி_டீ💊 ★தேவையானவை இஞ்சி – 2 துண்டு ஏலக்காய் – 1 பால் – கால் கப் பனஞ்சர்க்கரை – ஒரு டீஸ்பூன். ❓செய்முறை❓ இஞ்சி தோலை நீக்கவும். ஏலக்காயைத் தட்டி, இஞ்சியைத் தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிடவும். பாதியாக சுண்டியதும், வடிகட்ட வேண்டும். பால், பனஞ்சர்க்கரை கலந்து குடிக்கலாம் 👇பலன்கள்❓ செரிமானத்தை மேம்படுத்தும். வாயுவைப் போக்கும். 💊  #சோம்பு_தனியா_டீ 💊 👉 தேவையானவை தனியா, சோம்பு – தலா 50 கிராம் ஏலக்காய் – 1 கருப்பட்டி – 2 டீஸ்பூன் புதினா – 1 கைப்பிடி ❓ செய்முறை❓ தனியா, சோம்பை ஒன்றும் பாதியுமாக மிக்ஸியில் அரைக்கவும். இந்தப் பொடிதான் இந்த டீக்கு அடிப்படை. 2 டம்ளர் த

தலைக்கு எண்ணெய் காய்ச்சி முழுக

 🇨🇭#குழந்தை_இல்லாதவர்களுக்கு… 🇨🇭#அற்புத_எண்ணெய்_குளியல்❓❓❗ உடல் சூடு அதிகமாக இருப்பதே கருதரிக்காமைக்கு முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ...  நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு.  ✳#இது_தான்_எண்ணெய்_குளியல்  💊#தேவையான_பொருட்கள் ❓ 1. ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் 2. ஒரு டீஸ்பூன் சீரகம், 3.  கால் டீஸ்பூன் புழுங்கலரிசி  4.  இரண்டு பல் பூண்டு 💊#செய்முறை ❓ நல்லெண்ணெயில் , சீரகமும் ,  புழுங்கல் அரிசியும் , பூண்டையும் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும்.  ♒#குளிக்கும்_முறை ❓ இந்த காய்ச்சிய எண்ணெயை  தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும்.  🔰#கவனிக்க_வேண்ட

தொண்டை வலி நீங்க

 🇨🇭#கற்பூரவல்லி_இஞ்சி_டீ  💊#தொண்டை_வலிக்கு_குட்பை❗❗ கற்பூரவல்லி இலையை நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.  பின்பு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல், சேர்த்து கொதிக்க விடவும்.  நன்றாக கொதித்ததும் வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்தால் கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.  இது இருமல், சளி, தொண்டை வலியை குணப்படுத்தக் கூடியது.

நிலக்கடலை

 #இந்தியர்களை ஏமாற்றிய(ஏமாற்றும்) #அமெரிக்கா ! உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.   இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது.  மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.  எனவே அமெரிக்கா இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.  இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.  கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது.  இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும்.  என்று கருதியும்  இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான

காப்புக்கட்டு

 காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம் 1. ஆவாரம் பூ 2. பீளைப்பூ 3. வேப்பிலை 4. தும்பை செடி 5. நாயுறுவி செடி 6. தலைப்புள் என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும். ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள் தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும். மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள். மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். மேலும் பருவ நிலை மாற்றத்தால் நோய் தொற்று வராமல் இருக்க வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி பயன்படுத்தாத பழைய பொருட்களை எரிப்பார்கள்  காப்பு கட்டுவார்கள் இது போகி பண்டிகையாகும். 1)தைமாதம் மகர மாதம் தட்சிணாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பமாகும் காலம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்றம் வரும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும் . சூரியனின்

கரிசாலங்கண்ணி

 #கரிசலாங்கண்ணி-.                                     கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்;  வீக்கத்தைக் குறைக்கும்;  காமாலையை குணப்படுத்தும்;  உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்;  முடி வளர்ச்சியைத் தூண்டும். இதற்கு இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால், இரத்த சோகை, தோல்நோய்கள் போன்றவையும் கட்டுப்படும். கரிசாலை இலைகளை, கீரையாகத் தொடர்ந்து உபயோகித்து வர, கண் பார்வை தெளிவடையும். இராமலிங்க வள்ளலார், கரிசாலையை கற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார். கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும். வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள்,

கேன்சர் கூழ்

 துத்தி இலையை தினமும் உணவாக எடுத்துகொள்ளவும் . கருப்பு கவுனி அரிசி + காட்டுயாணம் அரிசி கலவையில் செய்த கூழ் மூன்று வேளை உணவாக இரண்டு மாதத்திற்கு தொடர்ந்து எடுக்க வேண்டும் . இரத்தம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு , எரியாமல் உடலில் புற்றாக தங்கி உள்ள செத்து போன செல்களை எரித்து , புதிய செல்களை உருவாக்கும். உணவு முறையில் பல நோய்களை தீர்க்கலாம்.

தாமிர உப்பு பஸ்பம்

 *"தாமிர உப்பு பஸ்பம்" அனுபவ முறையை வழங்கியவர் "குருஜி மதுரை முத்துராஜ் ஐயா"* ======================== *தேவையான பொருட்கள்* 1) சுத்தி செய்யாத காப்பர் சல்ஃபேட் என்கின்ற துருசு = 100 கிராம் 2) தேன் = 50 to 100 மில்லி 3) பசு நெய் = 50 to 100 மில்லி 4) ஆப்ப சோடா = 25 கிராம் *செய்முறை* காப்பர் சல்பேட்க்கு நெய் தேன் மற்றும் ஆப்ப சோடா   சிறிது சிறிதாக விட்டு புரோட்டா மாவு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வீட்டின் மாடியில் பதிக்கக் கூடிய தட்டோட்டை அடுப்பில் வைத்துக் கொள்ளவும் பின்பு இதில் இந்த மாவு கலவையை சிறிய சிறிய பொட்டு வடிவத்தில் வைக்கவும் இவை சிறிது நேரத்தில் நன்கு வெந்து பொடியாக மாறிவிடும். (மேல் ஓடு மூட வேண்டாம்) பின்பு இந்த வில்லைகளை கரண்டியின் உதவியால் எடுத்து பொடித்துக் கொள்ளவும். இந்த பஸ்பம் வாய் பிடிக்காத உத்தம பஸ்பமாக மாறிவிடும். *அளவு & அனுபானம்* சிட்டிகை அளவிற்கு எடுத்து தக்க அனுபானங்களில் *ஒரு வாரம் மட்டும்  தரவும்* பின்பு ஒரு இடைவெளி விட்டு தரவும். *மருந்து சாப்பிடும் நேரம்* *{காலை 11 மணிமுதல் 12 மணிக்குள் ஒரு வேளை மட்டும் சாப்பிடவும்.}* *தீரும் நோ

விழுதி இலை

 நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம் ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு    மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்   எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி   ஆச்சரியமாக இருக்கலாம்  ஆனால் இதுதான் உண்மை   இதற்குக் காரணம் யாதெனில்   பச்சையாக இருக்கின்ற விழுதி இலையை நன்றாக உமிழ்நீருடன் கலக்கும்படி மென்று அதன்பின் விழுங்கி வந்தால்    இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு   அதாவது வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே  நடைபெறுகின்றது   இந்த மாற்றத்தை ஒரே நாளில் முழுமையாக உணர்ந்து கொள்ள ம

குழந்தை வரம்

 குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புத நாட்டு மருந்து இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன். ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது. தாது விருத்தி

ஆஸ்துமா குணமாக

 #இரைப்பு (#ஆஸ்துமா) நோயாளிகள் செய்ய வேண்டியவை: ✅காலையில் எழுந்து பல் துலக்கிய உடன் இரண்டு டம்ளர் வெந்நீர் அருந்தலாம். ✅பால் கலக்காத டீ காபி அருந்தலாம். ✅பால் மற்றும் தயிர் போன்றவை உடலில் சளி ஏற்படுத்தக் கூடியவை.பலருக்கு பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினாலே, ஆஸ்துமா போய்விடுகிறது.   ✅மோர் குடிக்கலாம். இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து குடித்தால் சிறப்பு. ✅எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய புழுங்கல் அரிசி கஞ்சி, சிவப்பு அரிசி அவல், உப்புமா, மிளகு ரச சாதம் , இட்லி  சாப்பிடலாம். ✅கீரை, காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். ✅வாரம் ஒருமுறை குழம்பு மீன் /குழம்பு நண்டு சாப்பிடலாம். (வறுத்தவை கூடாது). ✅வாரத்தில் ஒருநாள் அகத்திக்கீரையை உணவில் சேர்த்து வருவதும், அன்றாட உணவில் சுண்டைக்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை சேர்த்துக்கொள்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ✅நுரையீரல் நோய்களுக்கு மிகச் சிறந்த அருமருந்து துளசி. `துளசி வாசத்தை முகர்தல், அப்படியே சாப்பிடுவது அல்லது கஷாயமாக்கிக் குடித்தல் ஆகியவை காசநோய் உண்டாகாமல் தடுப்பதுடன் நுரையீரல் பாதிப்புகளையும் குறைக்கிறது’ ✅துளசி

மூட்டு சவ்வு சரிசெய்ய

 அடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்! கேள்வி: கீழே விழுந்ததில் கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து விட்டது. என்ன மருந்து முயற்சி செய்யலாம். பதில்: நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.  எளிய முறை முயற்சி செய்து பாருங்கள். மூட்டு சவ்வு கிழிந்ததற்கான மருந்து . நாட்டு பாக்கு10, புளியங்கொட்டை 10,  இவை இரண்டையும் நன்றாக ஊற வைத்து தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலக்கி முட்டியில் பற்று போடவும்.  வெள்ளை துணியால் பற்று கீழே விழாமல் கட்டி துணியின் மீது நல்லெண்ணைய் சிறிது ஊற்றவும். அது காய்ந்த பின் மறுபடியும் எண்ணை ஊற்றவும். இப்படியே செய்து வந்தால் உடைந்த ஜவ்வு கூடும். 3 நாட்களுக்கு ஒரு முறை பழைய கட்டை பிரித்து விட்டு வென்னீரில் காலை கழுவிய பின் மீண்டும் பத்து போடவும். காலுக்கு ஓய்வு அவசியம். முட்டியை அசைப்பதை தவிர்க்கவும். நலம் வாழ,  ஈஸ்வரி.  ஹோமியோபதி மருத்துவத்தில் 30 ஆண்டுகள் அனுபவமுள்ளவர் கூறிய முறை கீழே குறிப்பிட்டுள்ளேன

கொண்டக்கடலை

 #கொண்டக்கடலை_சாப்பிடுவதால்_கிடைக்கும்_நன்மைகள்!!! கொண்டக்கடலையில்  ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற கொண்டக்கடலை தான். இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது  சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இங்கு ப்ரௌன் நிற கொண்டக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. #எடையைக்_குறைக்கும் :- ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம். #இதய_நோய் :- ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீச

சுக்கு பால்

 உடல் நோய்கள் முழுவதும் நீங்க       சுக்கை சாப்பிட்டால் போதுங்க நோயின்றி வாழ  சுக்கு பால் தயாரிக்கும் முறை சுக்கின் மேல் தோலை நீக்கி விட்டு பொடியாக செய்து இதை கால் லிட்டர் தண்ணீருடன் சேர்த்து பாதியாக சுண்ட காய்ச்சி     இந்த சுக்கு நீருடன்  பால் பாதி தண்ணீர் பாதியாக கலந்து காய்ச்சிய பசும்பாலில் நூறு மில்லி எடுத்து இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இதை காலை மாலை இருவேளையும் பருகி வர    வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கி கப நோய்களை சமநிலைப்படுத்தி உடலை நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் சுக்கை ஏதாவது ஒரு வகையில் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் இதன் மூலம் தலைநோய் சீதள நோய்கள் வாதகுடைச்சல் உடல் வலி  விலா எலும்பை பற்றிய வலிகள் வயிற்றுப்போக்கு மூக்கடைப்பு மூக்கில் நீர் ஒழுகுதல் அதாவது நீர் பீனிசம் நீர்க்கோவை உடலில் நீர் ஏற்றம் இது  போன்ற நோய்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வாய்வு பிடிப்பு கீல் மூட்டு வலிகள் வாத வலிகள் இவைகளை முழுவதும் நீக்கி மலச்சிக்கல் காதுவலி பல்வலி சுவாச கோளாறுகள் இவை அனைத்தையும் வெகு எளிதாக நீக்கும் ஒரு ஆற்றல் சுக்குக்கு அதிகம

புங்கம் பட்டை தீநிர் பக்கவாத தீர்வு

 புங்கம்பட்டை கசாயம்  பக்கவாதம் மற்றும் பக்கவாத நோய் பிரச்சினைகல்  ஆணுறுப்பு எழுச்சி இன்மை பிரச்சினை கருப்பை வீக்கம் பிரச்சினை தோள்பட்டை இறுக்க நோய்கள்   ஆகியவற்றிற்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம்  நரம்பு நோய்கள் குறிப்பாக பக்கவாதம் நோய்  மூளையில் இருந்து வரும் தகவல்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதி செயல் இழந்து விடுவதால் உடலுடைய இயக்கங்கள் குறைந்து விடுதல் அல்லது நின்று விடுதல்  முதுகுதண்டு அடிபடும்போதுஅடிபட்ட இடத்துக்குக் கீழே இருகக் கூடிய நரம்புகள் முற்றிலும் செயல் இழந்து போதல்  கடுமையான சர்க்கரை நோய் காரணாமாக ஏற்படும் கடுமையான தோள்பட்டை வலி தோள்பட்டை இறுக்க நோய்  இவை அனைத்தையும் நீக்கக் கூடிய குறைக்கக் கூடிய கசாயம் இது  புங்கம்பட்டை     .....................  மூன்று  கிராம்  சுத்தி செய்த கொடிவேலி  .....................  மூன்று  கிராம் நாவல் கொட்டை .....................  மூன்று  கிராம் திப்பிலி .....................  மூன்று  கிராம் கடுக்காய் .....................  மூன்று  கிராம் கருஞ்சீரகம் .....................  மூன்று  கிராம் ஆகிய ஆறு பொருட்களையும்  கொடுக்கப் பட்டுள்ள அள

மாதவிலக்கு வலி

 பெண். வயது 22. ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பெற்ற அம்மாவின் மருமகள் தான் இந்த பெண். மூன்று மாதங்களுக்கு முன்பு தன் மருமகளை அழைத்து வந்தார். அப்பெண்ணின் மிக பிரதானமான பிரச்சனை வலி மிகுந்த மாதவிடாய் (PAINFUL PERIODS). அவரின் வலியை பற்றி சொல்லும்போது அதை கேட்பவர்களாலேயே தாங்கமுடியாது, அப்படி ஒரு வலி. மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வலி தொடங்கி மாதவிடாயின் முதல்நாள் மற்றும் இரண்டாம்நாள் வரை சகிக்கவே முடியாத அளவுக்கு ஒரு வேதனையை அனுபவிப்பதாக கூறினார். உதிரப்போக்கு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று கேட்டேன். 4 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். உதிரப்போக்கன் அளவு பற்றி கேட்ட போது அது எப்போதும் நார்மலா தான் இருக்கும், மேலும் மாதவிலக்கும் சற்று தள்ளித்தான் போகிறது என்றார். தற்போது மாதவிடாயின் இரண்டாவது நாள், எப்படியாவது என் வலி நீங்க ஏதாவது செய்ங்க என்றார். பொதுவாக மாதவிடாய்க்கு முந்தைய கால கட்டத்தில் yang தன்மை உயரும். ஏற்கனவே கல்லீரல் சூடு உள்ள சிலருக்கு உதிரப்போக்கிற்கு முந்தைய நாட்களில் வயிற்று வலி ஏற்படும். மேலும் வலியில்லா உதிரப்போக்கு ஏற்பட வேண்டுமெனில் கல்லீரலின் Qi யின்

விந்து நஷ்டம் சரியாக

 விந்து நஷ்டம் ஏற்படுவதற்கான காரணங்களும் நிவர்த்தி செய்வதற்கான மருந்துகளும் இதயத்தின் பலம் குறைந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்        இதற்கு கொத்தமல்லி கீரையை அரைத்து சாறு பிழிந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தொடர்ந்து இதை குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்        இதனால் இதயத்தின் பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும் மூளையின் பலம் குறைந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்       இதற்கு வில்வ இலையை சிறிது தண்ணீர் சேர்த்து  அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சீரகமும் பனங்கற்கண்டும் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும்       இதனால் மூளையின் பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும் ஈரலின் பலம் குறைந்தால் விந்து  நஷ்டம் ஏற்படும்       இதற்கு ஓரிதழ் தாமரை கீழாநெல்லி விஷ்ணுகிரந்தி மூன்றையும் சம அளவாக சூரணம் செய்து வைத்துக்கொண்டு இதை பசும்பால் அல்லது தேனில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் பலம் பெறும்      இதனால் ஈரலின் பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும் சிறுநீரகத்தின் பலம் குறைந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்       இதற்கு அமுக்கிரா கிழங்கு பூனைக்காலி விதை பனங்கற்கண்டு மூன

ஒற்றைத்தலைவலி

 நோயும் மருந்தும் ஒற்றைத் தலைவலி குணமாக தும்பைப் பூவை பறித்து இருபது எடுத்துக்கொண்டு சாறு வரும்படி இதை நன்றாக கசக்கி எந்த பக்கம் தலை வலிக்கின்றதோ அதற்கு  மறுபுறம் இருக்கின்ற கண்ணில் இந்தச் சாற்றை மூன்று துளிகள் வீதம் விட்டு அதே பக்கம் இருக்கின்ற மூக்கு துவாரத்திலும் இதே சாற்றை மூன்று துளிகள் வீதம் விட்டு வர ஒற்றைத் தலைவலி குணமாகும்   பெருஞ்சீரகம் எனும் சோம்பு இதனோடு அதிமதுரம் சம அளவாக சேர்த்து பொடி செய்து இதில் மூன்று கிராம் பொடியை தேனில் குழைத்து தினமும் இருவேளை இருபது  நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தீராத ஒற்றை தலைவலி நோய் ஒரு மாத காலத்தில் நிரந்தரமாக குணமாகும் ஒற்றை தலைவலி தீர    குப்பைமேனி தைலம்   குப்பைமேனி சாறு நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து இதை தைலப் பதமாகக் காய்ச்சி வைத்து கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் தலைக்குத் தேய்த்து வெண்ணீர் வைத்து குளித்து வந்தால் தீராத ஒற்றை தலைவலி நிரந்தரமாக குணமாகும் ஒற்றைத் தலைவலி தீர     ஒரு எளிய வைத்தியம் எலுமிச்சை சாறு இஞ்சி சாறு இவை இரண்டையும் வகைக்கு 10 மில்லி அளவு எடுத்து 200 மில்லி சுடு நீரில் கலந்து குடித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகு