புங்கம் பட்டை தீநிர் பக்கவாத தீர்வு

 புங்கம்பட்டை கசாயம் 

பக்கவாதம் மற்றும் பக்கவாத நோய் பிரச்சினைகல்  ஆணுறுப்பு எழுச்சி இன்மை பிரச்சினை கருப்பை வீக்கம் பிரச்சினை தோள்பட்டை இறுக்க நோய்கள்   ஆகியவற்றிற்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம் 


நரம்பு நோய்கள் குறிப்பாக பக்கவாதம் நோய் 

மூளையில் இருந்து வரும் தகவல்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதி செயல் இழந்து விடுவதால் உடலுடைய இயக்கங்கள் குறைந்து விடுதல் அல்லது நின்று விடுதல் 

முதுகுதண்டு அடிபடும்போதுஅடிபட்ட இடத்துக்குக் கீழே இருகக் கூடிய நரம்புகள் முற்றிலும் செயல் இழந்து போதல் 

கடுமையான சர்க்கரை நோய் காரணாமாக ஏற்படும் கடுமையான தோள்பட்டை வலி தோள்பட்டை இறுக்க நோய் 

இவை அனைத்தையும் நீக்கக் கூடிய குறைக்கக் கூடிய கசாயம் இது 


புங்கம்பட்டை     .....................  மூன்று  கிராம் 

சுத்தி செய்த கொடிவேலி  .....................  மூன்று  கிராம்

நாவல் கொட்டை .....................  மூன்று  கிராம்

திப்பிலி .....................  மூன்று  கிராம்

கடுக்காய் .....................  மூன்று  கிராம்

கருஞ்சீரகம் .....................  மூன்று  கிராம்


ஆகிய ஆறு பொருட்களையும் 

கொடுக்கப் பட்டுள்ள அளவின்படி எடுத்து 

நானூறு மில்லி தண்ணீரில் போட்டு 

சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து

 நூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி 

ஒரு வேளை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் 


காலை ஒருவேளை இரவு ஒருவேளை என நாள்தோறும் இரண்டு வேளைகள் உணவுக்கு முப்ப்து நிமிடங்களுக்கு முன் குடித்து வர வேண்டும் 


இந்தக் கசாயம் மிக வேகமாக நரம்புகளையும் மூளை செயல்பாட்டையும் மாற்றக் கூடியது 


உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து நரம்புகளைப் பலப் படுத்தி நரம்பு நோய்களைக் குறைத்து பக்கவாத நோயின் தாக்கத்தை குறைத்து இறுக்கத்துடன் இருக்கும் தோள்பட்டை வலியை நீக்கி உடலின் இயக்கத்தை மேம்படுத்தக் கூடிய மருந்து இது 

பக்கவாதத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் கைகளில் ஏற்படும் பாதிப்பு கால்களில் ஏற்படும் பாதிப்பு நடக்க முடியாமல் சிரமப் படுவது நடக்கும்போது தள்ளாடுவது தலை சுற்றல் போன்றவை முக்கியமானவை 

இரத்த அழுத்தத்தால் ஏற்படும்   பக்கவாதம் இரத்த கட்டிகள் காரணமாக ஏற்படும்  பக்கவாதம் மூளையின் செயல் திறன் குறைபடுவதால் ஏற்படும் பக்கவாதம் சர்க்கரை நோயின் தீவிரத்தால் ஏற்படும் பக்கவாதம் காயங்களால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உண்டாகும் பக்கவாதம் 

உடலுடைய முழு இயக்கமோ அல்லது ஒரு பகுதி இயக்கமோ ஒரு கால் அல்லது ஒரு கை அல்லது விரல்களின் இயக்கமோ மிகுந்த அளவு பாதிப்படைகின்றன 

சில நேரங்களில்  கைகால்களின் இயக்கம் சரியாகிவிடும் ஆனால் பேச்சு வராமல் பாதிப்பு ஏற்படும் 

சில நேரங்களில் பேச்சு திரும்ப வந்துவிடும்  ஆனால் கைகால்களின் பாதிப்புகள் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடும் பலவீனம் அடைந்து விடும் 

இந்தப் பிரச்சனைகளை சரி செய்யும் மிக சிறந்த மருந்து இது 


பக்கவாதம்வந்து பல வருடங்கள் ஆனாலும் சரி இந்த கசாயத்தை தொடர்ந்து மூன்று முதல் ஆறுமாதங்கள் சாப்பிட்டு வர பக்கவாத பாதிப்புகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் 

இந்தக் கசாயம் பக்கவாத நோயின் தாக்கத்தைக் குறைத்து உடலுடைய இயக்கத்தின் பலவீனங்களை மாற்றி நோயால் பாதிக்கப் பட்டவர் அவருடைய வேலையை அவரே செய்துகொள்ளும் அளவுக்கு நல்ல மாற்றத்தை தரும் 

நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படும் 


தோள்பட்டை இறுக்கநோய்  


சர்க்கரை நோய் முபாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சினை இது 

கைகளை தூக்கமுடியவில்லை கைகளை பின்புறமாகக் கொண்டு போக முடியவில்லை சட்டை அணிய முடியவில்லை எந்த வேலையும் செய்ய முடியவில்லை அந்த அளவுக்கு உடல் பலவீனமாக இருக்கிறது என்ற நிலையில் இந்தப் பிரச்சனைகளை வேகமாக தீர்க்கக்கூடிய அருமருந்து இது 


ஆண்களுக்கு 

ஆண்களின் Erectile Disfunction என்ற எழுச்சியில் ஏற்படும் குறைபாடுகள் இது சம்பந்தப் பட்ட பாதிப்புகள் குறைத்து நிரந்தரமாக நீக்கிக் கொள்ள வேண்டும் என்றால் இந்தக் கசாயம் கைகொடுத்து உதவும் உடலுடைய ஆரோக்கியத்தை மேபடுத்தி உடலை பலபடுத்தி நரம்புகளைப் பலபடுத்தி எழுச்சி இன்மை பிரச்சினையை சரி செய்து உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 


பெண்களுக்கு 

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வீக்கம் என்ற அடிநோமையோசிஸ் பிரச்சினை மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் மிக அதி உதிரப் போக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதி உதிரப் போக்கு சில நேரங்களில் மாதக் கணக்கில் உதிரப் போக்கு ஏற்பட்டு கருப்பையை நீக்க வேண்டும் என்ற நிலை இவற்றைக் கூட நீக்கக் கூடிய சக்தி இந்தக் கசாயத்துக்கு உண்டு 

படிப்படியாக உடலில் இருக்கும் கழிவுகள் கருப்பையில் இருக்கும் கழிவுகள் நீங்கி கருப்பை வீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் நீங்கி அடிநோமையோசிஸ் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் நீங்கி குறைந்து அறுவை சிகிச்சை இல்லாமலேயே அதி உதிரப் போக்கு நோயும் குறைந்து கொண்டே வரும்  


குறிப்பு 

கொடிவேலியை சுத்தி செய்யும் முறை 

கொடிவேலியை ஒடித்து சுண்ணாம்பு நீரில் அல்லது நாட்டுமாட்டு பசுங்கோமியத்தில் பதினான்கு நாட்கள் ஊற வைத்து எடுக்கக வேண்டும்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி