Posts

Showing posts from October, 2021

நீர் கட்டி மறைய

 🇨🇭#நீர்_கட்டிகள்_மறைந்து  #கரு_உருவாக……❓❓❓❗❗❗ 💊அரசு கொழுந்து  💊மிளகு   💊துளசி  💊சிரகம்  💊மலை வேப்பிலை  சமஅளவு சேர்த்து அரைத்தது…… #வீட்டு_விலக்கு இரண்டு  முன்று நான்கு ஆகிய முன்று நாட்கள் தலைக்கு குளித்து விட்டு வந்தஉடன் சாப்பிட்டுவர முன்று மாதங்களில் நீர் கட்டிகள் மறைந்து கரு உருவாகும்.

பாகற்காய்

 பாகற்காயின் மருத்துவ குணங்கள் நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். 1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். 2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. 3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். 4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும். 5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு

மூலம்

 மூல நோய் வருவதற்கான காரணமும்  வந்த நோய் தீருவதற்கான வைத்தியமும்   அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால் எப்போதும் உடலில் வெப்பம் அதிகரித்து இருந்தால் எளிதாக மூல நோய் வந்துவிடும்  வயிற்றுப் பொருமல் மற்றும் அடிக்கடி தலை வலி ஏற்பட்டாலும் வாயில் துர்நாற்றம் வந்து விட்டாலும் வியர்வையில் அதிக நாற்றம் வீசினாலும் மூல நோய் வருவதற்கான அறிகுறிகளாகும்  பசி உணர்ச்சி இல்லாமல் இருந்தால் ஆட்டுப்புழுக்கை போல் இறுகி வறட்சியாக மலம் வெளியானால்  வரமூலம் வந்து விட்டது  என புரிந்து கொள்ள வேண்டும் மூலநோயை உடலில் ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்   அதிகாலை எழுந்ததும் சுடவைத்து ஆறிய இதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை முந்நூறு மில்லிக்கு குறையாமல் குடித்துவந்தால் மலஜலம் எளிதாக கழியும்  உடலின் வெப்பம் நீங்கும் மலச்சிக்கல் விலகி மூல நோய் வராமல்  நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு எளிய வழிமுறை இதுவாகும்   மூல நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் காலையில் குடிக்கும் வெந்நீருடன் இரண்டு கிராம் கடுக்காய் பொடியை கலந்து குடித்து வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் மூல நோய் வெகு எளிதாக குணமாகும்  

காய்ச்சல் குணமாக

 🇨🇭#காய்ச்சல்_குணமாக_சில……❗❗   🇨🇭#நம்ம_வீட்டு_வைத்தியம்❓ 💊மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். 💊சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண

முடக்கத்தான் சூப்

 🇨🇭#கழுத்துவலி_பிடரிவலி_முதுகுவலி #குணமாக……❓❓ 🇨🇭#வாய்வுதொல்லை_நீங்க……❓❓❓ #முடக்கத்தான்_கீரை_சூப் 💊#தேவையானவை❓ வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப்,  முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு  2 பற்கள் சின்ன வெங்காயம், தக்காளி 1 மிளகுத்தூள்,சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு வெண்ணெய்  ஒரு டீஸ்பூன்.   💊#செய்முறை❓ கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். ⭐#பயன்கள்❓ வயிற்றுபொருமல்,  தொப்பை, வயிற்றுப்புழு,  மசக்கை,  பசி,  ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும்.  குடல் புழுக்கள் அழியும்.  வாய்வுப் பிடிப்பு,  இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும்.  கை, கால், கழுத்து பிடரி வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.  முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

முதுகு முடக்கு வாதம்

 🇨🇭#முதுகெலும்பு_முடக்கு_வாதம் #எனும்……… 🇨🇭#தனுர்வாதம்_பற்றி #தெரிந்துகொள்ளுங்கள்……❗❗❗ ♐ #அதற்கான_மருத்துவமும்……❗❓ 👉 முதுகு தண்டு ஜவ்வு விலகலை  ஆங்கிலத்தில் #டிஸ்க்_ப்ரோலாப்ஸ்  (அ)  #ஸ்போன்டிலோலிஸ்தேசிஸ் என்று சொல்லுவார்கள்.  👉 33 எலும்புகள் கூடிய பகுதியை தான் முதுகு தண்டு என அறிகின்றோம். 🉐 ஜவ்வு விலகக் கூடிய பொதுவான இடங்கள் ❓ 👉CERVICAL (செர்விகல் ) எனும் கழுத்து பகுதி 👉 தொரசிக் (தொராசிக் ) எனும் நெஞ்சுக் கூட்டுப்  பகுதி 👉 LUMBAR (லம்பார்) எனும் கீழ் முதுகு (அ) இடுப்புப் பகுதி. ஆரம்பிக்கும் இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற #Disc எனப்படும் தட்டுப்போன்ற #Shock_Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி  Disc -  சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது. முதுகெலும்பில் உள்ள மூட்டுகள்  ஒன்றோடு#இணைந்து_இறுகிப் #போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது.  முதலில் முதுகுவலியில் தொடங்கும்.  கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும்.  அதோடு கால்களின் மூட்டு

நாட்டுப்புற மருத்துவம்

 #கைகண்ட_அனுபவ_மருத்துவம்! ‎ நாட்டு மருந்து கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.- கைகண்ட [அனுபவ] மருத்துவம் !! நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத். அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை." சில எளிய மருத்துவம்: !!! வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ண

கல்யாண முருங்கை

 கல்யாண முருங்கை மிக பழமை வாய்ந்த மரம்.  முன் காலத்தில் வீடுகளில் வளர்க்க பட்டன. மருத்துவ குணம் கொண்ட மரம், சிலர் அழகுக்காகவும் வளர்க்கின்றனர். இது பெரிய மரமாகவும் வளரும். மழை காலங்களில் இதனை குச்சிகளை வெட்டி நட்டால் எளிதாக துளிர்த்துவிடும். கல்யாண முருங்கை வறட்சி தாங்கி வளரும் மரங்களில் ஒன்று. தண்ணீர் தேவை அதிகம் தேவைப்படாத மர வகை, இதனால் சில இடங்களில் சாலை ஓரங்களில் காணலாம். இளவேனிற்காலத்தில் கல்யாண முருங்கையில் பூக்கள் தோன்றும். கவர்ச்சியான சிகப்பு நிற மலர்கள் தோன்றும். பறவைகள் தங்குவதற்கு விரும்பும் மரங்களில் இதுவும் ஒன்று. இதன் இலைகள் முயல்களுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது. சில இடங்களில் சில நேரங்களில் பட்டு புழுக்களுக்கு கூட இதன் இலைகளை உணவாக பயன்படுத்துகின்றனர்.  கல்யாண முருங்கை இலையை இளம் கன்றுக்குட்டிகளுக்கு கொடுப்பதால் குடல் புழு பிரச்சனை நீங்கி திடமாக வளர ஆரம்பிக்கும். முயல் வளர்ப்போர், இதன் இலைகளை முயலுக்கு உணவாக கொடுத்தால் குடல் புழுக்கள் தானாகவே வெளியேறும். கல்யாண முருங்கை மரம் எளிதான எடையுடன் அதே சமயம் உறுதியாகவும் இருப்பதால், அக்காலங்களில் கடலில் கட்டுமரம் மாக பயன்படுத்

பயனுள்ள தகவல்கள்

 🇨🇭#அருமையான_தகவலை_அறிந்து #கொள்வோம்....❓❓❗❗❗ 1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும். 2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும். 3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி 4). பளபள மேனிக்கு பப்பாளி 5). வெந்து கெட்டது முருங்கை – வேகாமல் கெட்டது அகத்தி. 6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும் குமரி, நெல்லி. 7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால் 8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள் 9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால் 10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ 11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை 12). சமைத்த உணவு தவறான உணவு 13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும். 14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும். 15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும். 16). பசிக்காத உணவு குப்பை உணவே. 17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே. 18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே 19). வசம்பு நமது மூலிகைத்தாய் – கடுக்காய் நமது இரண்டாவது தாய். 20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும். 21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது. 22). அசையாத பருமன் உடலும் நெல்லியால்

மாதவிடாய் வலி தீர

 பெண்களுக்கு மாதவிடாய் வலி நீங்க  உதவும் மூலிகை வைத்தியம் தேவையான பொருள் சப்போட்டா காய் (சிறியது ) 1 சீரகம் 5 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு கிராம்பு 5 எண்ணம் ஏலக்காய் 1 செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சப்போட்டா காய் (சிறியது ),சீரகம்,கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்றாக இடிக்க வேண்டும். இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான மாதவிடாய் வலி முற்றிலும் நீங்கும்.

கருநொச்சியிலை

 #புற்றுநோய்க்கு_கருநொச்சி_மூலிகை  கருநொச்சியானது, நொச்சி செடியைப் போல் தோற்றம் கொண்டிருந்தாலும், இலை, தண்டு, பூ இவை கருப்பு நிறமாகவே இருக்கும். இது நீர் நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் வளரக் கூடிய ஒரு வகை புதர்ச் செடியாகும். 3 முதல் 5 கூட்டு இலைகளை உடையது. இது ஓர் அரிய வகை முலிகை ஆகும். கருநொச்சியின் ஒரு கிலோ பல ஆயிரகணக்கில் விலை போகிறது ஒரு சிறிய செடியின் விலை 500லிருந்து ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையிலும் சில சந்தையில் அல்லது மூலிகை பண்ணையில் விற்பனையாகிறது. இருந்தாலும் இப்போது இந்த மூலிகை செடிகள் கிடைப்பது கடினம் ஒருவேளை கிடைத்தால் வாங்கிவந்து உங்க வீட்டு தோட்டத்தில் வையுங்கள் இது உயிர் காக்கும் மருதத்துவ மூலிகை வெண்ணொச்சிக் குச்சிகள் வேலி பின்னவும், கூடை பின்னவும் பயன்படுகிறது. கருநொச்சி இலையை மாடுகள் மேயும். ஆனால் வெண்ணொச்சியை ஆடுகள் ஒன்றிரண்டு முறைதான் கடிக்கும். கருநொச்சி இலையின் காட்டமான மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானிய பாதுகாப்புக்குக் கருநொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் கருநொச்சியைப் பயன்படுத்துகின்றனர்.

நெல்லிச்சாறு

 நெல்லிக்காயின் மகத்துவம்    பச்சை நெல்லிக்காயை இடித்து பத்து மில்லிக்கு குறையாமல் சாறு பிழிந்து இதனோடு இதில் பாதி அளவு  எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து எலுமிச்சை சாற்றின் அளவில் பாதியளவு தேன் கலந்து இதை தினந்தோறும் காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் எந்த வைத்திய முறைக்கும் கட்டுப்படாத நாட்பட்ட சர்க்கரை நோயானது வெகு எளிதாக கட்டுப்படும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த நெல்லிக்காய் சாற்றினை பருகி வர சர்க்கரையின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும்      நெல்லிக்காய் சாற்றினை பருகி வருவதால் கிடைக்கின்ற பயன்கள் உடல் வெட்டைச்சூடு தணியும்  நல்ல ரத்தம் உற்பத்தியாகும்  விந்து ஸ்கலிதம் குணமாகும்  விந்து உற்பத்தி அதிகரிக்கும்  பார்வைத் திறன் உண்டாகும் மனதில் ஏற்படும் பயம் விலகும் மனோதிடம் ஏற்படும் உடல் வறட்சியை நீக்கி உடல் வெப்பத்தை தணிக்கும் அதிக தாகம் குணமாகும் பித்த வாந்தி மற்றும் ரத்த வாந்தி நிவர்த்தியாகும் தலை மயக்கம் நீங்கும் நுரையீரலுக்கு வலிமை ஏற்படும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலம் பெறும் ரத்தம் சுத்தமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் ச

திருநீற்றுப்பச்சை

 #திருநீற்றுபச்சிலை இது துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு தெய்வீக மூலிகை. மாந்திரீகத்தில் இதன் இலைகள் பூஜை அலங்கார வேலைகளுக்கு பயன் படுகிறது, வேர் தெய்வ வசிய வேலைகளுக்கு பயன்படுகிறது. வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை தேடி தேனீக்கள் ஓடிவரும். இதில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள இந்த திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இந்த மூலிகை பல நோய்களுக்கும் தீர்வு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். இதன் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி வியர்வையை அகற்றும் செய்கை உடையது. இதன் விதை வழுவழப்புத் தன்மையோடு உடலிலுள்ள வெப்பத்த

எலும்பு பலம்

 🇨🇭#எலும்பை_பலப்படுத்த_வேண்டும்  #என்றால்……❓ 🇨🇭#முதலில்_நாம்_சதையை #பலப்படுத்த_வேண்டும்……❗❓❓❓❓ 🉐👉 எலும்பு ஆரோக்கியம் சதை வலிமையில் இருக்கிறது…❓ உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோளாகவும் இருப்பது எலும்புத் கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன.  இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அமைந்துள்ளன. எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.  நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில்  தான் சேமித்து வைக்கப்படுகின்றன.  இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும். மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன.  இவை 12 ஜோடியாக ஒரு கூடுபோல் காட்சியளிக்கும்.   இவைகள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கிறது. சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும்.  பின் குழந்தை வளரும் போது படிப்படியா

PCOS

 🇨🇭#பெண்களின்_சினைப்பை #நீர்கட்டி_என்பது……… #நோயல்ல_குறைபாடு_தான்…❗❓ 🚺➡ சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது.  🔯 பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்❓ ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் ஆனவுடன் தாய்மை அடைவதற்காக  காத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் விரைவில் கர்ப்பம் ஆகிறார்கள்.  சில பெண்கள் கர்ப்பமாவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் அது அவளின்  மனநிலையை வெகுவாக பாதிக்கும். இதற்கு மிக முக்கியமான காரணம் கருமுட்டை குறைபாடு. இந்தக் கருமுட்டை வளர்ச்சி அடைய  நாம் என்ன செய்ய வேண்டும❓  ⭕ குழந்தைபேறை தடுக்கும் சினைப்பை நீர்கட்டி (OVRIAN CYST) 👉 குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது. சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இர