Posts

Showing posts from April, 2021

இதய பலம்

 மூன்று உணவு பொருட்கள் முந்நூறு பலன்கள் !!!! (இதயம்-கல்லீரல் - நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!!! ) (1)சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம்...... பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்... ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன..... இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது.. இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது...... தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது... இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது...... ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வரா

முருங்கை பொடி

 🌿 *NATURAL PLUS MORINGA POWDER* 🌿 💚முருங்கை இலை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு மூலிகை பொடியாகும்..... 💚இது பிரபலமடைய காரணம் இதிலுள்ள ஏராளமான சத்துக்கள்... 💚இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது.. 💚இது சர்க்கரை நோய், இருதய நோய், தோல் நோய், ஜீரண கோளாறுகள், இது போன்ற நோய்களுக்கு சிறந்தது... 💚முருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் உண்டாகும் அற்புதமான பலன்கள்... 💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️ 1. *பல ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கியது...* 🌿முருங்கையில் அதிக அளவு விட்டமின் மினரல் மற்றும் அமினோ ஆசிட்கள் உள்ளன.  இதில் போதுமான அளவு விட்டமின்களான A,C,E உள்ளது. மேலும் கால்சியம்  பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் அடங்கியுள்ளது. 2. *உடல் செல்களைப் பாதுகாக்கின்றது...* 🌿முருங்கை இலை பொடியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் செல்களில் ஏற்படும் சேதம் மற்றும் வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன .உடலிலுள்ள உயிரணுக்கள் சேதம் அடைவதை தடுக்கவும் உதவுகிறது.... 3. *முருங்கை இலை பொடி...*  🌿பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகி

குடம் புளி

 உடல் எடையைக் குறைத்து, வியக்க வைக்கும் பலன்கள் தரும் குடம்புளி !! புளி இல்லாமல் தென்னிந்திய வீடுகளில், உணவகங்களில் சமையலே இல்லை என நமது உணவுப்பழக்கங்களில் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும், புளியின் பயன்பாடுகளுக்கு முந்தைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் இல்லங்களின் சமையலில் குடம் புளி தான் இடம்பெற்றிருந்தது, என்பது வியப்பாக இருக்கும். நாம் இக்காலத்தில் பயன்படுத்தும் புளியைவிட அதிக அளவு பலன்கள் தரும், குடம்புளி, நம் பயன்பாட்டில் இருந்து விலகியது, மலைப்பகுதிகளில் மட்டுமே விளைந்து, பரவலாக வேறெங்கும் கிடைக்காத அதன் உற்பத்தியால் இருக்கலாம். ஆயினும் பழமையை விரைவில் கைவிடாத, பழமையை இயன்ற வரையில் அன்றாட வாழ்வில் செலுத்து வாழும் தன்மைகொண்ட கேரள மக்கள், இன்றும் அதிக அளவில் குடம் புளியை, அன்றாட உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.குடம் புளியில் அவர்கள் செய்யும் சைவ வகைக் குழம்புகள் மற்றும் உணவுகள் அவற்றின் அதீத சுவையாலும், கமகமக்கும் வாசனையாலும், கேரளத்தில் தனிச்சிறப்புமிக்கதாகும். கார்சீனியா கம்போஜியா எனும் தாவரவியல் பெயர்கொண்டு, ஆங்கிலத்தில் மலபார் டாமரின்ட் எனும் பெயரில் அழைக்கப்படும், க

கண்- கல்லீரல் பாதுகாப்பு

 கண்ணாடி அனிவது தீர்வாகுமா?  நமது கண் நேரடியாக மூலையோடு இணைக்கப்பட்டுள்ளது அதனால்தான் தலையில் அடிபடும்போதெல்லாம் கண்கள் இருள்கின்றது மேலும் கண்களை கட்டுப்படுத்தும் உறுப்பாக கல்லீரல் திகழ்கின்றது , கல்லீரலில் மஞ்சள்காமாலை வந்தால் கண்பார்வையும் பாதிக்கப்படும் காரணமும் இதுதான்  மேலும் மது அறுந்தியவரின் கல்லீரல் பாதிக்கபடுவதால்தான் கண்களும் சேர்ந்து பாதிக்கபடுகின்றது  இந்த நில்லையில் கண் மருத்துவர்களிடம் பார்வை பிரச்சனைக்காக செல்கின்றீர்கள் அவரும் முதலில் பவர்குறைந்த கண்ணாடியை உங்களுக்கு பரிந்துரைப்பார் இறுதியாக உங்களது நிலை எண்ண ஆகும்?  தடிமணான சோடாபுட்டி கண்ணாடியை அதாவது அதிக பவருடைய கண்ணாடியை நீங்கள் அனியவேண்டிய நிலை வருகின்றதே இது குறித்து நீங்கள் சிந்திப்பதே இல்லையே?  காரணம் கண்டாக்ட்டா் கண்ணை மட்டுமே ஆராய்ந்ததால் வந்த விணை இது சுறுங்க சொன்னால் நீங்கள் அனியும் பவர் கிளாஸ் உங்களது பார்வை திறனை படிப்படியாக பாழாக்கிவிடும் , என்னதான்  தீர்வு?  கல்லீரலை பலப்படுத்த.வேண்டும் அதை பலமாக்கும் உணவுகளை உண்ண வேண்டும் , நன்றாக ஆழ்ந்த இரவுத்தூக்கம் மிகவும் அவசியமானது இது கண்ணின் பார்வை திறனை வெகுவா

No Ice water

 ஐஸ்தண்ணீர் குடிப்பதால் உடலில்ஏற்படும் பாதிப்புகள்: கோடைக் காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்துப் பருகுவோம். இது வெயிலில் இருந்து தற்காலிகமாக நல்ல நிவாரணத்தைத் தரலாம்.   இப்படியே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பருகினால், அதனால் உடலினுள் பல பிரச்சனைகள் தான் ஏற்படும். பின் நாள்பட்ட உடல் உபாதைகளால் மிகுந்த அவஸ்தைக் குள்ளாகக் கூடும். வாருங்கள், இங்கு ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். * ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும். * நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை

 🇨🇭#வெறும்_வயிற்றில்_கட்டாயம் #சாப்பிடக்கூடாத…… 🔯#உணவுப்_பொருட்கள்❓❓❗❗ 1) #சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2) #தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். 3) #ஆங்கில_மாத்திரைகள் எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். 4) #ஆல்கஹால் பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த

சப்போட்டா பழம்

 சப்போட்டாவின் பயன்கள்.: சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மருத்துவம் குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். *சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும். *சப்போட்டா கூழுடன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். *சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும். *பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்துக்கு உண்டு. சப்போட்டா பழத்தை சாப்பிட்ட பிறகு, ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்துக்கு இது நல்ல மருந்து. *சப்போட்டா கூழுடன் சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்து நன்றாகக் காய்ச்சிக் குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். *ஆரம்ப நிலை காச நோய் உள்ளவர்கள் சப்போட்டாப்பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரம் பழ

வாதநாராயணன்

 முடக்குவாத நோய்களை தீர்க்கும் வாதநாராயணன் இலை: வாதநாராயணன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னென்ன என்பதை ஒன்று ஒன்றாக கீழே பார்க்கலாம். 𒆜முடக்குவாத நோய்களை தீர்க்க அந்த காலத்தில் கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை தான் பயன்படுத்திவந்தார்கள். வாதநாராயணன் இது மென்மையான கட்டைகளை கொண்ட மரம். மேலும் வாதநாராயணன் மரத்தில் காய்களும், அந்த காய்களில் 10 விதைகளும் இருக்கும். 𒆜வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இதனை குறிப்பிடுவார்கள், சில கிராமங்களில் சாலையோரம் மற்றும் வேலிகளில் வளர்க்கப்படும். இதன், இலை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் மிகுந்தவை. 𒆜வீக்கம், கட்டிகள் குணமாக வாதநாராயணன் இலையைச் சமைத்து சாப்பிடுவார்கள், மேலும் வாரத்திற்கு இருமுறை இந்த கீரையுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, கட்டிகள் மேல் ஒற்றடமிட்டால் கட்டியின் வீக்கம் குறையும். 𒆜வாதநாராயணன் இலைச் சாறு கை, கால் வலி குணமாக நல்ல மருந்து. இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் கை, கால் வலி குணமாகும். 𒆜வாதநாராயணன் இலையை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்தால் குடல் பிரச்சனைகள் தீரும். மேலும் பக்கவாதம், உடல் வலி போன

முருங்கை பூ

 #முருங்கைபூவின்_மகத்துவம்...!!!! முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது.  * குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது.  இப்படிப் பட்ட முருங்கைப் பூவில் என்ன நலன்கள் இருக்கின்றது என்பதைப் காணலாம்… * முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். * உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். *  அதிகமான பித்தத்தை போக்கும்.  * இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.  * கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும்.  * இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். * 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடி

முந்திரி பழம்

 #முந்திரிபழம் ------------------------------- எந்த வைரஸையும், கிரிமிகளையும் அழிக்கும் இறைவன் தந்த அற்புதமான கோடைகாலத்தில் கிடைக்கும் முந்திரி பழங்கள்.  இதை துண்டு போட்டு உப்பில் நன்கு கலந்து வெயிலில் அரை நாள் வைத்து எடுத்து சாப்பிடுங்கள். அதன் நன்மைகளை கீழே தருகிறேன். வீணாக மரத்திலிருந்து விழந்து அழுகி அழிந்து போக வைக்கும் இந்த. பழம் எவ்வளவு பெரிய உயிர் காக்கும் மருத்துவ குணமுடையது பாருங்கள்.  முந்திரி மரமுள்ளவர்கள் பழத்தை அனைவருக்கும் கொடுத்து உதவுங்கள்..... #நுரையீரல் செயல்பாட்டினை சீராக்க இப்பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன. இப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.  #இதயநலத்தைகாக்க இப்பழமானது இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது. இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த

பல் பாதுகாப்பு

 😀😀😀😀😀 பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு!🍀🍀🍀🍀🍀   சொத்தை பற்கள் சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும். கூர்மையான பொருட்கள்🌳🌳🌳🌳 பல் இடைவெளிகளில் உணவுத் துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல் குத்தினாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும்போது இந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய் நாற்றம் ஏற்படும். பல் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். 'பயோரியா' என்று இதற்குப் பெயர். பற்களிலிருந்து பாக்டீரியா இதயத்துக்குப் பரவினால், இதய வால்வில் பிரச்சினை வரும் என்பது உண்மைதான். பற்கள் மற்றும் ஈறுளைப் பாதுகாக்க.... பற்சுத்தம் மிக முக்கியம். 🍀🍀🍀🍀🍀 காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செ

தித்த் தத்தத் தித்தத் திதி

 திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே! திதத்தத் தத்தித்த = "திதத்த தத்தித்த" என்னும் தாளம் போட்டு திதி தாதை = நடனம் செய்யும் தந்தை சிவபெருமானும் தாத = மறைக் கிழவனாகிய பிரம்ம தேவனும் துத்தி = புள்ளி வைத்திருக்கும் (படம் எடுக்கும்) தத்தி = பாம்பு (ஆதி சேடன்) தா தி = அந்த இடத்தில், நிலையாக இருந்து தத்து = தளும்புகின்ற அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்) ததி = தயிர் (ஆயர்ப்பாடியின் தயிர்) தித்தித்ததே = தித்திப்பா இருக்கு-ன்னு து = உண்டானே வாரி வாரி (அந்த அழகிய கண்ணன்!) துதித்து = இவர்கள் எல்லாம் போற்றும் இதத்து ஆதி = இதம் தருவதில் ஆதியே! அன்பர் இதத்தாதீ! தத்தத்து = தந்தம் உடைய அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட தத்தை = கிளி போல் கொஞ்சும் தெய்வயானைக்கு தாத = தாசனே! தேவானை தாசனே முருகா! தீதே துதை தாது = தீமை நிறைந்த இரத்தமும் மாமிசமும் அதத்து உதி = மரணமும் பிறப்பும் தத்து அத்து = ஆபத்தும்

உசில இலைகஞ்சி

 *         இனி வைத்தியரிடம் போகாதீங்க                    அனைத்து நோயும் நீங்க              இந்த வைத்தியமே போதுங்க தேவையான பொருள்கள்                                       அதிமதுரம் 50 கிராம்                                               சோம்பு 50 கிராம்               சித்திரமூல வேர்பட்டை 25 கிராம்                                 சீனி சர்க்கரை 50 கிராம் செய்முறை அதிமதுரத்தின் மேலே இருக்கும் மெல்லிய தோலினை சீவி இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும் சித்திர போல வேர்ப்பட்டையை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும் சோம்பை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் சீனி சர்க்கரையை நன்றாக சல்லடையில் சலித்து தூளாக செய்து கொள்ள வேண்டும் இவை அனைத்தையும் அளவுகளின்படி ஒன்று சேர்த்தால் இதுவே அனைத்து நோய்களையும் நீக்கும் ஆரோக்கிய சூரணமாகும் சாப்பிடும் முறை சித்திரை மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த மருந்தை உண்ண தொடக்க வேண்டும் தொடர்ந்து மூன்று மாதங்கள் மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் பாலுடன் கலந்து பருகி வர உடலிலுள்ள நோய்கள் அனைத்தும்

உண்ணா நோன்பு

 🇨🇭 #உலகில்_மிகச்சிறந்த_மருந்துவர்  #உங்கள்_உடல்…❗❗ 🔯 #உலகில்_மிகச்சிறந்த_மருத்துவம்  #உண்ணா_நோன்பு❗❗❓❓❓ ❓❓பெரும்பாலான வியாதிகள் நம்மை நெருங்காமல் இருக்க செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள்...❓❓❓ 👉வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். நமது உடலை இயக்கும் "உயிர்சக்தி" மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும். ⭕ இது தான் அந்த மூன்று சக்தி……❗❓ ➡ செரிமான சக்தி ▶ இயக்க சக்தி ▶ நோய் எதிர்ப்பு சக்தி இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம். 👉காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா❓  பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா❓ முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும். மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியு

வெண்டக்காய் ஊறவைத்த நீர்

 வெண்டைக்காய் நீர்....... எலும்புகளை வலுவாக்க 8 மணி நேரம் ஊற வைத்து தினமும் காலையில் இதுல ஒரு கப் போதும்..... வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது !!!  வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது..... முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள்..... பின்னர் அதனை நீள வாக்கி வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்......  குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை  கொண்டிருக்கிறது தெரியுமா? இது நம் எலும்புகளை வலுவாக்கும்.  இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.  எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும்.  எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம். கரையக்கூடிய ஃபைபர்களால் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல மலச்சிக்க

ஈரலில் கொழுப்பின் அளவு குறைய

 ஈரல் கொழுப்பு  ( Fatty Liver ) குறைய கசாயம்  மது போன்ற போதைப் பழக்கங்கள் உள்ளவர்ளுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த கல்லீரல் கொழுப்பு படிமானம்  இப்போது முறையான வாழ்வியலைக் கடைப்பிடித்து வருபவர்களுக்கும் கொழுப்பு படிந்த ஈரல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது  இதற்கு உணவுப் பழக்க மாறுபாடுகள் உடற்பயிற்சி இன்மை சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருக்காமை போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற பல காரணிகள் கூறப் படுகின்றன   ஈரலில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் எளிய வீட்டு மருந்து இது  பசி இன்மை சீரணம் இன்மை ருசி இன்மை மலச்சிக்கல் போக்கும் அருமருந்து  கசாயமாக  வறுத்த துவரம்பருப்பு ............ மூன்று கிராம்  கறிவேப்பிலை தூள் ...மூன்று கிராம்  சுக்கு தூள் ................ மூன்று கிராம்  ஆகிய மூன்று பொருட்களையும் நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயாமாக சுருக்கி இறக்கி வடிகட்டி  கல் உப்பு ........ஒரு சிட்டிகை மட்டும்  சேர்த்து ஒரு வேளை மருந்தாகக் குடிக்க வேண்டும்  நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டும்  இவ

ஆக்சிசன்ங்குறைபாடு சரியாக

 🇨🇭#உடலில்_ஆக்சிஜன் #குறைப்பாட்டை…❗❗ 🇨🇭#எவ்வாறு_சரி_செய்யலாம்❓❓ 👉நம் உடலில் இரத்ததோடு ஆக்சிஜன் கலந்திருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் திகழ முடியும். அதாவது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 75ல் இருந்து 100 வரை இருக்க வேண்டும். அதை விட குறையும் பொழுது தான்……  ▶தலைவலி,  ▶மூச்சு திணறல்,  ▶தொடர் இருமல்,  ▶ஆஸ்துமா, ▶நுரையீரல் பாதிப்புக்கள்  அனைத்தும் தோன்றும். இதனாலேயே தான் இன்று அதிகளவு மரணங்கள் சம்பவிக்கின்றன. 👉பொதுவாக சமைக்காது உண்ண கூடிய உணவுகளில் ஆக்சிஜன் அளவை அதிகமாக்க கூடிய கனிமங்கள் நிறைய உள்ளன. தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். சீனி கலக்க கூடாது. 💊ஏதாவது பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். 💊பச்சை தேங்காய், ஊற வைத்த வேர்க்கடலை உண்ணுவது மிக நல்லது 💊பீட்ரூட், கேரட் ஜூஸ் லெமன் கலந்து அருந்தலாம். 💊பச்சை தக்காளியை கல் உப்பு நீரில் ஊற வைத்து பின் கழுவி தினமும் உண்ணலாம். ❌பல்வேறு இரசாயனம் கலந்துள்ள மைதா, தூள் உப்பு, வெள்ளை சீனி, இறக்குமதி எண்ணெய்கள், பதப்படுத்திய உணவுகள்

பிண்ணாக்கு கீரை

 வாயு கோளாறுகளை சரி செய்யும் பிண்ணாக்கு கீரை: சாப்பிடும் அனைத்து கீரைகளிலும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. அதில் பல கீரைகள் நமது கிராமப்புரங்களில் கிடைக்கிறது. அதில் ஒன்று தான் பிண்ணாக்கு கீரை. குணப்படுத்தும் நோய்கள்: வாதம் பிரச்சனை, சிறுநீரகங்கள், நோய் எதிர்ப்பு, நீரிழிவு நோய், கல்லீரல், செரிமான பிரச்சனை, விஷகடி, புற்றுநோய். கல்லீரல் பிரச்சனை: அதிகமாக போதை பழக்கம் உள்ளவர்களுக்கும், தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கும் கல்லீரல் பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சனை தடுப்பதற்கு இக்கீரை மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதலில் போதை பழக்கம் மற்றும் நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தவிர்த்து விட்டு இக்கீரை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோய்: பிண்ணாக்கு கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக சிக்கிரமாக குறைத்து விடும். தினமும் சாப்பிடாவிட்டாலும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இக்கீரையை சாப்பிட்டால் மட்டுமே உடனடி தீர்வு கிடைக்கும். நோய் எதிர்ப்பு: நாம் வளர வளர நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி

திப்பிலி

 பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட திப்பிலி: திப்பிலி ஒரு மூலிகைத் தாவரமாகும். திப்பிலியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலில் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. ⚡திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து அரை டீஸ்பூன் அளவு காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும். ⚡பசும்பாலில் திப்பிலி பொடியை போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாயுத்தொல்லை நீங்கும். ⚡திப்பிலியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அதில் அரை கிராம் எடுத்து தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை கமறல், பசியின்மை குணமாகும். ⚡தோல் நீக்கிய சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவை குணமாகும். ⚡திப

இந்த கால சூழ்நிலைக்கான மலர் மருந்து

 இந்த நோய்பரவும் சூழலில் எந்த மலர்களை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கான பதில் மலர்மருத்துவத்தில் ஒரு பிரச்சனைக்கு என்று பொதுவான மருந்தை குறிப்பிடுவது கடினம். காரணம் மனிதர்களுக்கு வரும் சூழ்நிலை ஒரே மாதிரி இருந்தாலும், அவர்களின் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணம் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் மனநிலைக்கு ஏற்ப தான் மருந்து தேர்ந்தெடுக்க முடியுமே தவிர பிரச்சனைக்கு அல்ல.  எனவேதான் மலர்மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர் எட்வர்ட் பாட்ச் அவர்கள்  “நோய்களுக்கு மருந்து இல்லை, நோயாளிக்கு தான் மருந்து”  என்று தெளிவாக கூறியுள்ளார். இருந்தாலும் இந்த சூழலில் பொதுவாக மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று என் மனதிற்கு தோன்றியதை இங்கு நான் விளக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த சூழலில் பொதுவாக உலக மக்கள் மற்றவர்களை குறை சொல்லும் அல்லது இதற்கு அவன் தான் காரணம் என குற்றம் சாற்றும் மனநிலையில் தான் அதிகம் காணப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக  👉  இந்த நோய் பரவலுக்கு அந்த நாடு தான் காரணம் 👉 ஆளுங்கட்சி சரியில்லை 👉 எதிர்கட்சி சரியில்லை 👉 சட்டம் ஒழுங்கு சரியில்ல

வைரஸ்

 🇨🇭 #பொதுவவே_அதிகமாக_வைரஸ்கள் #காற்றின்_மூலமே_பரவும்…❗❓ 💢 வைரஸ் இல்லாமல் மனித உயிர்கள் இல்லை ஏன் என்றால்…❗ 💢 எல்லா உயிர் இனங்களிளும் வைரஸ்கள் இருக்கும்…❗❓ 💢 வைரஸ்வுடன்  வாழபழகி கொள்ளுங்கள்❗ ⭐ கடந்த காலம் என்பது #இறந்த காலம். ⭐ நாளை என்பது நம் #கையில் இல்லை. ⭐ இன்றைய நாள் நம் கையில். #மகிச்சியாக_வாழ்வோம். #மரணம் என்பது #உறுதி அதை எந்த #மருத்துவராளும் மற்றும் #மருந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.❗ 🙏#பணிவன்புடன்_ஓர் #வேண்டுகோள்❗❗❗ தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம். ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான  நடுத்தர மக்கள் ,சிறு குரு தொழில் மற்றும்  வணிகர்கள், சில்லரை வணிகர்கள் அனைத்து வகையினறும் கண்டிப்பாக அதிகமாக பாதிக்கபட்டுவிட்டார்கள். இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிடுமா.❗ கண்டிப்பாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் கொரோனாவில் இறப்பதைவிட பட்டினியால் இறப்பது அதிகமாகிவிடும்.   ▶ஓரு ஏழை மற்றும் விவசாயிகள் , ▶நடுத்தர மக்கள் , ▶சிறு வணிகர்கள்,  ▶சில்லரை வணிகர்கள்,  ▶சிறு குறு தொழில் நடத்துபவர்கள்  கேட்டு பாருங்கள் அவ

நறுவல்லி மருத்துவம்

 நறுவல்லி மருத்துவ பயன்கள்: பயன்தரும் பாகங்கள் :- பழம், பட்டை, பிஞ்சு, இலை  மேலும் பருப்பு (விதை) முதலியனவாகும். 🍒நறுவல்லியின் தன்மை சூடும், குழுமையும் ஆகும். இதன் முக்கிய பயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும்.  🍒தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்துகளினால் உண்டாகும் வேகத்தைத் தணிக்கும்.  🍒பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும். நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும்.  🍒நறுவல்லி பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.  🍒இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்ததிலான அசுத்தத்தை நீக்குகின்றது.  🍒அஜீரணத்தைப் போக்குவதோடு காய்ச்ச

உடலில் ஆக்சிசன் அளவு பெற

 உடலில் ஆக்சிஜன் அளவை எவ்வாறு பேணலாம்? நம் உடலில் இரத்ததோடு ஆக்சிஜன் கலந்திருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் திகழ முடியும். அதாவது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 75ல் இருந்து 100 வரை இருக்க வேண்டும். அதை விட குறையும் பொழுது தான் தலைவலி, மூச்சு திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா,நுரையீரல் பாதிப்புக்கள் அனைத்தும் தோன்றும். இதனாலேயே தான் இன்று அதிகளவு மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆக்சிஜன் குறைப்பாட்டை எவ்வாறு சரி செய்யலாம்??? பொதுவாக சமைக்காது உண்ண கூடிய உணவுகளில் ஆக்சிஜன் அளவை அதிகமாக்க கூடிய கனிமங்கள் நிறைய உள்ளன. தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். சீனி கலக்க கூடாது. ஏதாவது பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். பச்சை தேங்காய், ஊற வைத்த வேர்க்கடலை உண்ணுவது மிக நல்லது பீட்ரூட், கேரட் ஜூஸ் லெமன் கலந்து அருந்தலாம். பச்சை தக்காளியை கல் உப்பு நீரில் ஊற வைத்து பின் கழுவி தினமும் உண்ணலாம். பல்வேறு இரசாயனம் கலந்துள்ள மைதா, தூள் உப்பு, வெள்ளை சீனி, இறக்குமதி எண்ணெய்கள், பதப்படுத்திய உணவுகள் போன்றவற்

தும்பைச்சாறு நோய்தொற்றை தடுக்கும்

 இன்றைய கொரானா மூக்கின் வழி or வாய்வழி நுழைந்து உள் நாக்கில் படர்ந்து தொண்டையில்,சம்மணமிட்டு,  3 நாள் கழித்து நுரையீரல் தொற்றாகி அதன்பிறகு சுவாசப்பாதை அடைப்பு என்றகொடூர செயலில் மரணம் தழுவும் செயலை மையப்படுத்தி,,, ஆதி சித்தர்கள் வைத்தியத்தில் உள்ள inhale முறையில் எந்த கிருமிக்கும் மாற்று முறிவாக, சிறுதும்பை இலை 5 ஐ பிடுங்கி உள்ளங்கையில் வைத்து உப்புக்கல் ஒன்றை வைத்து கசக்கினால் சாறு திரண்டு வெளிவரும் அப்படியே அந்த கசக்கிய இலையை ஆட்காட்டி விரல் பெருவிரல் இரண்டின் இடையில் வைத்து அழுத்த வெளிவரும் இரண்டு சொட்டு சாற்றை மூக்கில் விட (விட்டு பாருங்கள் புரியும்) சிறுவயதில் உள் சென்ற dust அலர்ஜீ  கிருமி யாக இருந்தால் கூட  தப்பித்தால் போதும் என வெளியேறி நிரந்தர தீர்வும்,,,,  நல்ல கிருமிநாசினியாகவும் (for internal ட்ரம்ப் கேட்டது போல) செயல்பட்டு ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும் என்பதால் இந்த கோடையில் சித்த மருத்துவ உலகம் சிறுதும்பை செடி தேடி அலைகிறது,, எந்த பக்க விளைவும் இல்லாத நல் மருந்தை ஏற்போம் நலமாக வாழ்வோம்னு, !!!!! நாம சொன்னா யாரு கேட்கிறா!! சரி சரி கேட்கறவங்களுக்கு மட்டும் அந்த செடியின் படம்

நீங்களும் வைத்தியராகலாம்

 உங்களுக்கு நீங்களே வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள் ஆச்சரியமாக இருக்கின்றதா..?     இதை படித்து முடித்த பின்னால் பாருங்கள் நீங்களும் ஒரு வைத்தியராக தான் இருப்பீர்கள் அப்படியான ஒரு பதிவுதான் இது     முதலில் மனிதன் நோய் இல்லாமல் இருப்பதற்கும் நோயுடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்         கண்டறிவதற்காக சித்தர்கள் சொன்ன சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்     வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களும் நமது உடலில் மாறுபடாமல் இருந்தால் நமக்கு எந்த நோயும் வருவதில்லை இந்தக் குணங்களில் மாறுபாடு ஏற்பட்டு விட்டால் எல்லா நோய்களும் நமக்குள்ளே வந்துவிடுகிறது        முக்குணங்கள் மாறுபாட்டால் நோய்கள் வருகின்றது என்பதனை அறிந்து கொண்டோம் எனவே நமது உடலில் முக்குணங்களில் எது ஒன்று அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டால் போதும் அடுத்த நொடியே நமக்கு நாமே வைத்தியம் செய்து கொள்ள தயாராகி விடுவோம்     அதற்கான வழிகள் நமது உடலில் வாதத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால் 1 உடலெங்கும் வலிகள் உண்டாகும் 2 உடலில் அடிக்கடி புரட்டல் ஏற்படும் 3 நெஞ்சு கரிப்பதுடன் புளித்த ஏப்பம்               வரும் 4 உட

புளிச்சகீரை ஊறுகாய்

 *#புளிச்சக்கீரை_ஊறுகாய்....* *தேவையான பொருட்கள்:* புளிச்சக்கீரை2 கட்டு பூண்டுப் பல் 20 மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப அரைக்க: பெருங்காயம் - 1 சிட்டிகை எள்ளு - அரை டீஸ்பூன் தனியா - அரை டேபிள் ஸ்பூன் வர மிளகாய் - 3, சீரகம் வெந்தயம், கடுகு - அரை டீஸ்பூன் *செய்முறை :* கீரையை அலசி வெறும் கடாயில் வதக்க வேண்டும். நன்றாக வதக்கும்போதே ஜாம் போல ஆகிவிடும். அதை இறக்கி வைத்துவிட்டு பூண்டுப் பற்களை நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பெருங்காயம், எள்ளு, தனியா, வர மிளகாய், சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைக்க வேண்டும். கடாயை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து நசுக்கி வைத்த பூண்டை எண்ணையில் போட்டு உடனே அடுப்பை அனைத்து விடவேண்டும். பின் கடாயை கீழே இறக்கி வைத்து விட்டு அதில் வதக்கிய கீரையை போட்டு கலக்க வேண்டும். அதில் மிளகாய்தூளுடன் வறுத்த மற்ற பொடிகளையும் சேர்த்து  கலக்க வேண்டும். கடைசியில் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். நன்றாக கலந்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் சாப்பிட உகந்த உணவுக

முடக்கு வாதம் குணமாக

 முடக்கு வாதம் கிளி கட்டி ஒத்தடம்  கொடுக்க வேண்டிய மூலிகைகள் நாயுருவி வேர் வாதநாரயணன்இலை புங்கம் இலை புளியம்இலை நொச்சி இலை நுணா இலை காட்டாமணக்கு இலை எருக்கன் இலைபழுத்தது முருங்கை இலை பூண்டு வெட்டி வேர் தேங்காய் 1/2 மூடி முடக்ற்றான்  இலை இவைகள் சம் அளவு எடுத்து காயவைத்து  தேவையான அளவு எடுத்து சிறு மூட்டை கட்டி கொள்ளவேண்டும் கோட்டக்கல்  மருந்து கடையில்  தன்வந்திரி குழம்பு வாங்கி கொள்ளவும் வலி உள்ள இடத்தில் குழம்பு பூசி  ஒரு இரும்பு சட்டியில் ஒருஸ்பூன் குழம்பை ஊற்றி சூடு செய்து  மூட்டையை சட்டியில் வைத்து சூடு ஏறி புகை வருவதற்கு முன் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கும் போது வலி குறைந்துவிடும் மூட்டு வலி க்கான  சூரணம் அல்லது  பற்பம் செந்தூரம் மாத்திரை கொடுக்க  மூட்டு வலிகள் குறையும் அனுபவமே நன்றி வ. செங்குட்டுவன் அம்மூர் 🌹🙏

அக்கி புண் குணமாக

 அக்கிப் புண் குணமாக *சுடு சோறு வடித்தவுடன் அதில் ஒரு கவளம் சுடுசோற்றை ஒரு மெல்லிய காட்டன் துணியில் முடிந்து தாங்கும் அளவு சூட்டில் இதமாக சோற்றின் சூடு ஆறும் வரை ஒத்தடம் கொடுக்க ஒரே தடவையில் புண்ணில் வீக்கமும் வலியும் குறைந்துவிடும். மறுதடவை மறுநாள் இதே போல ஒத்தடமிட காயமும் ஆறிப்போகும். இது எளிய பக்கவிளைவில்லாத அனுபவத்தில் கண்ட வீட்டு வைத்தியம்.*   (பின்குறிப்பு:-கூரையில்  அல்லது சுவற்றில் இருந்தவாறு பல்லியின் சிறுநீர் நம் மேலே தெறிக்கும்போது அக்கிப் புண் உண்டாகும்.)

கறிவேப்பிலை

 கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை ஜூஸ்.: கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனைகள் இருந்தால் தான், உணவுகள் செரிமானமாகாமல் அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து, தொப்பையை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும்.  செரிமான பிரச்சனைகள் வந்தால், காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது ளியேற்றப்பட்டுவிட்டால்,  உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம். பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், கறிவேப்பிலையை  காலையில் எழுந்ததும் சிறிது உட்கொண்டு வருவது நல்ல பலனை தரும். கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைவதோடு, அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடல்  எ

சிறுநீரக பாதுகாப்பு

 🔯#சிறுநீரக_கல்லை_நீங்க……❗❗ 💊 #நம்ம_வீட்டு_மருத்துவம்...❓❓❓       👉உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன.  👉சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள்படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.  ▶குறைந்த அளவு நீர் அருந்துதல்,  ▶அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல்,  ▶குளிர்பானங்கள் அருந்துதல்,  ▶வைட்டமின் ‘ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல்,  ▶சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள்,  ▶சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல்  போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம். ❓#அறிகுறிகள்❓ ◀இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும்.  ◀குமட்டல்,  ◀வாந்தி,  ◀காய்ச்சல் இருக்கும்.  ◀வலியுடன் சிறுநீர் வெளியேறும்.  ◀எரிச்சல்,  ◀நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை,  ◀சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும். 🇨🇭 #எளிய_தீர்வுகள்❓ 💊சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை