வெண்டக்காய் ஊறவைத்த நீர்

 வெண்டைக்காய் நீர்.......


எலும்புகளை வலுவாக்க 8 மணி நேரம் ஊற வைத்து தினமும் காலையில் இதுல ஒரு கப் போதும்.....


வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது !!!

 வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.....


முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள்.....


பின்னர் அதனை நீள வாக்கி வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்......


 குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.


இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை 

கொண்டிருக்கிறது தெரியுமா?


இது நம் எலும்புகளை வலுவாக்கும்.


 இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.


 எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும்.


 எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.


கரையக்கூடிய ஃபைபர்களால் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல மலச்சிக்கலும் கட்டுப்படும்.

 வெண்டைக்காயில் இருக்கும் தாதுக்கள் நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்க உதவுகிறது....


 இதனால் உணவு செரிமானம் சீராக நடைப்பெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.


இந்த நீரை தொடர்ந்து குடித்து வர புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.


 வெண்டைக்காயில் இருக்கும் லெக்டீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.


அதோடு அல்சைமர் நோய் பாதிப்பினை தீவிரமடையாமல் வைத்திருக்க உதவுகிறது.


 மேலும் குடலிறக்கம் போன்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.


ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும். 


இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது.


 இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.


இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன.


 அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடக்கம்.


 அதோடு இதில் இருக்கும் மக்னீசியம் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது.


தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.


 இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கச் செய்திடும்.


பலரையும் பயமுறுத்தும் ஓர் வியாதி என்றே சொல்லலாம்.


 வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும் தண்ணீர் சத்து எல்லாம் சட்டென்று குறைந்து விடுவதால் ஒருவர் சுயநினைவின்றி விழுவதற்கும் காரணமாக அமைந்திடும்.


 அதனால் வயிற்றுப் போக்கு என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.


நம் உடலில் இருந்து அதிகப்படியான மினரல்ஸ்கள் இதனால் வெளியிடும்.


 அதனை சரிகட்டவும் வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம்.


 உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.


வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது.


 அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.


வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து எடுத்து வர அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும். அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.


ஒரு மனிதனுக்கு எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும்.


நம்மை தாக்கும் வைரஸ் தொற்று முதலில் பாதிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைத் தான்.


 இதனால் காய்ச்சலில் ஆரம்பித்து உயிர் போகக்கூடிய நிலை கூட வருகிறது.

 வெண்டைக்காயில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.


 இதனை தொடர்ந்து எடுத்து வர நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும்.

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்துவிடும். 


இதனால் அளவுக்கு மீறி சாப்பிட்டு ஒபீசிட்டி வந்தது தான் மிச்சம்.


இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் சாறினை குடித்து வர பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். 


இதில் இருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வைத்தரும்.


சிலருக்கு காரணமின்றி சோகமாக இருப்பதாக தோன்றிடும்.....


 அல்லது எப்போதும் டயர்ட்டாக தோன்றும் அப்படியிருப்பவர்களுக்கும் இந்த நல்ல மருந்தாய் அமைந்திடும்.


இதிலிருக்கும் பாலிஃபினால் மற்றும் ஃப்லேவனாய்ட் க்ளைகோஜென் உற்பத்தியை அதிகரிக்கும். இது அதிகப்படியாக இருந்தால் உங்களுக்கு டயர்ட்டாகவே தோன்றாது.


இன்றைய உணவு பழக்கவழக்கத்தினாலும் நமது அன்றாட செயல்களினாலும் இந்தியாவில், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக நமது உடலின் மேல் படையெடுக்க ஆரம்பித்து விடும்.


இப்படிப்பட்ட சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தக் கூடிய இயற்கையான மருந்து ஒன்று உள்ளது. 


இந்த அரு மருந்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு முறையை பற்றியும் இப்போது பார்ப்போமா…

சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்....


 சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.


வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.....


அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. 


ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது....


 துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது....


 இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.


உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.


 நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். 


சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும்.


 முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் நீர் மிகவும் நல்லது.


 இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்


உடல் எடை, கொழுப்பை குறைக்கும் ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் :

ஊறவைத்த வெண்டைக்காய்


வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரை பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.


வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.


 அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம்.


 அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம்.


 நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.


வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச் சினைகளில் இருந்து விடுபடலாம்.


வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இது கணையத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. இன்சுலின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்துவதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.


வெண்டைக்காய் தண்ணீரை தவறாமல் பருகினால் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் எனர்ஜி பானங்கள் பருகத்தேவையில்லை. இந்த நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம். அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம்.


வெண்டைக்காயில் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைய உள்ளன. அவை முக்கிய உடல் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி விகிதத்தையும் குறைக்கும். 


புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகுவது நன்மை பயக்கும்.


 வெண்டைக்காய் தண்ணீரை எளிதாக தயாரிக்கலாம் :

நான்கு, ஐந்து வெண்டைக்காய்களை நன்கு கழுவி அவைகளை சிறு துண்டு களாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அவைகளை வாய் அகன்ற ஜாடியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் வெண்டைக்காயை ஊற வையுங்கள். பின்பு வெண்டைக்காயை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அந்த நீரில் கலந்து பருக வேண்டியதுதான்.


உடல் பருமனாக இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது ஏன் தெரியுமா...?


வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

நிறைய பேருக்கு உடல் எடையை விட எலும்புகளின் இடையே அதிகமாக இருக்கும் அதற்கு காரணம் இந்த வெண்டைக்காய் தான். மூச்சு உள் இழுத்தல்,  வெளியிடுதல் தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் பயனுள்ளதாக வெண்டைக்காய் உள்ளது. 

கண்களில் குறைபாடு இருந்தால் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை நன்கு தெரியும், எவ்வித குறையும் இல்லாமல் இருக்கும். கண்பார்வை குறைபாடு வராமல் தடுக்கும்.


வெண்டைக்காய் அவித்து சமையலில் சேர்த்துக்கொள்ள மலச்சிக்கல் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் தீர்ந்துவிடும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க  வேண்டுமென்றால் வெண்டைக்காயை சாப்பிடுங்கள். 


உடல் பருமனாக இருப்பவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்று எண்ணுவோர் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட வேண்டும்,  அவ்வாறு சாப்பிட்டால் கொழுப்புகள் வெளியேற்றப்படும்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது வராமல் தடுக்க நினைப்பவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் முக்கியமான ஒன்று வெண்டைக்காய் தான், இதை சாப்பிட்டு வர உடலிலுள்ள சர்க்கரையின் அளவு குறையும்.


வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. இதய நோய்களுக்கும் வெண்டைக்காய் மிகவும் நல்லது, அதிலுள்ள சத்துக்கள் இதயத்திற்கு சென்று வலுவூட்டக் கூடியது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி