Posts

Showing posts from November, 2020

மனிதமனங்களின் நிலை

 மனித மனங்களின் நிலை:  "உலகம் பிறந்தது எனக்காக,  ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்ந்ததும் எனக்காக,   அன்னை மடியை விரித்தால் எனக்காக" என சில மனம். " கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள், துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்" என ஒப்பாரி வைக்கும் சில மனங்கள். இவற்றிற்கு நடுவே "உன்னையறிந்தால் , நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற மனம்  "நீ யார்?" " உன்னுடைய வல்லமை என்ன? "உன் மனதின் முழு சக்தி என்ன? "நீ ஏன், எதற்காக பூமிக்கு வந்தாய்?" "உன்னுடைய வாழ்வின் நோக்கம் தான் என்ன? " ஓவ்வொரு மனித மனத்தின் முடிவான ஆசை என்ன?" மனிதன் பிரபஞ்ச இயக்க ஆற்றலை ஒருங்கே கொண்டு , உணர்வு என்ற நிலை யை அனுபவிக்கப் பிறந்த மகா பிரபஞ்சத்தின் தனித்தனி வடிவாய் பூமியில் பிறக்கிறான். அவன் அனுபவிக்கும் முதல் உணர்வு ஆனந்தமாகும். ஆம் ஆணும் பெண்ணும் சம்யோகம் செய்யும் வேலையில் பூரண உணர்வெய்தி ஆணின் உடலில் விந்தாய் மாறி, பெண்ணின் கருக்குழாயில் தெறிக்கும் சமயம் ஏற்படும்

வாழ்வு சிறக்க

 ஆனந்த வாழ்வு! உங்களால் மாற்றக்கூடியவற்றை வாழ்வில் மாற்றமுனையுங்கள். நம்மால் முடியாதவற்றைப்பற்றிய எண்ணங்களை தூக்கி தூர வீசி எறியுங்கள். மாற்றக்கூடியவை... நான் என் அப்பாவை/ அம்மாவை/ கணவனை/ மனைவியை/ அண்ணன், தம்பியை/ அக்கா, தங்கையை நேசிக்கிறேனா? இல்லையெனில் ஏன்? காரண,காரியங்களை தெளிந்து அதை மாற்ற முயலுங்கள். முதலில் உங்கள் குடும்ப அங்கத்தினர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்! உங்களை நேசியுங்கள்! நீங்கள் முக்கியமானவர். இந்த இயற்கையின் கொடை நீங்கள். பிரபஞ்சத்தின் சொத்து நீங்கள்.  ஆனந்தமாகவும், இன்பமாகவும், இனிமையாகவும் நீங்கள் வாழ்வதை இந்தப்பிரபஞ்சம் விரும்புகிறது. ஏனெனில் இந்தப்பிரபஞ்சத்தின் பாசமிகு மகள்/ மகன் நீங்கள் தான். உங்களுடைய மன எண்ணங்களை சிதைக்கும் நிகழ்ச்சிகளை உங்கள் வாழ்விலிருந்து தூக்கி தூர எறியுங்கள்! தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், பாலுணர்வை கொச்சைப்படுத்தும் ஈனர்களின் செய்திகள். குடும்ப உறவை சிதைக்கும் பழக்க, வழக்கங்கள் , என நீங்கள் குப்பையில் தூக்கி எறிந்து தீயிட்டுக் கொளுத்த வேண்டிய எண்ணங்கள் ஏராளம்...ஏராளம்... இதைச்செய்துவிட்டுப் பாருங்கள். உங்கள் மனது இலேசாக , இலகுவாகியிருக்க

வாழ்க்கை வாழ்வதற்கே

 வணக்கம்!  நம்முடைய மூன்று தலைமுறை எண்ணங்களும் , சூழல்களும், கல்வியும் நம்முடைய வாழ்க்கை என்ற புத்தகத்தை வடிவமைக்கின்றன. நம்முடைய வாழ்வு எவ்வாறு உள்ளது என்பதை சுயபரிசோதனை செய்து அதை மாற்ற புதிய எண்ணங்களையும், சூழலையும், கல்வியையும் மாற்றியமைத்தால் எந்த நேரத்திலும், காலத்திலும், வயதிலும் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கலாம். சுயபரிசோதனை எவ்வாறு செய்வது? நன்றாக சிந்தியுங்கள்!  நான் என்னுடைய வாழ்க்கையில் ஆனந்தமாக, இன்பமாக இருக்கின்றேனா? அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம், சந்தேகம், நிலையில்லாத தன்மை இவைகளினால் என் மனம் சூழப்பட்டு நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்றும் எவ்வாறு வாழப்போகிறோம் என்றும் கவலைகளும், கற்பனைகளும் உங்கள் மனதை நிறைக்கின்றனவா? அல்லது ஏதோ ஒரு குருட்டுப்போக்கில் வாழ்கிறீர்களா? நீங்கள் நல்லவண்ணம் வாழ்கிறீர்கள் என்றால் எதிர்காலத்தைப்பற்றி துளியும் பயமோ, கவலையோ உங்கள் மனதை வாட்டாது. அரசியல் சூழ்நிலையைப்பற்றிக்கூட நீங்கள் யாதொரு பயமோ, ஐயமோ படமாட்டீர்கள். பிறர் குற்றத்தை தேவையில்லாமல் காணமாட்டீர்கள். குடும்பத்தில் என்றும் சந்தோசமாக வாழ்வீர்கள். மாறாக இதற்கு எதிர்மறையாக உங்கள்

பானை

 #இந்த_பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு #பானையை கொடுத்து அனுப்புகிறார்.... அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும்  நிறைந்திருக்கும்! உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை,  அமைதி, நிம்மதி, சந்தோஷம்,  நல்லெண்ணம், அன்பு, ஆரோக்கியம், பக்தி, தியாகம் இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அதில் இருக்கும்,  ஆனால் எந்த பொக்கிஷத்தையும் நாம் முழுமையாக அனுபவிப்பது இல்லை,  காரணம் நம் பார்வையெல்லாம் அடுத்தவன் பானைமீது தான் இருக்கிறது!  ஒரு சிலர் செம்பு பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்!  ஒரு சிலர் வெள்ளிப்பானையுடன் செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்,  ஒரு சிலர் தங்கப்பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்தும்  ஏங்குவோம்!  எப்படியாவது அந்த ஆடம்பரமான பானையை அடைந்துவிடவேண்டும் என்று போராடுவார்கள், ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை மண்பானையில் இருக்கும் எந்த பொக்கிஷமும் அதில் முழுமையாய் இல்லையென்று!  அருகில் சென்று உங்களுக்கு மட்டும் எப்படி தங்கப்பானை கிடைத்தது என்று கேட்க, எனக்கும் மண்பானை தான் கொடுத்தார், 

சைவமா, அசைவமா-ஓஷோ

 *அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்     இறை நம்பிக்கை உள்ளவர்கள் ??? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ???? ... இந்த கேள்வியை  கேட்காத மனிதர்கள் இல்லை  இதற்கு  பதில் தராத  குருவும் இல்லை  ஆயினும்  கேள்வி தொடர்கிறது  ... *இதோ ஓஷோ அவர்களின் பதில்...* உணவுக்கும்  இறைவனுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை.. ... உணவுக்கும்  கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை... .... உணவுக்கு  கடவுள் தண்டிப்பார் என்பதற்கும்  எந்த சம்மந்தமும் இல்லை. ... *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு* .. *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு*  .. *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு*  .. *உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...* .. *உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு...* *உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு..* .. *மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..* ------------ 1. கர்மாவின் காரணமாக  பிறவி எடுத்தவன் மனிதன்.. அதைக் கரைக்கவே மனித பிறவி...* 2. தாவர உயிரினங்களுக்கு  கர்ம பதிவுகள் குறைவு  மாமிச  உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்...* 3. எந்த  உணவை 

வாழ்க்கை

 அன்பர்களே! தமிழ் வார்த்தைகளின் நூதன பொருள். ( எம்முடைய புரிதல்) வாழ்க்கை - வாழ் + கை. கை என்பது கைவல்லியம் எனப்பொருள்படும். கை- க்+ ஐ ஐ என்ற ஒரு சொல் வார்த்தைக்கு " இறைவன்" என்று பொருள். வல்லியம் என்பது வல்ல+ இயம் இறைவனின் இயக்கத்தை நம்முள்ளே நடத்துவது என்பது கைவல்லியம் என்பதாகும். கைவல்லியம் சமாதி அடையும் பாதை. எனவே கைவல்லியம் பெற வாழ் என்பதை " வாழ்க்கை" என்று அமைந்ததாக புரிதல். தற்போது நாம் வாழ்வது மனித வாழ்வு அது மனதின் வாழ்வு. மனம் என்னவெல்லாம் சொல்கிறதோ அப்படி வாழ்ந்து வருகிறோம். மனம் என்ன சொல்லும். படித்ததை, கேட்டதை, பார்த்ததை நம்முடைய பதிவாக கொண்டு அதன்படி நம்மை இயங்கச்சொல்லும். நாம் பார்த்ததும், கண்டதும், கேட்டதும் உண்மையா? என்றால் இல்லை. அவரவர் மன எண்ணங்களுக்கேற்றவாறு வாழும் வாழ்வு மரணத்தை நோக்கித்தானே அவர்களை அழைத்துச் செல்கிறது. ஆக வாழ்ந்திருக்க எண்ணம் கொண்டால் வாழ்ந்தவர்களை, இன்னும் வாழ்ந்திருப்பவர்கள் கூறியதையல்லவா கேட்க வேண்டும். வாழ்ந்தவர் , வாழ்ந்திருப்பவர் யார்? சித்தன் முருகன், அகத்தியன், வியாசன், பதஞ்சலி, காளங்கி, போகன், வள்ளுவன் , இராமானுசன் போன

அடக்கம்

 எல்லையில்லா ஆற்றலை எல்லாம் வல்ல ஆதிபகவனால் தன்னுள் அமையப்பெற்ற ஆத்மாவாகிய சிவமாகிய ஜீவனின் அருளால் பிறப்பெடுத்து வாழ்கிறோம்.  இடையிலே கல்வி என்ற பெயரால் பொருளியலை வேண்டி நம் மனத்தை கடின சித்தமாய் கல்விச் சூழல் மாற்றம் செய்ததனால் அன்பு கருணையை மறந்து மன அடிமைகளாய் வாழ்ந்து பெறர்க்கரிய பேரான வாழ்க்கையை நரகவாழ்வாய் வாழ்ந்து மடிகிறோம்.  நம் மனத்தில் ஈசனாகிய நம் உயிரின் வல்லமையை உணர மகான்களின் அடியொற்றி அவர்களின் சொல்படி வாழ்க்கையை அமைத்தால் , அதன்படி நடந்தால் சுவர்கத்தை நம்முள்ளே காணலாம்.  எனக்கும் எம் உடன் பிறவா சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் சுவர்க வாழ்வு அமைய, அதை உணர பெறர்க்கரிய பேறு பெற அருள்வாய் பூரணனே!  மனத்தோடான வாழ்வு மரணத்தை தரும், அகத்தோடான வாழ்வு அமரத்துவத்தை தரும்.  "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் "

உணர்ந்தேன்

 உணர்ந்தேன்...உணர்ந்தேன்... உணர்ந்தேன்... கண்டு கேட்டு உண்டுணர்ந்து உறவாடும் பெண் என் மனம் என்பதை உணர்ந்தேன். ஆணாகிய என் ஜீவனான சிவத்தை பேணும் "பெண்" என் மனம் என்பதை உணர்ந்தேன். என் கணவனான என் ஈசனை என் கண் என்பதை என் மனதால் உணர்ந்தேன் . "ஆணுக்குப் பெண் அடிமை" ஆம் என்னை ஆட்கொண்ட என் ஆண்டவனே ஆண் எனவும் அவனுக்கு நான் அடிமை என்பதை உணர்ந்தேன். *இராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி" என் ஜோதியாகிய இராமன் உறையும் சிரசின் அயோத்தியே எனக்கு வீடு என்பதை உணர்ந்து என் கணவன் வீட்டிற்கு சென்று வாழ்வதே என் இலட்சியம் என உணர்ந்தேன். " கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருசன்" என கல்லிலும் புல்லிலும் சிவமாகிய கணவனே உறைகிறான் என்பதை உணர்ந்தேன். தற்போது நான் (மனம்) என் கணவனை பிரிந்து வாழாவெட்டியாக ஊர் சுற்றி என் வாழ்வை வீணாக கழிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். எவ்வாறு நான் என் கடவனோடு சேர்வது? வடகரை வள்ளல் சுவாமி சிவானந்தனின் வாசியோகம் என்ற சித்தவித்தையை முறைப்படி கற்று, நடவடிக்கை கிரமங்களை கடைபிடித்தால் என் கணவனோடு ஐக்கியமாகி பேரின்பம் அணுபவிக்கலாம் என்று உணர்ந்தேன். "ஐயகோ

நன்றி- நன்மை அறி

 நன்றி! நன்றி! நன்றி! அண்ட சராசரங்களால் இப்பூவுலகை உருவாக்கிய வேதியனுக்கு நன்றி! இப்பூவுலகில் எனக்கொரு இடமளித்த இயற்கை பேராற்றலுக்கு நன்றி! எம் உடன் ஜீவித்திருக்கும் 84 இலட்சம் யோனி பேத ஜீவராசிகளுக்கு நன்றி! எம் உயிரை அணுவாக இயற்கை பேராற்றல் உருவாக்கம் செய்ய உதவிய என் தந்தைக்கு நன்றி! என் அணுவை தன் கருப்பையில் அண்டமாக மாற்றி என்னை கருச்சுமந்த என் தாய்க்கு நன்றி! என் தேவைகளை உணவு, நீர், நிலம் என அனைத்தையும் எனக்களித்த இப்பிரபஞ்சத்திற்கு நன்றி! என்னை, தன்னை உணர எனக்கு சித்தவித்தை என்ற நற்கொதி அடைய, அதன் மூலம் என் ஜீவனாகிய சிவத்தை உணர தீட்சை அளித்து என் பயிற்சிக்கும் முயற்சிக்கும் உறுதுணையாக நிற்கும் " வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சருக்கு நன்றி! என்னை நல்வழியில் வழி நடத்தும் என் மனதுக்கு நன்றி! நான் வாழ காரணமாக இருக்கும் இவ்வுலக மாந்தர்கள் யாவருக்கும் நன்றி! என்னை நேசிக்கும் அத்துணை ஜீவர்களுக்கும் நன்றி! பெறர்க்கரிய பேறு பெற்றேன் இப்பிறவியை எடுத்து வாழ... அன்பால் இன்புற்றேன், ஐயனே என்னுள் இருந்து என்னை இயக்கும் பெருங்கருணையே உனக்கு என்னால் நன்றி சொல்ல இயலுமா? நான் வேறு , நீ வேற

கௌமாரம் - ஞான விளக்கம்

 அன்பு சகோதரரே, கௌமாரம் என்பதன் விளக்கம் கூறுகிறோம் கேளுங்கள்.  "கௌ" என்பது கௌவிக்கொள்ளுதல் அதாவது இறுக பிடித்துக் கொள்ளுதல் என்பதாகும். மாரம் என்பது ஜோதி என்பதாகும். ஜோதி என்பது எண்ணெயிலிருந்து உண்டாகும். எண்ணெய் என்பது விதையிலிருந்து உண்டானது. எள்ளில் எண்ணெய் போல் நமது சுக்கிலமாகிய விதையிலிருந்து நம்முடைய பிராணக்காற்றை ஊதிக்கட்ட உள்ளிலே ஜோதியை காணலாம். சுக்கிலமாகிய விதை குமாரக்கடவுள் என்று பொருள்படும்.  அதாவது ஜீவனாகிய சிவனில் உள்ள நெருப்பாகிய வெப்பத்தால் உண்டாவது சுக்கிலம். கந்து என்ற நெருப்பின் மூலம் உருவாவதால் 'கந்தன்' கார்த்திகை என்ற கார் இருளாகிய மாயையாகிய உடலின் உணர்வினால் எற்படுவதால் "கார்த்திகேயன்". "கு" என்ற ஜீவகாந்த சக்தியின் வடிவாய் "மாரன்" என்ற சுக்கில ஒளியாய் விதையாகிய பிரம்மம் எற்பட்டு பிறப்பில்லா விதை எனவே " குமரன்". செந்தூர் என்ற சிரசில் குடிகொண்டதால் செந்தில் வேலன். உடலாகிய கோயிலில் பார்வதி என்ற மனத்தால் பணி என்ற வேலை செய்து பெற்ற பணமாகிய சுக்கிலமாகியபடியால் "வேலன்". ஆக எம்பெருமானாகிய பிரம்மக்கடவுளாக

கர்ம வினை நோய்

 -------------முன் ஜென்ம வினை---------- கர்ம வினைகளின் தாக்கம் தான் நோய் (இதை விஞ்ஞானம்,D.N.A அல்லது மரபணு குற்றம் என்கிறது,சில மதங்கள் இரத்தப் பழி என்கிறது) நமக்கு வரும் எந்த நோயாக இருந்தாலும்,அதற்கு நம் உடல் 10% தான் காரணம், அந்த நோய் பெரிதாவதற்கும், நிரந்தரமாக,நம் உடலிலேயே தங்கி விடுவதற்கும், 90% நம் மனம் தான் காரணம்,  வாழ்வில் நமது அனைத்து வெற்றி தோல்விகளுக்கும் இந்த மனம் தான் முழு காரணம். இந்த மனம் தனி உறுப்பா? இல்லவே இல்லை. நம் பூர்வ ஜென்ம எண்ணங் களின் படிவங்களே மனமும் அதன் செயல் பாடுகளும். மனமது செம்மையானால் மந்திரங் கள் கூட தேவையில்லைன்னு,  சித்தர்கள் தெளிவா சொல்லியிருக் காங்க. இந்த கர்மாவால் பாதிப்படைய வாய்ப்புள்ள, உறுப்பு, எது? என்று தெரிந்து கொள்வது, நல்லது தான்..! என்று நினைப்பவர்கள், வாட்ஸ் அப் வரலாம் , அது தெரிந்தால் மட்டுமே எந்த நோயாக இருந்தாலும் குணமாக்குவது சாத்தியம். ---------மாற்றுக்கருத்தேயில்லாமல்------- நாம் வெற்றி பெறுவதும் சாத்தியம் இந்த பதிவை முதல் முறை படிக்கும் போது அலட்சியம் வரும், இரண்டாம் முறை படிக்கும் போது நிதானம் வரும், மூன்றாம் முறை படிக்கும் போது தெளி

மூளை நோய்கள்

 #மனிதனுக்கு_மூளையில்_ஏற்படும் #நோய்கள்……… #பற்றி_தெரிந்து_கொள்ளுங்கள்…❓❗ மனிதனின் நினைவுகள், எண்ணங்கள், உணர்வுகள் என அனைத்திற்கும் மூல காரணம் மூளைதான்.  பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் மூளையில் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் 1000 கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன.  இந்த செல்களை பாதிக்கும் நோய்கள் பல உள்ளது ஆனால் சில முக்கிய நோய்கள் பற்றி இங்கு காண்போம்…❗ #மூளை_நரம்பு_மண்டலம்  #கீழ்வருமாறு_பிரிக்கப்பட்டுள்ளது…❓ ⃣ தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு❓ இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல்  இவற்றிற்குப் பொறுப்பாகின்றது.  ⃣ மோட்டார் நரம்பு பிரிவு❓ அசைவுகளையும், செயல்களையும்  மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க  வைக்கின்றது.  ⃣ சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு❓ தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற  உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரணமாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வா

சரவணபவ விளக்கம்

 சரவணபவ...ஓம் சரவணபவ... - விளக்கம் சரம் + வணக்கம் + பவம். சரம் = சுவாசம், கெதி வணக்கம் - சரமாகிய சுவாசகெதியை வணங்குதல் என்பது அதனோடு ஒன்றி அதனை சேர்வது என்று பொருள். பவ என்கிற பவம் என்றால் விருத்தி என்று பொருள். அதாவது நம் உடலில் உள்ள ஜீவசக்தியாகிய வாயுவை (உயிரை) நம்மிலிருந்து வெளியில் விடாமல் நம்முள்ளேயே நிறுத்தி அதை சரணாகெதி அடைந்தால் , நம்முடைய ஜீவன் "விருத்தி'யடையும். மாறாக அதை வெளியில் விட்டால் "ருத்தி" அதாவது விரையமாகும். எனவே சரவணபவ என்பது சரம் பார்த்து அதனை வணங்கி அதை அழியாமல் வளர்ப்பது என்று பொருள். "சரம் பார்ப்போன் பரம் பார்ப்பான்" என்பது நம் முன்னோர்களின் மொழி. பவம் என்பது ஆக்கம், பாவம் என்பது அழிவு. இறைஉணர்வோன் சங்கர்

அண்டம் பிண்டம்

 அண்ட பிண்ட ரகசியம்  படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள் ரொம்ப பெரிய பதிவு பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி கண்டறிந்தனர்? இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும், ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.எனக்குள்ள அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத் தத்துவம்.இன்னும் ஆழமாகப் புரிய ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு தோற்றமோ? அங்கேதான் முடியும் ? என்பதை புரிந்து கொண்டேன் ஆராய முற்பட்டேன் அதன் விளைவு வெட்டவெளி தோன்றியது. அதிலிருந்து தோன்றிய ஜோதி என் கண்முன் தோன்றின.அதிலே முளைத்து எழுந்த அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக் கண்டேன் கடைசியாகத் தன்னைத்தானே ஆராய முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை உணர்ந்தேன் எங்கோ தொடங்கிய மூல ஆற்றல் அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை கண்டேன் பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல சக்தி என்கிற க

விதியை மதியால் வெல்

 "விதியை மதியால் வெல்வது" உள்ளிலே சதாகாலமும் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவசக்தியாகிய "திரு" என்கிற இறைசக்தி வெளியில் விட்டு ("வி")  மாளும் "விட்ட திரு" வாகிய விதியை, ஊர்த்துவகதியாகிய சித்தவித்தையை மனம் என்ற மதியால் பயின்று தானாய் தன்மயமாய் ஆகி தன்னைத்தான் உணரும் போது " விதியை மதியால் வெல்லலாம்" சித்தவித்தை பயிற்சியால் ஊர்த்துவகெதியை கற்று மரணத்தை வென்று மரணமிலா பெருவாழ்வு வாழலாம். மற்றோர் எல்லாம் மரணம் என்கிற விதியால் சாகலாம். மத்தகப்படிப்பை பயிலாமல் புத்தகப்படிப்பை மட்டுமே படித்து மாபெரும் பண்டிதன் என்று மார்தட்டிய யாவரும் முடிவில் மரணத்தை தழுவுகிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை எவரையும் மரணம் என்கிற விட்டு வைத்ததில்லை. மத்தகமாகிய அகத்தில் உண்மையாய் உள்மெய்யை படித்த ஒருவரும் மரணப்பதில்லை. "மரணமிலாபெருவாழ்வை வாழ்ந்திடுவோம் கண்டீர், புனைந்துரையேன், பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன். துன்மார்க்கம் தவிர்த்து சன்மார்க்கம் தழுவும் பெருந்தருணம் இதுவே...

அன்பே சிவம்

 #குருவாகி_வந்த_திரு. #யான் சிவமெனும்  கண்ணாடியில் உயிர் சக்தி  எனும் உள்ளீடற்ற தன்மையின்  ஊடே மனமெனும்  பாத -இரசம் பூசிய  மெய் பொருளே யான்.  #நீ என்னிடம் காண்பது  உன் முக பாவங்களே . என் மன இரச குருவின்  ஊடே உன் நிலையை  நீ உணர்கிறாய். உள்ளீடற்ற பிரதிபளிப்பில் நீ உன்னை  மட்டுமே உணரமுடியும் . தனித்து எனக்கென்று  ஒரு முக பாவமும் இல்லை . நீ என்னை அறிய அதன்  அதன் காரமாகவே உள்ளீடற்று  இருப்பதால் அணைத்திலும்  சிவமான சக்தி கொண்டு இயங்குகிறேன் யான். #குருவாகிய என்னை  அறிந்தே நீ திருவை உணர முடியும்  (மனமெனும் குருவே  திருவாக வந்தது.) அழுவதும் சிரிப்பதும்   யான் அல்ல அது என்னில்  தோன்றும் உன் முக பாவமே. #உன் மனமெனும் இரசம்  கரைந்து பாத பர வெளியாக  இல்லாமல் இருக்குமே யானால் ஊள்ளீடட்ற உயிர் சக்தியின்  சிவமாகிய யான் நீயே என்று உணர்வாய். #அகம் பிரமாஸ்மி  தத்துவமசி யான் உணர்ந்ததும்  உணர்த்தியதும் என் நிலையும் இதுவே. சிவானந்தமே ஜீவ சுகம்  சிவாயநம. #ஆத்மஅடியேனின் #ஆத்மநமஸ்காரம்

மத்தக கல்வி

 ஆதியும்,அந்தமும் இலா அருட் பொருஞ்சோதியாய் அவனவனில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை ஒலியாய் ஓம்காரமாய் செவிமடுத்து, ஒளியாய் ஜோதி சொரூபத்தை தரிசித்து மரணமிலா பெருவாழ்வை பெற்ற மகான்கள் வாழ்ந்த பூமியில், பொன்னும், பொருளும்,ஆட்சியும்,அதிகாரமும் மட்டுமே  பிரதானம் என்ற மேற்கத்திய எச்சில் கல்வியை ஊடகங்களினால் மனதில் மூளைச்சலவையால் பதித்து அதன்படி நடக்கும் இப்பேதைகள் வாழ்வின் ஒவ்வொரு அசைவினிலும் இராகத்துவேசம் என்ற விருப்பு, வெறுப்பின் மூலம் இப்புவியை வாழத்தகுதியற்ற அணு ஆயுதகிடங்குகளாய் மாற்றிய அவலம் மாற மத்தகக் கல்வியாம் தவமும்,தானமும்,தர்மத.தையும் கற்று தன்னுள்ளே உறையும் ஏக இறைவனை தரிசிக்க கற்றுணர்வீர் சித்தவித்தையை...  நீவீர் கற்ற கல்வியாகும் ஈசனை புறத்தில் போக்கும் புறம்போக்கு கல்வியினால் நீர் அடைந்தது நோயும் மன உளைச்சலும் மட்டுமாகும்.  அன்பை உணர்ந்து , ஆனந்தத்தில் இலயித்து ஆண்டவனின் பெருங்கருணையான இந்த ஜீவனையும், ஜீவிதத்தையும் பெறற்கரிய பேராய் மாற்ற கற்றுணர்வீர் திருக்குறள், திருமந்திரம், திருப்புகழ், திருவாசகம், திருவருட்பா... தமிழால் கற்பீர்... தம்மை உணர்வீர்...

வாழ்க்கை வாழ்வதற்கே

 வாழ்க்கை வாழ்வதற்கே! தமிழ் தெரிந்த அனைவர்க்கும்... பிறக்கும் போது பெறர்க்கரிய பேரான உயிராற்றல் என்ற மூலதனத்தைக் கொண்டு பிறந்தோம். இறக்கும்போது உயிர் என்ற மாபெரும் பொக்கிஷத்தை இழந்து சாகிறோம்.  இடை நடுவே ஆயிரம், ஆயிரம் ஆசைகளினால் தூண்டப்பட்டு முயற்சியாலும், பயிற்சியாலும் காசு சம்பாதிக்கும் தொழிலை கற்கிறோம். எந்த தொழில் செய்தாலும் காசு உண்டு. ஆனால் உழவும், மருத்துவமும் சிறப்பு. உழவைப்பேணி உணவை மருந்தாக்கி உண்டால் மருத்துவத்தின் தேவை பெருகாது. உழவில் நஞ்சை கலந்து உடலில் நோயை உருவாக்கி மருத்துவத்தை மாபெரும் மகத்துவமாக மாற்றியது மருந்து தயாரிப்போரின் செயல்திட்டம். இதிலிருந்து தப்பித்து ஏன் வெளியே செல்ல வேண்டும்? காரணம் இயற்கை என்ற பரிணாமத்தின் கடைசி பரிணாமமாக இறை உணர்தல், அன்பு மலர்தல் , இறையோடு சமாதியாதல் என்ற பரிணாமம் மனிதர்க்கு மட்டும் வாய்க்கப்பட்டுள்ளது.  இதை உணர்ந்து மனிதன் எய்த வேண்டிய உன்னத பரிணாம வளர்ச்சியான சமாதி வாழ்வை அறிந்து மாபெரும் பேரை பெற நாம் கற்று உய்ய வேண்டிய கலை " சித்தவித்தை" என்ற சாகாக்கலை.  இந்த கலையைக் கற்று சூரியயோகத்தை அடைந்தால் உணவு தேவையில்லை, உறக்கம்

பரிணா வளர்ச்சி

 மனித இனத்தின் முடிவான பரிணாமம் எது?  அரிய பிறப்பான மானுட பிறப்பை  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் போராட்டங்களினாலும், பல இன்னல்களினாலும், மதிப்புமிக்க அனுபவங்களினாலும் அடைந்தது மனித இனம். இவ்வாறு அடைந்த இப்பிறவியை காமம், கோபம், பொறாமை, பேராசை , டம்பம், அசூயை, அதர்மம், லஞ்சம், களவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நயவஞ்சகம், சூது, வாதம் , சூழ்ச்சி, ஆட்சி, அதிகாரம்,  இவைகளை மனத்தால் நிறைத்து அன்பை உணராமல் இழி பிறவிகளாய் மரணிக்கவா பிறந்தோம்? அகங்கார மாயையால் பெறர்க்கரிய பிறவியை நாசம் செய்தல் முறையோ? நம்முடைய பிறப்பை பூரணத்துவம் அடையச்செய்ய என்ன செய்ய வேண்டும்? "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக" இதைவிட ஒரு வழிகாட்டுதல் வேண்டுமோ? மனிதனின் பரிணாமம் அன்பால் விளைந்தது என கற்க. அந்த அன்பின் வழி நிற்க. அன்பு அகத்தே செழித்து உடலை உருவாக்குகிறது, அதை பாதுகாக்கிறது என உணர்க. இந்த அன்பை புறத்தே தவத்தின் மூலம் பெற்று மனிதநேயம், மனிதமாண்பு, தயை, இரக்கம், கருணை, ஜீவகாருண்யம் என்ற உன்னத குணங்களால் மனிதனை மனிதநேயராக மாற்றம் செய்து அதன்படி நின்றால் உடலில் அமுதம் சுரக்கும், பசிப்பிணி தீரும். காம

வீடு ஒரு கல்விக்கூடம்

 உலகம் என்ற பல்கலைகழகத்தில் உறவுகள் என்ற பேராசிரியர்களால்  வாழ்க்கை எனும் பாடம் பயில்கிறேன்.  வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என உணர்ந்தேன். நிரந்தரம் எதுவென அறிந்தேன் அதுவே என்னுள் என்றும் எனைக்காக்கும் ஆத்மனென...என் உறவு, சொந்தம்,பந்தம் என யாதுமாகி என்உடலில் நின்றவனே என் உடமை. என் உடலே அவன் உறையும் ஆலயம் என தெளிந்து உடலைப்பேணி உயிரைக்காக்கும் பொருட்டு தேட வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் கற்று சித்தவித்தை பெற்று உள்சுவாசமாம் பிராணாயாமத்தை அனுஷ்டிக்க அடையலாம் இறைவனின் பாதத்தை என சித்தவித்தை பயிற்சி தொடர்கிறது.  வாழ்வும் நல்வண்ணம் மலர்கிறது...  மனமென்னும் மாயையே உலகை படைக்கிறது, உலகை பேணுகிறது, உலகை அழிக்கிறது ஈசனென்ற ஆத்மனின் உயிராற்றல என்ற சக்தியினால்...  ஆவதும் மனதாலே அழிவதும் மனதாலே... நல்ல ஞான மனம் முக்தி மோட்சத்தை அருளும், சகுனி மனம் அழிவென்ற மாரணத்தை திணிக்கும். மரணமா? மோட்சமா? என்ற கல்வியை உலகில் பலகலைகழகத்தில் கற்றுணர்ந்த பாடம் தெளிவுதரும்.  ஆசை கொண்டு அழிந்தோர் கோடி,கோடி, ஆணவ,அதிகாரத்தால் மாண்டோர் கோடி,கோடி...  மகானாக உயர்ந்தோர் சில நூறு...  தெரிந்து தெளிந்த

நன்றி பிரபஞ்சத்திற்கு

 நன்றி! நன்றி! நன்றி! அண்ட சராசரங்களால் இப்பூவுலகை உருவாக்கிய வேதியனுக்கு நன்றி! இப்பூவுலகில் எனக்கொரு இடமளித்த இயற்கை பேராற்றலுக்கு நன்றி! எம் உடன் ஜீவித்திருக்கும் 84 இலட்சம் யோனி பேத ஜீவராசிகளுக்கு நன்றி! எம் உயிரை அணுவாக இயற்கை பேராற்றல் உருவாக்கம் செய்ய உதவிய என் தந்தைக்கு நன்றி! என் அணுவை தன் கருப்பையில் அண்டமாக மாற்றி என்னை கருச்சுமந்த என் தாய்க்கு நன்றி! என் தேவைகளை உணவு, நீர், நிலம் என அனைத்தையும் எனக்களித்த இப்பிரபஞ்சத்திற்கு நன்றி! என்னை, தன்னை உணர எனக்கு சித்தவித்தை என்ற நற்கொதி அடைய, அதன் மூலம் என் ஜீவனாகிய சிவத்தை உணர தீட்சை அளித்து என் பயிற்சிக்கும் முயற்சிக்கும் உறுதுணையாக நிற்கும் " வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சருக்கு நன்றி! என்னை நல்வழியில் வழி நடத்தும் என் மனதுக்கு நன்றி! நான் வாழ காரணமாக இருக்கும் இவ்வுலக மாந்தர்கள் யாவருக்கும் நன்றி! என்னை நேசிக்கும் அத்துணை ஜீவர்களுக்கும் நன்றி! பெறர்க்கரிய பேறு பெற்றேன் இப்பிறவியை எடுத்து வாழ... அன்பால் இன்புற்றேன், ஐயனே என்னுள் இருந்து என்னை இயக்கும் பெருங்கருணையே உனக்கு என்னால் நன்றி சொல்ல இயலுமா? நான் வேறு , நீ வேற

தமிழின் சிறப்பு

 தமிழில் அநாகரீகமாக பேச முடியுமா? முடியாது. 1) தேவரடியாள் - மனம் என்ற பெண் உடலில் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அடியாளாக இருப்பதால் தேவரடியாள். 2 ) கூத்தியாள் - சிவனாகிய தில்லை நடராசர் நம் உடலிலே கூத்தாடுவதால் நாம் இயங்குகிறோம். எம்பெருமான் நடராசனுடன் மனமென்ற பெண் ஆனந்தக் கூத்தாடுவதால் கூத்தியாள். நடராசன் - ஆனந்தக் கூத்தன்.(நடு நாடி) சிவகாமி அம்மை - இடநாடி பார்வதி - பிங்கள நாடி - வல நாடி. 3) மடையன் - தன்னுள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்ற ஜீவசக்தியாகிய வாயுவை மடைமாற்றம் செய்து தன்னுள்ளே சேமிக்கும் மடையை ஏற்படுத்தாதவன் "மடையன்" 4) முட்டாள் - பிரம்மரந்திரமாகிய புருவமையத்தை நடுநாடியை பிராணாயாமத்தால் முட்டாதவன் "முட்டாள்". 5) புரம்போக்கு - தன் ஜீவனாகிய வாயுவை ஜீவகாந்த ஆற்றலை புரத்தில் போக்கி மரணமடைபவன் - " புரம்போக்கு" பன்ணாடை - தேங்காய் மட்டை அல்லது பனை மட்டையை வடிகட்ட உபயோகித்து அதிலுள்ள கெட்டவைகளை பன்ணாடையால் பிடித்து அகற்றுவர். வாழ்வில் தீயவைகளை மட்டுமே பற்றி வாழ்பவர்களுக்கு " பன்ணாடை" என்று பெயர். இதுபோல் எண்ணற்ற வார்த்தைகள் ஞானத்தை போதிக்க 

சித்த வைத்தியம்

 சித்தவைத்தியம் = சித்தம் + வைத்தியம். சித்தத்தை சிரசில் வைத்து இயம்புவது. ஆம் "சத்" என்ற ஜீவனை மனதில் நிறைத்து "நிஷ்டை" என்ற மனம் இயங்கா நிலையை வைத்து இயம்பும் நிலையை எய்தினால் ,  புருவமையத்தில் "சத்" சித்தாகும். அவ்வாறு நிலையாய் நீடித்திருந்தால் அதுவே மாமருந்தாம் அமிர்தமாம். இவ்வமிர்தத்தை சாதகன் அருந்த உடல் பிணி தீரும். பசிப்பிணி அகலும். தீவினைப்பதிவுகள் விலகும். பூரணமாம் சமாதி கைகூடும். பிறவிப்பிணி அகலும். இதுவே சித்தவைத்தியம் செய்யும் சேவை. உணர்வோம், மரணத்தை வென்று மரணமிலா பெருவாழ்வை அடைவோம்.

பூரணம்

 பூரணம் என்றால் என்ன? மரணம் -  தன்னிலிருந்து அட்சரமாகிய பிராணன் என்ற உயிர் வெளியில் சென்றழிவது. பூரணம் - தன் அட்சரமாகிய பிராணன் என்ற உயிர் தன்னில் நிறைந்து தானாய் தன்மயமாய் ஆன நிலை. பூரணம் பெற்ற ஜீவன் புறத்தே யாதொன்றையும் நாடாமல் தன்னிலே லயித்து ஜீவ சேவையாம் ஈஸ்வரசேவையை செய்து உய்யும். ஈஸ்வரசேவையின் மூலம் தேகம் ஓளியால் நிறம்பி ஒரு சூரியனைப்போல சமாதியில் ஒடுங்கி இருக்கும்.