Posts

Showing posts from 2021

கால் வலி

 🇨🇭#ஆணோ_பெண்ணோ #கால்_வலி_பற்றி #கூறாதவர்கள்_யாரும்_இல்லை…❗❗ ⭕ காரணம்………❓ நம் காலை அத்தனை பாடாய்படுத்தி விடுகின்றோம். அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தேய்வு, எலும்பு, தசை, தசைநாரில் ஏற்படும் காயங்கள், சுளுக்கு, ரத்தகட்டி, குறைவான ரத்த ஓட்டம், சுருள் சிரை நரம்பு (varicose vein) என பல காரணங்களால் கால் வலி உண்டாகின்றது. ♦கால் ஆடு தசை வலி ஏன் உண்டாகின்றது❓ அடிபடுதல், வீக்கம், சருமம், தசை, எலும்பு, மூட்டு ஆகிய கீழ் கால் பகுதிகளில் காயம் ஏற்படுதல் காரணமாக உள் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படுதல், அதிக கால் உழைப்பு, கிருமி பாதிப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்றது. ♦அடிக்கடி ஏன் கால் வலி என்கிறோம்❓ காலின் ஆழ்ந்த ரத்த குழாயில் உணர்வு ஏற்பட்டிருக்கலாம். நீண்ட காலம் படுக்க வேண்டிய உடல் பாதிப்பு ஏற்படும் பொழுது கால்களுக்கு பயிற்சி இல்லை என்றால் இவ்வாறு ஏற்படலாம். வீக்கம், பிடிப்பு, வலி ஏற்படலாம். மூட்டு வலி, மூட்டு தேய்மானம் அதிகமாகக் காணப்படும் ஒன்று. எலும்பிலோ, சதையிலோ கிருமி பாதிப்பு ஏற்பட்டு வீக்கம், சிவந்து போதல், வலி ஆகியவை ஏற்படலாம். நரம்பு பாதிப்பினால் வலி, மரத்து போகுதல், குறு குறுத்தல் ஏற்ப

அதலைக்காய்

 (அதலக்காய் விதை கிழங்கு கிடைக்கும் தொடர்புக்கு 9543347807) (கிலோ மற்றும் பீஸ் கணக்கில் கிடைக்கும் ) புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும் நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான். இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது. 8 Health Benefits of Momordica ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து. அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது எ

அக்கி அனுபவ மருந்து

 அக்கிக்கு அனுபவ மருந்து சிலாசத்து பற்பம் - 1 சிட்டிகை சங்கு பற்பம் - 1 சிட்டிகை குங்கிலிய பற்பம் - 1 சிட்டிகை 3 வேலையும் உணவுக்கு முன் சதாவரி நெய்யில் வெண்பூசணி லேகியம் 1 ஸ்பூன் உணவுக்கு பின் 3 வேலையும். மேல் பூச்சு மற்றும் பொம்மை வரைய பூங்காவி(அ) செம்மண் நன்றாக பொடித்து ஒரு அகலில் வைத்து அக்கி வந்தவரை கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்து முதுகு பக்கம் வெற்றிலை பாக்கு வைத்து குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்கி கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து அந்த தண்ணீரை பூங்காவியில் ஊற்றி குழைத்து முதுகில் பொம்மை வரைய வேண்டும். அக்கி பட்ட இடத்தில் மேல் பூச்சாக இதே மருந்தை போடவும். பிறகு மிளகாய், மிளகு, உப்பு கல்லை ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி அவரின் இடது கையில் கொடுத்து 3 வழி கூடும் இடத்தில் போட்டுவிடசொல்லவும். பத்தியம் : மாமிசம் சாப்பிடக்கூடாது. பாயில் படுக்கக் கூடாது.  இது எங்கள் குடும்ப முறையில் உள்ளது.  நன்றி, மேலும் பயணிப்போம்... J.லோகேஷ் குமார், வேலூர்.

மூலம் பௌத்திரம் மலக்குடல் புண் ஆற

 மலக்குடல் இரணம் மற்றும் குடல் இரணங்கள் ஆற வைத்தியம் ஆடுதீண்டாப்பாளை சாறு - 100 மிலி ( சாறு வரவில்லையென்றால் பசும்பால் விட்டு அரைத்துக்கொள்க) பூக்காத குப்பைமேனி இலைச்சாறு - 250 மிலி விளக்கெண்ணெய் - 500 மிலி விளக்கெண்ணெயுடன் சாறுகளை கலந்து சிறு தீயில் மணல்மணலாக வரும்வரை காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்க. ( ஒரு குச்சியை காயும் எண்ணெயில் நனைத்து அது எரியும்நிலை வந்தால் பதம் வந்துவிட்டது என்று பொருள்) வடித்து வைத்த எண்ணெயை காலை/ மாலை காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிடவும். பத்தியம் - கருப்புகவுனி மோர்சாதம் மட்டும் உட்கொள்க ----------------------------------- குடல் புண்  ஆற மணத்தக்காளி சாறு 1-1/2 கட்டு பிழிந்தது மாங்கொட்டை பருப்பு - 250 கிராம் மாங்கொட்டை பருப்பை கல்வத்தில் மைய அரைத்து பவுடராக்கவும். மணத்தக்காளி கீரை சாறை சிறிது சிறிதாக சேர்த்து மாத்திரைகளாக உருட்டும் பதத்திற்கு உறவாடச்செய்து சிறு பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை  3 வேளை உணவுக்கு முன் 2 மாத்திரைகளை 1/2 உப்பு சேர்த்த பசுமோர் 200 மிலியுடன் குடிக்கவும். பத்தியம்- காட்டுயாணம் அல்லது க

செம்பருத்தி பூ கசாயம்

 *          இதயம் கல்லீரல் சிறுநீரகம்     இவைகளை ஆரோக்கியமாக இயக்கும்                செம்பரத்தை பூ கசாயம் கசாய செய்முறை    பதினைந்து செம்பருத்திப் பூக்களை  ஒன்றிரண்டாக இடித்து கால் லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாதியாக சுண்டும் படி காய்ச்சி ஆற வைத்து பின் இதை பருக வேண்டும் இதனோடு சர்க்கரையோ மற்ற எந்த இனிப்பு வகைகளையோ கண்டிப்பாக சேர்க்கக்கூடாது பயன்கள்   இதயம் கல்லீரல் சிறுநீரகம் இவைகளில் பலகீனம் இருந்தால் இது நிவர்த்தியாகும் பலவீனம் இல்லாமல் இருந்தால் இந்த உறுப்புகள் மேலும் பலம் பெறும் சிறு குழந்தைகள் முதல் ஆண் பெண் இருபாலரும் ஒரு மாதகாலம் பருகிவந்தால் உடலில் ஏற்படுகின்ற முன்னேற்றத்தை நாமே அறிந்து கொள்ளலாம் மேலும் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனும் உதிரப்போக்கு நோய் குணமாகும் செம்பரத்தை பூ கசாயம் எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இதய பலவீனத்தால் இருக்கின்ற சிறு குழந்தைகளுக்கு இந்த கசாயம் நல்ல ஒரு பலனை தரும் தினமும் காலை வேளையில் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் சாப்பிட்டால் இதய பலவீனம் குணமாகும் இதயம் மற்றும் கல்லீரல் சிறுநீரக குறைபாடுகளுக்குஆங்கில மருத்துவத்தை கடைபிடித்து வருபவரும்

ஆண்மை வீரியம்

 *       என்றும் அழகாய் இருப்பதற்காக சித்தர்கள் அருளிய இளமையின் ரகசியம்   ஒரு கைப்பிடி அளவு ஆலமரத்து விழுதின் இளம் துளிர்களை ஐந்துகிராம் பனங்கற்கண்டுடன் சேர்த்து நன்றாக இடித்து தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து இதை அதிகாலையில்பருகி வந்தால் உடல் உறுதிப் பெறும்    உடலின் உள் உறுப்புகள் அனைத்தும்  பலம் பெறும் அழகான உடல் அமைப்பு உண்டாகும் அலியாக இருப்பவருக்கும் ஆண்மையை தந்து ஆண் உறுப்புக்கு வலிமையைதரும்   வாலுளுவை அரிசியைசூரணம் செய்து இதில் ஐந்து கிராம் எடுத்து பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டால் என்றும் மேனி தளராது உடல் சுருக்கம் ஏற்படாது தேகம் அழகாய் மிளிரும் சகல மிதமான தீராத நோய்களும் தீரும்   கருடன் கிழங்கை கொண்டு வந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பசும்பாலில் வேகவைத்து அதன்பின் வெயிலில் இட்டு உலர்த்தி இதை சூரணமாக செய்து கொண்டு இதில் மூன்றுகிராம் பொடியை காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் தளர்ந்த உடலும் இறுகி உறுதியாகும்   உடலில் அழகு ஏற்படுவதை உணரலாம் மேலும் இதனால் சர்வ விஷக்கடிகளும் நீங்கும் மேலும் நரை திரைகள் வராது     மூக்கிரட்டை வேரை சூரணம் செய்து கொண்டு பசும்பாலில் கலந்து பருக

ஓமம்

 #ஓமத்தின் #மருத்துவக்குணங்கள்... உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும். புகைச்சல் இருமல் நீங்க சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு

நவீன சித்த மருத்துவம்

 " மாற்றம் ஒன்றே மாறாதது" அன்பு சித்தவைத்தியர்களுக்கு, சித்தத்தை சிந்தையில் வைத்து இயம்பும் வைத்தியம் "சித்தவைத்தியம்" (சித்தம்+ வைத்து+ இயம்). சித்தம் என்பது பலபடித்தானது. அண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றாய் சமைந்தது அதாவது சேர்ந்தது. அதேபோல் சித்தவைத்தியம் என்பதும் பலகலைகளை ஒன்றாய் சேர்த்தது. சித்தவைத்தியம் என்பது மன ஆராய்ச்சி, வர்மம், மூலிகை வைத்தியம், விலங்குகளின் கொடைகள் அதாவது பால், மூத்திரம், கோரோசனை போன்ற வஸ்துகள், பாசானம் என பல விசயங்களை உள்ளடக்கியது. மேலே சொல்லப்பட்ட பொருட்களை , அரைப்பது, புடம் போடுவது, ஒன்றாய் உறவாடச்செய்வது, நொதித்தல் செய்வது என பல நிலைகளை கடந்தே மருந்துகள் உருவாகின்றன. இதில் விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவால் சில பொருட்களை பிரித்து பயன்படுத்தும் முறையை கண்டமையால் அசாத்தியமான அதாவது சாதாரண முறைகளால் செய்ய இயலாத  மருத்துவ மூலக்கூறுகளை பிரித்தெடுத்து அதை உபயோகிக்கும் கலையை சாத்தியமாகிறது. இதைப்போன்றதொரு கண்டுபிடிப்பே 8 வகையான மூலக்கூறுகளால் ஆன பசுவின் சீம்பாலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட " உயிரின் நோயெதிர்ப்பாற்றல் கடத்திகள்" அதாவது Transf

பனங்கிழங்கு

 பனங்கிழங்கில் இவ்வளவு பலன்களா? பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது. இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, சில நாட்கள் கழித்து அது முளை விட்டு பனை செடியாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடலாம்.பனம் கிழங்கின் முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவில் ஒரு அடி வரை நீளமாக காணப்படும். பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பனங்கிழங்கில் #இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும். பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மி

கருஞ்சீரகம்

Image
பித்தப்பைக் கல் கரைக்கும், மாதவிடாய்க் கோளாறு நீக்கும்... கருஞ்சீரகம்! #BenefitsOfBlackCumin seed கருஞ்சீரகம்! curable Get Offer க ருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ எக `இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது.  மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள்,  வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.  சக