பூரணம்

 பூரணம் என்றால் என்ன?


மரணம் -  தன்னிலிருந்து அட்சரமாகிய பிராணன் என்ற உயிர் வெளியில் சென்றழிவது.


பூரணம் - தன் அட்சரமாகிய பிராணன் என்ற உயிர் தன்னில் நிறைந்து தானாய் தன்மயமாய் ஆன நிலை.


பூரணம் பெற்ற ஜீவன் புறத்தே யாதொன்றையும் நாடாமல் தன்னிலே லயித்து ஜீவ சேவையாம் ஈஸ்வரசேவையை செய்து உய்யும்.


ஈஸ்வரசேவையின் மூலம் தேகம் ஓளியால் நிறம்பி ஒரு சூரியனைப்போல சமாதியில் ஒடுங்கி இருக்கும்.

Comments