ஆண்மை வீரியம் பெற

 ஆண்மையை பெருக்க !


1கிராம்தாமரைவிதையை அரைத்து.பாலில் கலந்து தினமிருவேளை சாப்பிட்டுவர தாதுபலம் பெறும்.


நெருஞ்சில்விதைகளை பாலிலவித்து,பொடித்து காலைமாலை அரைதேகரண்டி பாலில் கலந்து பருகிவர ஆண்மை பெருகும்.


துளசி இலையை குறிப்பிட்டளவு தினமுமுண்டுவர ஆண்மை அதிகரிக்கும்

தூதுவேளை பூவையுலர்த்திப் பொடித்து அரைதேகரண்டி தினம் காலை,பாலில் சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்.


அரைக்கீரையை நெய்,மிளகு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுவர தாதுபலம் அதிகரிக்கும்

முருங்கைவிதைசூரணம் இரவில் பாலுடன் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும்

.தோல் நீக்கிய முருங்கை விதையை பாலில் வேகவைத்து,தேன் கலந்து இரவில் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும். 


சுத்தம் செய்த ஆவாரைபிசின் 3கிராம்,100மிலி நீரில் இரவு ஊற வைத்து காலை பனங்கற்கண்டு கலந்து பருகிவர தாது விருத்தியடையும்.


நன்னாரி வேர் குடிநீர் சூடாக பருகிவர ஆண்மை பெருகும்.


பிரண்டைஉப்பு2கிராம்,ஜாதிக்காய்தூள்5கிராம் கலந்து சாப்பிட்டுவர தாதுநட்டம் குணமாகும்.


செம்பரத்தைபூச்சூ ரணம்10கிராம்,மருதம்பட்டைச்சூரணம்5கிராம் கலந்து பாலில் சாப்பிட்டுவர தாதுபலம் பெறும்.ஆண் மலடு நீங்கும்.


செம்பரத்தை மகரந்தக்காம்பு சூரணம்5கிராம் பாலில் சாப்பிட்டுவர ஆண்மலடு நீங்கும்

செம்பரத்தைபூச்சூரணம்,முருங்கைபூ அல்லது விதைச்சூரணம் சேர்த்துச்சாப்பிட்டுவர ஆண்மைக்குறைவு நீங்கும் .


சர்க்கரைவேம்பின் பாலை 48 நாள் வைத்திருந்து சாப்பிட நாதம் தூய்மையாகும்.விந்து கட்டும்.பெண்மலடு நீங்கும்.


ஓரிதழ்தாமரையை அரைத்து 10கிராம்,பாலில் பருகிவர ஆண்மை பெருகும்.விந்து ஒழுக்கு நிற்கும்.


நிலப்பனங்கிழங்கினோடு நீர்முள்ளிவித்தும் கூட்டி,புலப்படும் நெருஞ்சிவித்திற் பூனைக்காலி விதையினோடு,இலப்படும் இவற்றையிடித்து தூள்செய்து பாலில் கொண்டால் பலப்படும் விந்து என்று பேசினோர் பெரியோர்தாமே! 


ஓரிதழ்தாமரைசூரணம்5கிராம் பாலில்பருக சுக்கிலம் பெருகும்.விந்திழப்பு தீரும்

தூதுவேளைஇலை,அம்மான்பச்சரிசிஇலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர தாது,உடல் பலப்படும்.


நாட்டுவெங்காயத்தை நெய்யில் வதககி உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்

அம்மான்பச்சரிசி,கீழாநெல்லி இலைகள் சம அளவெடுத்து, 


எலுமிச்சையளவரைத்து,200மிலி எருமைதயிரில் சாப்பிட்டுவர விந்துஒழுகுதல் கட்டுப்படும்.உடம்புஎரிச்சல்,நமைச்சல்,மேகரணம் தீரும்

பிராய்பாலுடன் வறுத்த கடலைமாவைப்பிசைந்து,பட்டாணியளவு மாத்திரை செய்து காலைமாலை 2மாத்திரை சாப்பிட்டுவர ஆண்மை அதிகரிக்கும்

முருங்கைவிதை,பூனைக்காலிவிதை,நிலப்பனை,பூமிசர்க்கரைகிழங்கு சமனெடுத்துப்பொடித்து,5கிராம்,5மிலி அத்திப்பாலில் காலைமாலை 20நாள் உட்கொள்ள அளவுகடந்த தாதுவளர்ச்சி தரும்.


ஆலம்பழம்,விழுது,கொழுந்து சமனரைத்து,எலுமிச்சையளவு காலை 120நாள் உட்கொள்ள ஆண்மலடு நீங்கும்.


அமுக்கராசூரணம்10 கிராம், கசகசா30கிராம், பாதாம்பருப்பு 10கிராம்.சாரபருப்பு 5கிராம் ஊறவைத்தரைத்து 200பாலில் சர்க்கரை சேர்த்து காலையில் பருகிவர தாது விருத்தியாகும்.இளமை திரும்பும்.


எருக்குஇலையை அரைத்து,நெல்லிக்காயளவு,பாலில் கலந்து 48,96நாள் சாப்பிட ஆண்மலடு நீங்கும் .


கீழாநெல்லி.ஓரிதழதாமரை சமனரைத்து, நெல்லிக்காயளவு,பாலில் மண்டலம் கொள்ள வாலிப வயோதிகம் நீங்கும் .


கோரைக்கிழங்குசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் தினமிருவேளை கொள்ள புத்திக்கூர்மை,தாதுவிருத்தி,பசித்தீவனம்,உடற்பொலிவு உண்டாகும்.


தாளிக்கீரைஇலைகளை பருப்புடன் கூட்டாக சமைத்து நெய் சேர்த்துண்டுவர விந்திழப்பு குணமாகும்.


கானாவாழைசமூலம்,தூதுவேளைபூ,முருங்கைபூ சேர்த்து 2ல்1ன்றாய்க்காய்ச்சி பால்,கற்கண்டு கலந்து மண்டலம் கொள்ள தாது பலம்பெறும் .


கருவேலம்பிசின்2கிராம் நெய்யில் வறுத்துப்பொடித்து சாப்பிட்டுவர தாது பலம்பெறும்தீரும்.தாதுபலப்படும் .


வெண்தாமரைபருப்பை தூள்செய்து நீடித்து சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி