கருநொச்சியிலை

 #புற்றுநோய்க்கு_கருநொச்சி_மூலிகை 


கருநொச்சியானது, நொச்சி செடியைப் போல் தோற்றம் கொண்டிருந்தாலும், இலை, தண்டு, பூ இவை கருப்பு நிறமாகவே இருக்கும். இது நீர் நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் வளரக் கூடிய ஒரு வகை புதர்ச் செடியாகும். 3 முதல் 5 கூட்டு இலைகளை உடையது. இது ஓர் அரிய வகை முலிகை ஆகும். கருநொச்சியின் ஒரு கிலோ பல ஆயிரகணக்கில் விலை போகிறது ஒரு சிறிய செடியின் விலை 500லிருந்து ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையிலும் சில சந்தையில் அல்லது மூலிகை பண்ணையில் விற்பனையாகிறது.

இருந்தாலும் இப்போது இந்த மூலிகை செடிகள் கிடைப்பது கடினம்

ஒருவேளை கிடைத்தால்

வாங்கிவந்து உங்க வீட்டு தோட்டத்தில் வையுங்கள்

இது உயிர் காக்கும் மருதத்துவ மூலிகை


வெண்ணொச்சிக் குச்சிகள் வேலி பின்னவும், கூடை பின்னவும் பயன்படுகிறது.

கருநொச்சி இலையை மாடுகள் மேயும். ஆனால் வெண்ணொச்சியை ஆடுகள் ஒன்றிரண்டு முறைதான் கடிக்கும். கருநொச்சி இலையின் காட்டமான மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை.

ஆதலால் தானிய பாதுகாப்புக்குக் கருநொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் கருநொச்சியைப் பயன்படுத்துகின்றனர்.

நொச்சியில் பல ரகங்கள் இருந்தாலும் வெண்ணொச்சிதான் பல இடங்களில் வளர்கிறது.

இதில் வேதிப் பொருள்களான ஆண்ட்ரோக்ராஃபோலைடு, பியுனாய்டு டை டெர்ப்பீன் கஃபியிக், க்ளோரோ ஜினிக், செறிவற்ற லாக்டோன், சைட்டோ ஸ்டீரால் போன்றவை காணப்படுகின்றன. 


நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் அதிகமான பயன் கிடைக்கும்.

காய்ந்த இலைகளின் புகையானது, தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும் நாள்பட்ட புற்றுநோய் புண்களில் இருந்தும், துர்நாற்றமுள்ள சீழ்ப் பகுதிகளை சரி செய்யவும் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாற்றைப் பயன்படுத்துகின்றனர்.


மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

குறிப்பாக

மிளகு,மஞ்சள், கருநொச்சி சாறு இந்த மூன்றும்

புற்று நோக்கி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.


சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் புற்று நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன ஆனால் புற்று நோயை முற்றிலும் ஒழிக்க கருநொச்சி, மஞ்சள், மிளகு இந்த மூன்றும் அவசியம்.

இவைகள் ஒரு காய கற்ப மூலிகை மற்றும் ரசவாத மூலிகை என்று அழைக்கப்படுகிறது.

கை கால்களில் ஏற்படும் ஓயாத குடைச்சலை குணமாக்கும்.


மேலும் நீர்ப்பினிச்சம், மண்டை குத்தல் குணமாகும்.

கை கால் செயலிழந்தால் அதை சரி செய்ய இந்த நொச்சி இலை அமிர்த சஞ்சீவி போல் உதவுகின்றது 

கருநொச்சி இலைகளின் உயிர்ச்சாறு, சீதப்பேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்குப் பயனளிக்கிறது.

ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றின் சாற்றினைக் கலந்து செய்யப்படும் மாத்திரைகள் குழந்தைகளின் அஜீரணத்தைப் போக்கும்


கருநொச்சி தைலமானது ஜுரம் தடுக்கும் மற்றும் வாய் குழறுதலைத் தடுக்கும். மார்புச் சளிக்கு நல்ல மருந்து.

நீரிழிவு நோய், மேகவெட்டை நோய் குணமாகும். நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரம் குறையும்.

இதன் இலையை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும்.

இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது.

இதன் இலையை வதக்கி துணியில் வைத்து தாங்கக் கூடிய சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் கைவிரல், கால்விரல் கணுக்களின் வீக்கங்கள் குறையும். இது நன்கு மருத்துவக் குணங்கள் நிறைந்தது. நொச்சி இலைச்சாறு கால் லிட்டர், பொடுதலைச்சாறு கால் லிட்டர், நல்லெண்ணெய் கால் லிட்டர் எடுத்து தைலம் காய்ச்சி, மூக்கில் நுகரச் செய்தால் கண்டமாலை என்னும் கொடிய நோய் குணமாகும் நன்றி.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி