இடு மருந்து

 

               

 கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள்,     15 குறி சொல்லும் சாமியாடிகள், 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள், 6 குடுகுடுப்பை                     காரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள்ஆகியோரை நேரிடையாக சந்தித்து              பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது.                           

2009ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்று                     மருத்துவர்கள் மாநாட்டில் uses and effects of indian toxical plants என்ற தலைப்பிலும் , 2010                   பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில்               மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட  எனது ஆய்வு                                    கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது.                                                 

எனது ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள்                 விகடன் பத்திரிக்கையும்,2011 ஜனவரி 9ம் தேதி தினமலர் மற்றும் காலை கதிர்                                   பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன .                                                                                                          

                                                                                    Dr.G. முகுந்தன்.BMHS.DYNT,                        

                     இடுமருந்து. . . . . .

         எனப்படும்  ஹெர்பல் டாக்ஸிகாலஜி.



இடுமருந்து என்பது ஜோதிட பாஷையில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.செய்வினை... மருந்துவைத்தல்..கைமருந்து என்று பல பெயர்களில் சொல்லப்படும் இந்த கறுப்பு வித்தையால் தீராத உடல் பாதிப்புகளையும் மனபாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.


பொதுவாக நீண்ட நாட்களாக நோயினால் ஆவதிப்படுபவர்கள் மருத்துவ சிகிசைகள் பயனளிக்காத சுழ்நிலையில் தங்களுக்கு யாரோ மருந்து வைத்துவிட்டார்கள் என்று சொல்வதை பல சந்தர்ப்பங்களில் நாம் கேட்டிருக்கிறோம்.உண்மையில் மருந்து வைத்து ஒருவரின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தமுடியுமா இடுமருந்தால் தீராத நோய்களை உறுவாக்க முடியுமா என்பது நிறைய பேரின் சந்தேகமாக இருக்கிறது... 


இடுமருந்து என்ற விஷபோஜனம் நடைமுறையில் மிகமிக சாத்தியமான ஒன்று. மாந்த்ரீக சாஸ்திரம்...குட்டிசாத்தான் வேலை...யட்சிணி உபகர்மம் என்றெல்லாம் மிகைபடுத்தி சொல்லப்பட்டாலும் இடுமருந்து என்பது விஷதன்மை வாய்ந்த மூலிகைகளை உண்ண கொடுத்து அதன் மூலம் உடல் மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும்.

இதில் மந்திரமோ..அமானுஷ்யமோ...தெய்வதன்மையோ...மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமோ எதுவும் இல்லை. இவை அனைத்தும் மிகமிக புத்திசாலிதனமாக கையாளப்படும் சாதாரண ஸ்லோ பாய்ஸன் ரக பாதிப்புகளே.



இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருப்பதை போலவே விஷத்தன்மை வாய்ந்த நச்சு தாவரங்களும் நிறைய உள்ளன. உதாரணமாக அரளி விதையை தின்றால் உயிர் போகும் என்பதும்..ஊமத்தை விதையை தின்றால் மூளை பாதிப்பு ஏற்படும் என்பதும் சாதாரண கிராமத்து மக்களுக்கு தெரியும். புகையிலை, கஞ்சா, அபின் போன்றவை உளவெறியூட்டும் போதையை தரும் தாவரகள் என்பதும். கள்ளிசெடி.ஊமத்தை செடி, பார்தீனியம் ஆகியவை மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


அதேபோல உடல் பாதிப்பை ஏற்படுத்தும் நூற்றுக்கணக்கன தாவரங்கள் உள்ளன.தலை சுருளி..கற்றாமரை....ஆடை ஓட்டி..நீர்மேல் நெருப்பு.. பின்துடரி.. குன்றிமணி.. பொற்றிலை.. உரோம வேங்கை..பொற்றாலை கரிப்பான்.. செங்கழுநீர்.. கர்ன்செம்பை.. மரக்குறும்பை.. கோழிக்கொல்லி.. காட்டுசிகை..அழிஞ்சில்..சீமைகாடைகண்ணி..குன்றிமணி..இசப்புகோல்விதை..போன்றவை விஷத்தன்மை வாய்ந்த சிலவகை மூலிகைகளாகும். இவ்வறு சுமார் 185 வித மூலிகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 90 வகை மூலிகைகள் தமிழகத்தின் கொல்லிமலை பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன இதனால்தான் பெரும்பாலான ஜோதிடர்கள், மாந்த்ரீகர்கள், குறிசொல்பவர்கள் கொல்லிமலை பகுதியில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.


இத்தகைய மூலிகைகளில் உள்ள நச்சுதன்மை உடல் திரவங்களையும் உடல்  உள்ளுறுப்புகளையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையுடையவை. உதாரணமாக குன்றிமணியில் உள்ள ஆப்ரின் விஷமும்,  இசப்பு கோல்விதையில் உள்ள ரைசின் விஷமும்..ஊமத்தை விதையிலுள்ள டெக்ஸ ஆல்பமின் விஷமும்..அரளி கள்ளி மந்தாரையிலுள்ள தெவெற்றியா A விஷமும்..ஆடைஒட்டி உரோம வேங்கையிலுள்ள அம்ப்ரோசின் விஷமும்..காக்கை கொல்லியில் உள்ள ரே டாஸின் விஷமும்.. பொன் ஊமத்தை,நீல கதிரியில் உள்ள அட்ரோப்பின் விஷமும், மரக்குறும்பை, கழஞ்சு ஆகியவற்றில் உள்ள மோர்பின் விஷமும்..தலைசுருளி, கற்றாமரை ஆகியவற்றில் உள்ள குராரி விஷமும்..நீர் சிலும்பை, நீர்பாசி,நீர்மேல் நெருப்பு ஆகியவற்றில் உள்ள ஆர்சனிக் விஷமும் உடல் உறுப்புக்களையும் உடல் திரவங்களின் சமநிலையையும் பெரிதாக  பாதிக்ககூடியதாகும்.



பொதுவாக இத்தகைய மருந்துக்களை தயாரிக்க 1400 கிராம் மூலிகைகள் அரைத்து பொடியாக்கி சுமார் 200 கிராம் அளவிற்கு திடமாக்கப்படுகிறது. மூலிகை கலவையின் நீர் சத்து முழுவதும் உலரவைத்து வெளியேற்றப்படுவதால் அவற்றின் சத்துக்கள் இறுக்கப்பட்டு சிறிதளவு கொடுத்தாலே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். 

பெரும்பாலான இடங்களில் தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள்,நண்பர்கள் மூலமாக உணவு பொருட்களுடன் சேர்த்தும், மாத்ரீகர்கள் குறிசொல்பவர்கள் மூலமாக பிரசாதம் என்ற பெயரிலும் கொடுக்கப்படுகின்றன. 90சதவீத தாவர நச்சுக்கள் மணமும் சுவையும் அற்றதாக இருப்பதால் உணவில் கலக்கும் போது எவ்வித மாற்றமும் தெரிவதில்லை. மருந்துக்கள் அனைத்தும் புடம் போடப்பட்டு சக்தியூட்டப்படுவதால் மிக குறைந்த அளவு கொடுத்தாலே தேவையான அளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடிகிறது.



அதுமட்டுமல்லாமல் இத்தகைய விஷ மருந்துக்கள் ஒரு முறை உடலுக்குள் செலுத்தப்பட்டால் சாதாரணமாக உட்கொள்ளும் சில  உணவுவகைளில் இருந்து தேவையான சக்தியை பெறுவதால் அதன் நச்சுதன்மை நீண்டநாட்களுக்கு உடலில் தேங்கி இருக்கும். உதாரணமாக தாவர நச்சுக்கள் உடலில் இருக்கும் போது பழைய உணவுகளை அதிகம் உட்கொண்டால் பழைய உணவுகளில் உள்ள பாஸில்லாய் என்ற பாக்டீரியாக்கள் நச்சுதன்மையை  அதிக படுத்தும். சேனைகிழங்கு, சேப்பங்கிழங்கு, புளி,கேசரிபருப்பு,மது,பழைய அசைவ உணவுகள், கருவாடு,வாத்து முட்டை, புளித்த உணவுகள் ஆகியவை உடலிலுள்ள நச்சு தன்மையை  நீங்காமல் இருக்க செய்யும் தன்மை கொண்டவை. இதனால்தான் ஒருமுறை கொடுக்கப்பட்ட விஷ உணவுகள் பல வருடங்கள் கூட பாதிப்புகளை தருகின்றன.


மிக சாமர்த்தியமாக வழக்கமான உணவுகளுடன் கலந்து கொடுக்கப்படும் இத்தகைய தாவர நச்சுக்கள் ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து உடல் திரவங்கள் எனப்படும் ஹார்மோன்கள் பெப்டைட்டுகள் மற்றும் என்சைம்களின் சரிவிகிதத்தையும் அடர்த்தியையும் பாதிக்கின்றன இதனால் மூளை மற்றும் நரம்பு செல்களின் இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. என்சைம்கள் பாதிக்கப்படுவதால்தான் விஷ போஜனம் எனப்படும் இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்கள் தீராத வயிற்றுவலி, பசியின்மை, வயிற்றில் குத்தல் , மலசிக்கல், எப்போதும் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு ஆகிய பாதிப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.


ஹார்மோன்கள், பெப்டைட்டுகள்,என்சைம்கள் எனப்படும் உடல் திரவங்கள் பாதிக்கப்படுவதால் வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளால் உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் நச்சுபாதிப்புகளை பெரும்பாலும்  கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் தான் ஸ்கேன், எக்ஸ்ரே,லேப் டெஸ்ட், என்டோஸ்கோப் போன்ற சோதனைகளில் எந்த குறையும் தெரியாத போதும் உடல் உபாதை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவ பரிசோதனைகளால் தெரியாத பாதிப்புகளை  உடலில் மாற்றங்களைக்கொண்டு  அடையாளம் காணமுடியும். 

குறிப்பாக வியர்வையில்  கற்றாழை நாற்றம்..பாதத்தில் ஊறல், குத்தல் மற்றும் அரிப்பு..கணகளில் பூஞ்சை படிந்தாற்போன்ற வெண்மை படர்ந்திருப்பது...நாக்கில் வெடிப்புகள் ..... மூச்சுகாற்றில் வீச்சம் அல்லது புகை நாற்றம்..விரல் நகங்களில் வெடிப்பு..வயிற்றில் குத்தல்..மேல் வயிற்றில் பாரமாக இருப்பது...பசியின்மை..அடிக்கடி குமட்டல்... தொடர்ந்து மலசிக்கல் இருப்பது...உடல் வெளுத்து போதல்...சருமத்தில் வெடிப்புகள்...வேகமாக உடல் இளைத்தல்...விலாபகுதியில் வலி...

கைகால் நடுக்கம்...திடீர் திடீரென்று உடல் துடிப்பது... தூக்கத்தில் உடலை முறுக்குவது...அடிக்கடி உயரத்தில் இருந்து விழுவது போன்ற கனவு வருவது... காரணமற்ற மன அழுத்தம்... போன்றவை உடலில் விஷதன்மை இருப்பதற்கான சில அறிகுறிகளாகும்.


பொதுவாக நீண்ட நாட்களாக காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடலில் நச்சுதன்மை இருக்கிறதா என்று அறிந்து கொள்வது நல்லது.அதே போல் நோய் ஏற்பட்டு அதற்கான காரனங்கள் பரிசோதனைகளிலும் ஆய்வக சோதனைகளிலும் தெரியாத போது உடலின் நச்சுதன்மையை சோதித்து கொள்வது நல்லது. 


பொதுவாக கொடுக்கப்பட்ட  நச்சுக்களுக்கு தக்கவாறு உடலில் பாதிப்புகள் இருக்கும்.  உதாரனமாக களஞ்சிக நஞ்சு என்பது தோல் நோய்களையும் சரும பாதிப்புகளையும் ஏற்படுத்தும்...

பாணிக்கம்ப நஞ்சு வாத பிரச்சனைகளையும் உடலில் காரணமற்ற வலிகளையும் ஏற்படுத்தும் ....

களு நஞ்சு சுரம், நுரையீரல் பாதிப்புகள், உடல் நடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்..

சூலை நஞ்சு என்பது நகரும் வலிகள், உடல் செயல் இயக்கத்தை முடக்குவது ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்... 

பஞ்சவ நஞ்சு ஈரல் நோய்களையும்...குன்ம நஞ்சு குடல் மற்றும் வயிற்று நோய்களையும் ஏற்படுத்தும்...

குதம்ப நஞ்சு நரம்பு மண்டலத்தையும் ஹார்மோன் சமசீரின்மையையும், 

மண்டூக நஞ்சு மூளை  மற்றும் மன பாதிப்புகளையும்  ஏற்படுத்தும்.



பொதுவாக இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துபவர்கள் இரண்டு அல்லது மூன்று வகையான நச்சு தாவரங்களை பயன்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். சூலை நஞ்சு மற்றும் குதம்ப நஞ்சுள்ள தாவர கலவை  சேர்த்து கொடுக்கப்பட்டால்  பராலிஸிஸ் எனப்படும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குதம்ப நஞ்சு மற்றும் மண்டூக நஞ்சு சேரும் போது கோமா எனப்படும் மூளைசாவு ஏற்படும். 

இத்தகைய நச்சுமருந்துக்களை தயாரிக்கும் முறைகள் பெரும்பாலும் வழிவழியாகவே கற்றுதரப்படுகின்றன. மாந்த்ரீகம், குறிசொல்வது,குரளி வித்தை  போன்ற செயல்களை செய்பவர்களே பெரும்பாலும் இதன் தயாரிப்பு முறைகளை தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு சில இடங்களில் சில ஆதிவாசிகள் இத்தகைய தயாரிப்பு முறைகளை  அறிந்திருக்கின்றனர். ஆனால் இதன் தயாரிப்பு ரகசியத்தை தங்களை சேர்ந்தவர்களை தவிர வேறு யாருக்கும் இவர்கள் கற்று தருவதில்லை.


உடல் பாதிப்புகள்.... .....

தாவர நஞ்சியலை (ஹெர்பல் டாக்ஸிகாலஜி) பொருத்தவரை நவீன கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னரே கருவூர்சித்தர், புலிப்பாணி சித்தர், சரகர் போன்றவர்கள் நிறையவே சொல்லி இருக்கின்றனர். இதில் அஷ்ட சித்து எனப்படும்  களுநஞ்சு..களஞ்சிக நஞ்சு..பாணிக்கம்ப நஞ்சு சூலை நஞ்சு..பஞ்சவ நஞ்சு..குன்ம நஞ்சு..குதம்ப நஞ்சு..மண்டூக நஞ்சு என்ற எட்டு வகையான நஞ்சுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன.


இவற்றில் களஞ்சிக நஞ்சு தோல் நோய்களையும், பாணிக்கம்ப நஞ்சு வாத நோய்களையும், களு நஞ்சு சுரம், அஸ்தி சுரம், விஷ சுரம் நுரையீரல் பாதிப்புகள் ஆகியவற்றையும், சூலை நஞ்சு  வலிகள், கட்டிகள், புண்கள் ஆகியவற்றையும், பஞ்சவ நஞ்சு குடல் மற்றும் ஜீரண உருப்புக்கள் தொடர்பான நோய்களையும்,குன்ம நஞ்சு ஈரல் நோய்கள், ரத்தம் தொடர்பான பாதிப்புகளையும், குதம்ப நஞ்சு நரம்பு நோய்கள்,வலிப்பு நோய், ஹார்மோன் பாதிப்புகள் ஆகியவற்றையும், மண்டூக நஞ்சு மூளை மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளையும் உருவாக்கும்.


உதாரணமாக கேசரி பருப்பில் (பருப்புடன் கலப்படம் செய்வது)  பாணிக்கம்ப நஞ்சு சிறிதளவு உள்ளது.  தலைசுருளி, பொற்றிலை ஆகிய தாவரங்களிலும் இதே பணிக்கம்ப நஞ்சு அதிக அளவில் உள்ளது. கேசரி பருப்பை தொடர்ந்து பல வருடங்கள் உட்கொண்டாலோ தலைசுருளி, பொற்றிலை ஆகியவற்றை 30 கிராமுக்கு மேல் உட்கொண்டாலோ முடக்குவாதம், கைகால் செயலிழப்பு ,பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.

கேசரி பருப்பு கலப்படம் செய்த பருப்பு வகைகளை தொடர்ந்து உட் கொண்டால் முடக்கு வாதம் ஏற்படும் ஆங்கில மருத்துவ ஆய்வுகள் உறுதி படுத்தியிருக்கின்றன.


நீர் சிலும்பை, செங்கழுனீர், மயிர்பாசி ஆகியவற்றில் இருக்கும் பஞ்சவ நஞ்சு ஜீரண தொல்லைகளையும் எடை இழப்பு, பசியின்மை, வயிற்று உபாதைகள், நாள் பட்ட மலசிக்கல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் இது ஆர்சணிக் என்ற ரசாயணத்திற்கு இணையானது.  


பெரும்பாலான குறிசொல்பவர்களால் காதல் வெற்றிக்காக கொடுக்கப்படும் வசிய மருந்தில் மதனகாம பூவுடன்  காட்டு கருவேல முள் பயன் படுத்தப்படுகிறது.இதிலுள்ள பஞ்சவ நஞ்சு  ஈரல் வீக்கத்தையும் பைல் பிக்மென்ட் எனப்படும் ஈரல் நிணநீரின் சம சீரின்மையையும் ஏற்படுத்தும்.


மன பாதிப்புகள்......

மன பாதிப்புகளை ஏற்படுத்துவதில் தாவர நச்சுக்கள் நீண்டகாலமாக மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பேதலிக்க செய்தல் எனப்படும் மன உளைச்சல், மன சிதைவு முதல் உளவெறியூட்டல் அல்லது சித்தபிரமை எனப்படும் தீவிர பாதிப்புகள் வரையில் தாவர நச்சுக்களை பயன் படுத்தி ஏற்படுத்தப்படுகின்றன. ஹைப்பர் சென்ஸிடிவிடி எனப்படும் அதிகம் உணர்ச்சிவசப்படுவது, எப்போதும் இறுக்கத்துடன் மூட் அவுட்டாக இருக்கும்    யுனிபோலர் டிஸார்டர்  (முனி அடித்துவிட்டது என்பது), பக்கத்தில் ஆளே இல்லாமல் மனதுக்குள் குரல்கள் கேட்ட்க்கும் ஷிட்ஸோஃப்ரினியா  (ஏவல் வைத்திருப்பது என்பது), கட்டுபடுத்த முடியாமல் ஒரே எண்ணம் திரும்ப திரும்ப தோன்றும் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (இதை தான் வசியம் என்கின்றனர்),  புத்தி பேதலித்து எந்த உணர்வும் இல்லமல் திக்குபிரமை பிடித்து நிற்கும்  டெம்போரல் லோப் எபிலப்ஸி, குறிப்பிட்ட சமயங்களில் வெறிபிடித்தாற் போல் செயல்படும் பை போலர் டிஸாடர் (பேய் பிடித்திருப்பது  அல்லது சாமி வந்திருப்பது என்பது)  இவை அனைத்தையும் நச்சுதன்மை வாய்ந்த தாவரங்களை கொண்டு ஏற்படுத்த முடியும்.


 பொதுவாக மனித மனத்தின்  அனைத்து இயக்கங்களையும் மூளை மற்றும் மூளைக்கு செல்லும் ஹார்மோன்கள் மற்றும் பெப்டைட்டுகளே நிர்வகிக்கின்றன தாவர நச்சுக்கள் இந்த உடல் திரவங்களில் சமசீரின்மையை ஏற்படுத்தி அதன் சரிவிகித தன்மையை குலைத்து விடுகின்றன இதனால் மூளையின் செயல்பாடும் மனத்தின் இயக்கமும் நிலைகுலைந்து போகிறது.


சீமை காடைகண்ணி, குழிமொட்டு (டெட்லி நைட் ஷேட்) ஆகியவற்றில் உள்ள மண்டூக நஞ்சு  (அட்ரோப்பின் எனப்படும் ரசாயனத்திற்கு இணையானது)  தீவிர எண்ணம், ஞாயபக மறதி, தூக்கமின்மை, மன அழுத்தம்,தற்கொலை எண்னம் ஆகியவற்றை ஏற்படுத்தும். மரக்குறும்பை, பட்டு கூம்பல், நீரட்டி முத்து இலை ஆகியவற்றின் நச்சுதன்மை புத்தியை பேதலிக்க செய்யும் இது அபினில் உள்ள மோஃபின் ரசாயணத்துக்கு இணையாணது.  


கஞ்சாசெடியில் உள்ள THCC  (Tetrahy drocannabinol)  நச்சு தன்மை ஒருகுறிப்பிட்ட சிந்தனையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தும் வசியம் செய்பவர்கள் சொக்குப்பொடி எனப்படும் வசிய மருந்தில் சிவாகை எனப்படும்  கஞ்சாவை கலப்பதற்கு இதுவே காரணம். காசி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சாமியார்கள் (?) கஞ்சா புகைப்பதற்கு அவர்கள் விரும்பும் கடவுள் (?) சிந்தனை எண்னத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


சமீப காலமாக காதல் விவகாரங்கள்....தொழில் தகராறுகள்.... மேலதிகாரிகளின் கெடுபிடி....அரசியல் போட்டிகள்....உறவு பிரச்சனைகள் அலுவலக சிக்கல்கள்ஆகியவற்றை தீர்க்க சாமியார்களையும், குறி சொல்பவர்களையும், சாமியாடுபவர்கலையும் தேடிப்போவது அதிகமாகிவிட்டது. இவர்கள் பெரும்பாலும் மருந்து என்ற பெயரில் இத்தகைய தாவர விஷங்களை கொடுத்து உண்பவருக்கு தெரியாமல் அவர்களின் உணவில கலந்து கொடுக்க சொல்கின்றனர். 


இவ்வாறு கொடுக்கப்படும் மருந்துக்கள் ஜீரணமாகி ரத்தத்திலும் உடல்திரவங்களிலும் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


சில வகை தாவர நச்சுக்கள் உடலுறவின் மூலம் பரவக்கூடியதாகவும் இருக்கின்றன.குறிப்பாக பஞ்சவ நஞ்சு எனப்படும் 2ம் நிலை விஷங்கள் உட்கொள்பவரின் ஈரல் மற்றும் பைல் பிக்மெண்ட்ஸ் எனப்படும் நிணநீரில் நச்சு தன்மையை ஏற்படுத்துகின்றன. இது உடல் உறவின் மூலம் பரவக்கூடியது. குறிப்பாக இத்தகைய விஷங்கள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூலம் மிக எளிதாக அவர்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கும் பரவும்.ஆரம்பத்தில் பசியின்மை, வாய்கசப்பு, மேல் வயிற்றில் வீக்கம், அஜீரணம், ஜீரண அமிலம் மேல் நோக்கி வருவது போன்றவற்றில் துவங்கி ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை வரை பாதிப்புகளை ஏற்படுத்தும்.


தீர்வுகள்.....


இடுமருந்து மூலமாக பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை நீக்குவதே முறையான தீர்வாகும். பூஜைகள், வழிபாடுகள், யந்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவே முடியாது. அதேபோல மருந்து எடுப்பதாக சொல்லிக்கொண்டு குழல் வைத்து ஊதுவது, வாந்தி எடுக்க செய்வது போன்றவை சாத்தியம் இல்லை. ரத்தத்தில் கலந்துள்ள விஷதன்மையை இதை போன்ற வித்தைகளால் நீக்க முடியாது. 


சில இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் எந்த வித ந்ச்சுக்களும் இருக்காது ஆனால் யாரோ மருந்து வைத்துவிட்டதாக பயம் இருக்கும் இந்த உளவியல் காரணத்தால் (சைகலாஜிகல் பிரஷர்) உடலில் நோய் இருப்பதாகவும் நோய்க்கான எல்லா உபாதைகளும் இருப்பதாகவும்  தோன்றும் இது ஹைப்போ காண்ட்ரியா எனப்படும். இவர்கள் மருந்து எடுப்பதாக போய் குழல் வைத்து ஊதினாலோ வாந்தி எடுக்க மருந்து சாப்பிட்டாலோ அவர்களுக்கு ஏற்படும் திருப்தியால் பாதிப்புகள் தீர்ந்துவிடும். இது முழுக்கமுழுக்க சைகிக் டிஸார்டர் எனப்படும் ஆழ்மன பாதிப்பு மட்டுமே.


இடுமருந்து பாதிப்பு இருப்பவர்கள் முதலில் தங்களுக்கு உண்மையிலேயே உடலில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்று உமிழ் நீர் சோதனை மற்றும் ரத்த சோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும.

அதன் பின்னர்  முதலில் உடலில் தங்கியுள்ள நச்சுதன்மையிய நீக்கும் ஆண்டி டாக்ஸின் மருந்துக்களும். அடுத்து ரத்தம் மற்றும் உடல் திரவங்களை வலுபடுத்தும் மருந்துக்களும் அடுத்ததாக பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை வலுபடுத்தும் மருந்துகள் என்று மூன்று கட்டமாக மருந்துக்களை உட்கொள்ள வேண்டும்.


இந்த மூன்று கட்ட மருந்துக்களும் ஒரே  சமய்த்தில் உட்கொள்லலாம்.

இடுமருந்து எனப்படும் தாவர நச்சுக்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அதை பாரம்பர்ய பிரம்ம சூக்த சோதனையால் கண்டுபிடிக்க முடியும்.

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக (பல் துலக்காமல்...மலஜலம் கழிக்காமல்) 5 முதல் 10 கிராம் பட்டை தீட்டப்படாத அரிசியை வாயில் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து அதை காற்று புகாத பாலிதீன் கவரில் பேக் செய்யவும். பின்பு வலது கை மோதிர விரலில் இருந்து 7 முதல் 10 சொட்டு ரத்தம் எடுத்து(சாதரண குண்டூசியில் குத்தினாலே ரத்தம் வரும்) அதையும் ஓரு பாலிதீன் கவரில் வைத்து இரண்டையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பினால் அவற்றை சோதித்து  தாவர நச்சுக்கள் உள்ளனவா என்றுஉறுதி செய்து கொள்ளலாம்.

பரிசோதனை கட்டணம் ரூ.500.00 ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு .... .... .....


Dr.G. MUKUNDHAN. BMHS,DYNT,


MUDHASHANA HERBAL RESEARCH FOUNDETION.

19/2 Rose Park Avenue, Sami chetti Palayam. Coimbatire.47

SUBIKSHA  HERBAL CLINIC AND MIND CARE CENTER

102Maruthy Complex, Perianaiken Palayam, Coimbatore.20.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி