சரவணபவ விளக்கம்

 சரவணபவ...ஓம் சரவணபவ... - விளக்கம்


சரம் + வணக்கம் + பவம்.


சரம் = சுவாசம், கெதி


வணக்கம் - சரமாகிய சுவாசகெதியை வணங்குதல் என்பது அதனோடு ஒன்றி அதனை சேர்வது என்று பொருள்.


பவ என்கிற பவம் என்றால் விருத்தி என்று பொருள்.


அதாவது நம் உடலில் உள்ள ஜீவசக்தியாகிய வாயுவை (உயிரை) நம்மிலிருந்து வெளியில் விடாமல் நம்முள்ளேயே நிறுத்தி அதை சரணாகெதி அடைந்தால் , நம்முடைய ஜீவன் "விருத்தி'யடையும்.


மாறாக அதை வெளியில் விட்டால் "ருத்தி" அதாவது விரையமாகும்.


எனவே சரவணபவ என்பது சரம் பார்த்து அதனை வணங்கி அதை அழியாமல் வளர்ப்பது என்று பொருள்.


"சரம் பார்ப்போன் பரம் பார்ப்பான்" என்பது நம் முன்னோர்களின் மொழி.


பவம் என்பது ஆக்கம், பாவம் என்பது அழிவு.


இறைஉணர்வோன் சங்கர்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி