சினைப்பை நீர்க்கட்டி

 🉐#பெண்களின்_சினைப்பை


🉐#நீர்கட்டி_என்பது_நோயல்ல 


❗❗❗#குறைபாடு_தான்…❗❗❓❓


🚺➡ சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. 


🔯 பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்❓


ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் ஆனவுடன் தாய்மை அடைவதற்காக 

காத்துக் கொண்டிருப்பார்கள்.


சிலர் விரைவில் கர்ப்பம் ஆகிறார்கள். 

சில பெண்கள் கர்ப்பமாவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் அது அவளின் 

மனநிலையை வெகுவாக பாதிக்கும்.


இதற்கு மிக முக்கியமான காரணம் கருமுட்டை குறைபாடு.


இந்தக் கருமுட்டை வளர்ச்சி அடைய 

நாம் என்ன செய்ய வேண்டும❓ 


⭕ குழந்தைபேறை தடுக்கும்

சினைப்பை நீர்கட்டி (OVRIAN CYST)


👉 குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.


சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.


சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.


🈵 ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.


 சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச்சுரப்பு அதிகமிருக்கும். 


சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.


🉐 ப்ரோஜெஸ்ட்ரோன்


 விடாய் வெளியான 14வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.


🚺 சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்❓


* மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, 


* மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் 


* சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். 


* சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.


* உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.


* ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.


* முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.


* குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.


* ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.


* திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம். அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.


* பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.


◀ மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. 


இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. 

சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். 


👉👉  சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள் இருந்தால் அவை…


⬅ நீரிழிவு, 


⬅ இதய நோய், 


⬅ உயர் கொலஸ்ட்ரால், 


⬅ இரத்த அழுத்தம் 


போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அதன் அறிகுறிகளை கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற்றால், ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருக்கலாம்.


💢 என்ன செய்தால் நாம் விரைவில் 

கர்ப்பம் தரிக்கலாம்❓


மாதவிடாயின் முதல் நாளில் 

ஹார்மோன்கள் புதிய கரு 

முட்டைகளின் வளர்ச்சி 

உண்டாக்குகிறது. கருமுட்டை வளர்ச்சி அடைய ஈஸ்ட்ரோஜன் என்னும் 

ஹார்மோன் வெளிப்படும். கருமுட்டை மாதவிடாயின்இரண்டாம் நாளிலிருந்துஆறாம் நாள் அதற்குள் உருவாகிறது. 

பின்பு ஆறாம் நாளில் இருந்து 13 ஆம் நாள் வரை அதன் வளர்ச்சி 

ஆரம்பமாகிறது.


பதின்மூன்றாம் நாளிலிருந்து 18ம் 

நாட்களுக்குள் கரு முட்டை 

வெளிப்படுகிறது.


கருமுட்டை நன்றாக வளர ஒமேகா-3 புட் தேவைப்படுகிறது. இந்த ஒமேகா-3 

இருக்கும் உணவுப் பொருட்கள் பாதாம் பருப்பு, வால்நட் மற்றும் பிஷ்.


பல வகைகளில் மாதுளைப்பழம் 

மிகவும் முக்கியம் இதை தினமும் 

எடுத்துக் கொள்வதன் மூலம் 

கர்ப்பப்பையை பலப்படுத்தலாம்.


அடுத்த அத்திப்பழம் சாப்பிடுவதன் 

மூலம் நம் உடலில் ரத்தம் அதிகமாக 

சுரக்கும்.


அடுத்து நாட்டுக்கோழி, முட்டை, 

பசும்பால், கீரை வகைகளை தொடர்ந்து கொள்வதன் மூலம் ஹார்மோன்களில் அளவை சீர் செய்யலாம்.


வாழைத்தண்டு மிகவும் முக்கியமான 

பங்கு வகிக்கிறது. இதைத்தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் யூட்ரஸ் 

பலப்படுத்தலாம்.


முளைக்கட்டிய பச்சைபயிறு அல்லது வேக வைத்த பச்சைப்பயிறு. 

முளைக்கட்டிய அல்லது வேக வைத்த கொண்டைக்கடலை இதைப் பீரியட்ஸ் ஆன இரண்டாம் நாளிலிருந்து 19ஆம் நாள் வரை தொடர்ந்து எடுத்துக் 

கொள்ளலாம்.


அதே சமயம் பெண்களின் 

ஹார்மோன்களை அதிகரிக்கச் சோயா எடுத்துக்கொள்ளலாம். உடலின் வெப்ப சூட்டைத் தணிக்க இளநீர் எடுத்துக் கொள்ளலாம்.மேற்கூறிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் கருவளம் மேம்படும்.


உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும். 


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


       999 437 9988 ☎  81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெவேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி