பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலி தீர

 🉐#பெண்களின்…❗❗


🉐#எந்தெந்த_காரணங்களுக்காக❓


🉐 #இடுப்பு_வலி_ஏற்படலாம்❓❓


✳ பெண்களில் இடுப்பு வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. இனப்பெருக்க வயதில் தொடங்கி மெனோபாஸ் வயது வரை அனைத்து வயதினருக்கும் இடுப்பு வலி இருப்பதை அறிகிறோம். எல்லாருடைய இடுப்பு வலிக்கும் காரணங்கள் வேறு வேறு. காரணங்களுக்கேற்ப சிகிச்சைகளும் வேறுபடும்.எந்தெந்த காரணங்களுக்காக இடுப்பு வலி ஏற்படலாம்... 


💢 எப்படிப்பட்ட வலிக்கு மருத்துவ ஆலோசனை அவசியம்❓


தொப்புளுக்குக் கீழேயும் தொடைகளுக்குச் சற்று மேலேயும் உள்ள பகுதியில் ஏற்படுகிற வலியே Pelvic pain என்கிற இடுப்பு வலியாக அறியப்படுகிறது.இந்த வலிக்குக் காரணங்கள் பல. காரணத்தைப் பொறுத்தே அதன் தீவிரம் அமையும்.


வலதுபக்கம் அடிவயிற்றில் கடுமையான வலி, வாந்தி, காய்ச்சல் போன்றவை இருந்தால் அது அப்பென்டிசைட்டிஸ் எனப்படுகிற குடல்வால் அழற்சி பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆரம்பநிலையாக இருந்தால் மருந்து, மாத்திரைகளில் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். குடல்வால் வெடித்துவிட்டால் அதன் தொற்றானது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி வேறு பிரச்னைகளுக்குக் காரணமாகலாம்.


கருமுட்டை வெளியாகிற நாட்களில், அதாவது மாதவிலக்கு முடிந்த பத்து நாட்களில் இடுப்புப் பகுதியில் வலி வரும். இது பயப்பட வேண்டிய வலியல்ல. ஒன்றிரண்டு நாட்களில் தானாகச் சரியாகிவிடும். குழந்தை வேண்டிக் காத்திருப்போருக்கு அந்த நாளில் உறவு கொள்ள வேண்டும் என உணர்த்துகிற அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.


Premenstrual Syndrome எனப்படுகிற பி.எம்.எஸ். பிரச்னையின் அறிகுறியாகவும் இடுப்பு வலி ஏற்படும். இந்த வலி இடுப்பில் மட்டுமின்றி, பின் முதுகுப் பகுதிக்கும் பரவும். ஒன்று முதல் 3 நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு மாதமும் கர்ப்பப் பையானது திசுப்படலம் ஒன்றை உருவாக்கும். அந்தப் பகுதியில்தான் கருவானது பதிந்து வளரும்.


கருத்தரிக்காத பட்சத்தில் அந்தப் படலம் உதிர்ந்து, வெளியேறும். கர்ப்பப் பையானது அந்தத் திசுப்படலத்தை சிரமப்பட்டு வெளித்தள்ளுவதால் ஏற்படுகிற வலியே அது. இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண மாத்திரைகளோ, வெந்நீர் ஒத்தடமோ போதும். உடற்பயிற்சி செய்வதும் வலியிலிருந்து நிவாரணம் தரும்.


தாங்க முடியாத வலி ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.சினைக் குழாய்களில் கருத்தரிக்கும்போதும் இடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான வலி ஏற்படும். உதிரப்போக்கு, வாந்தி, தலைசுற்றல் போன்றவை கூடுதலாக சேர்ந்து கொள்ளும். இது உடனடியாகக் கவனிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்னை. இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம்.


Pelvic inflammatory disease எனப்படுகிற பிரச்னையும் இடுப்பு வலியை அறிகுறியாகக் காட்டும். குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கும் இந்தப் பிரச்னை குணப்படுத்தக் கூடியதே. கவனிக்காமல் விட்டால் கர்ப்பப்பை, சினைப்பைகளை முழுமையாகப் பாதிக்கலாம். வயிற்று வலி, காய்ச்சல், பிறப்புறுப்பில் அசாதாரணக் கசிவு, உறவின் போதும், சிறுநீர் கழிக்கும்போதும் கடுமையான வலி போன்றவையும் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். தீவிரமானால் மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க வேண்டி வரலாம். கணவருக்கும் சிகிச்சை தேவைப்படலாம்.


சிறுநீரகத் தொற்றின் மிக முக்கியமான அறிகுறியே இடுப்பு வலிதான். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, வலி மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுவது, காய்ச்சல் போன்றவை அதன் அறிகுறிகள். அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்பட்டால் அது சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடும். எனவே ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையும் வாழ்க்கை முறையில் மாற்றங்களும் அவசியம்.


சிறுநீரகங்களில் கற்கள் இருப்பவர்களுக்கும் அடிக்கடி இடுப்பு வலி உண்டாகும். இது மணலைவிட அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனாலும் அது ஏற்படுத்துகிற வலி தாங்க முடியாததாக இருக்கும். பிரச்னை தீவிரமடையும்போது சிறுநீரானது சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் மாறும். உடனடியாக மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம். அலட்சியம் ஆபத்தை வரவேற்கும்.


சிலருக்கு ஏதேனும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இடுப்பில் வலி ஏற்படுவதை உணர்வார்கள்.  அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் திசுக்களின் காரணமாக இந்த வலி ஏற்படலாம். இந்தத் திசுக்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து வலியின் இடமும், தீவிரமும் வேறுபடும்.


ஃபைப்ராய்டு பிரச்னையின் மிக முக்கிய அறிகுறியே இடுப்பு வலிதான். கட்டி போன்ற ஃபைப்ராய்டுகள், புற்றுநோய் அபாயம் இல்லாதவை. 30 முதல் 40 வயதுப் பெண்களுக்கு இது மிகவும் சகஜம். சில பெண்களுக்கு அதிகமான ரத்தப் போக்கு, வயிறு மற்றும் இடுப்பு வலி, கருத்தரிப்பதில் சிக்கல் போன்றவையும் இருக்கும். அப்படி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.


.

💊#பெண்களுக்கான_சிறந்த

#மருந்து❓


நாட்டு பருத்தி கொட்டை - 2 கப்


பனங்கருப்பட்டி - 1 - 1/2 கப்


தேங்காய் பால் - 1 கப்


தேங்காய் துருவல் - 1/4 கப்


பச்சரிசி  _ 2 - 4 டிஸ்பூன்


ஏலக்காய் - 4


சுக்கு பொடி - 1/4 டிஸ்பூன்


பருத்திக் கொட்டையை இரவு முழுவதும் ஊற வைக்கவும், மறுநாள் காலை அரைத்து பால் எடுக்கவும். 

(தேங்காய் பால் எடுப்பத போன்று)

பச்சரிசியை சிறிது ஊற வைத்து அரைக்கவும்.


பருத்திப்பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும் பச்சை வாசனை போக, பிறகு பச்சரிசி மாவை தண்ணீரில் கலந்து பருத்தி பாலில் சேர்த்து நன்கு வேகும்படி மிதமான தீயில் காய்ச்சவும்.

பிறகு கருப்பட்டியை சேர்த்து கரைத்ததும் தேங்காய் பால் சேர்த்து ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி எடுத்து வரவும்.


💚-தயவு செய்து மருந்துக்கு அடிக்காத நல்ல நாட்டுபருத்திக் கொட்டையை பயன்படுத்துங்க.


💊-பெண்களுக்கு இம்மருந்து மிக மிக நல்லது..... முதுகுதண்டு வலிக்கு 

(L3 , L4, L5) மிக சிறந்தது.


💊 கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு, மார்பக சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வு. 


💊கேன்சர், வேறு கட்டிகள், மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் கிட்டவே வராது.


💊-தொண்டை வலி, மார்புச்சளி, வறட்டு இருமல் போன்றவைகளுக்கு இம்மருந்தை செய்து குடிங்க. 


💊வயிற்று புண்ணையும் சரிசெய்யும்.


💊-வாரத்தில் இரண்டு நாள் கண்டிப்பா இந்த மருந்தை குடிங்க.


💚-பச்சரிசிக்கு பதில் வரகு, திணை, சாமை உபயோகிக்கலாம்.


❌-கர்ப்பிணி பெண்கள் இம்மருந்தை தவிர்க்கவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி