அறுசுவை

 🇨🇭#உடலே_உணர்த்தும்_அறுசுவை…❗❗


🇨🇭#உடல்_நலத்திற்கு_இவற்றின் 

#பயன்கள்_என்ன…❓❓❓


👉அறுசுவை எனப்படுவது நாக்கு 

அறியக்கூடிய ஆறுவகை 

சுவைகளாகும். பழங்கால  

மருத்துவங்கள் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன❗❓


▶துவர்ப்பு, 


▶இனிப்பு, 


▶புளிப்பு, 


▶கார்ப்பு, 


▶கசப்பு, மற்றும் உவர்ப்பு 


ஆகியனவாகும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.


தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது…… 


▶இரத்தம், 


▶தசை, 


▶கொழுப்பு, 


▶எலும்பு, 


▶நரம்பு, 


▶உமிழ்நீர், 


▶மூளை 


ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.


⭐➡இனிப்பு - தசையை வளர்க்கின்றது


⭐➡புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது


⭐➡கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது


⭐➡உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது


⭐➡துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது


⭐➡கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது


அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.


⭕ #இனிப்புச்சுவை (sweet)⭕


மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.


♐அதிகமானால்...


உடலில் கப தோஷம் பெருகும். இதனால், உடல் பருமன், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், அஜீரணம், மேக நோய், கழுத்து சுரப்பி வீக்கம். சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வரலாம். வெறும் இனிப்புச் சுவை மட்டுமே  சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.


👇குறைந்தால்...


பித்தம், சூடு அதிகரிக்கும்.  இதனால், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன், நுங்கு சேர்த்துக்கொள்ளலாம். இனிப்புத் திராட்சை மாதவிலக்கைச் சீராக்கும்.  உலர் திராட்சை இதயத் துடிப்பைச் சீராக்கும்.  இனிப்புச் சுவையுள்ள செவ்வாழை கண் பார்வையைக் கூர்மையாக்கும். கொய்யா,  எலும்பை உறுதியாக்கும். 


👉கிடைக்கும் உணவுப் பொருட்கள்


பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு 

வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


⭕ #புளிப்புச்சுவை (Sour)⭕


உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.


👆அதிகமானால்...


இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், ஒவ்வொரு நாளும் அதில், நொதித்தல் நடக்கும். இது மறைமுகமாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். இன்று அரைத்து, நாளை சாப்பிடுவதுதான் நல்லது. புளிக்குழம்பு, காரக்குழம்பு அதிகம் சேர்த்தாலும், பித்தம் அதிகரிக்கும். இதனால், ரத்தம், தசைகளில் புளிப்புத்தன்மை ஏறி, உடல் வலி, சரும வறட்சி, சரும நோய்கள் வரலாம். 

தாக உணர்வினை அதிகரிக்கும். 

பற்களைப் பாதிக்கும். 

நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, 

அரிப்பு ,உடல் தளரச் செய்யும்.


போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். 


👇குறைந்தால்...


ஜீரண சக்தி குறையும். மந்தத்தன்மை அதிகரிக்கும்.  அசதி, சோர்வு இருந்துகொண்டே இருக்கும். 


எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


⭕ #காரச்சுவை (Pungent)⭕


பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.


👆அதிகமானால்...


உடலில் காரத்தன்மை அதிகமாகும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிக்கலாம். பலத்தைக் குறைத்து, பலவீனத்தை அதிகப்படுத்தும். இடுப்பில் தேவையற்ற வலிகள் உண்டாகும். 


உடல் எரிச்சலை உண்டுவிக்கும். 

உடல் சூட்டை அதிகரித்து, 

வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.


👇குறைந்தால்...


சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் காரத்தைக் கொடுத்து வளர்க்க வேண்டும். நிறையப் பேர் “என் குழந்தை காரமே சாப்பிட மாட்டா” என்று பெருமையாகச் சொல்வார்கள். இது தவறான பழக்கம். இனிப்பு மட்டுமே சாப்பிடும் குழந்தைகளுக்கு, குடல் புழுக்கள் உருவாகும்.  இதனால், சரும நோய்கள், சரியான வளர்ச்சியின்மை, சளி, இருமல், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும்.  அந்த மாதிரி குழந்தைகளுக்கு இனிப்பு சுவையைக் குறைத்து, மிளகு போன்ற காரச்சுவையை அதிகரித்து வந்தாலே, நல்ல பலன் கிட்டும். மிதமான அளவு உண்ண வேண்டும். 


மிளகு, பெருங்காயம், இஞ்சி, சித்திரமூலம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் காரம் உடலுக்கு நல்லது.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


⭕ #துவர்ப்புச்சுவை (Astringent)⭕


இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை.அதிக வியர்வையைக் 

கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.


👆அதிகமானால்...


உடலில் வாயு அதிகரிக்கும். இதயத்தில் வலி ஏற்படலாம். கழுத்து, பின்புறத் தோள்பட்டைக்கு நடுவில் வலி வரலாம். உடல் எடையைக் குறைக்கும். ஆண்மைத்தன்மை குறையும். மலச்சிக்கல் பிரச்னை வரும்.


இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.


👇குறைந்தால்...


இரும்புச்சத்து கிரகிக்கும் தன்மையை இழக்கும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.


வாழைக்காய், மாதுளை,நாவல் பழம், மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


⭕ #கசப்புச்சுவை (Bitter)⭕


அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. 

காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.


👆அதிகமானால்...


உடலில் தாதுக்களைக் குறைக்கும்.  வாயுவை அதிகப்படுத்தும்.  இதனால் வாயுத் தொல்லை ஏற்படலாம். கசப்பு உணவுகளை அதிகம் வறுத்துச் சாப்பிட்டால், உடல் முழுவதும் வலிகள் வரலாம்.  கசப்புச் சுவை அளவோடு இருக்க வேண்டும். 


உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். 

எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.


👇குறைந்தால்...


ரத்தம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.


தபாகற்காய், சுண்டக்காய், 

கத்தரிக்காய், வெந்தயம்,பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.


⭕ #உவர்ப்புச்சுவை (Salt)⭕


தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.


உணவுக்குச் சுவை தருவது மட்டுமல்ல,  எலும்பு மற்றும் மஜ்ஜைகளை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும். நாட்டு மருந்துக் கடையில் ‘சைந்தலவனம்’ என்ற உப்பை வாங்கிப் பயன்படுத்தலாம்.  சோடியம், பொட்டாசியம் போன்ற எல்லா தாது உப்புக்களும் அதில் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.  

 

அயோடைஸ்டு உப்பு, தாதுக்களை எல்லாம் பிரித்துவிட்டு, வெறும் அயோடினை மட்டுமே சேர்த்துத் தரும். இதைச் சாப்பிடுவதால், எந்தப் பலனும் இல்லை.  கடல் ஒரங்களில் கிடைக்கும் காய்கறிகள், மீன்கள், பால் இவற்றிலேயே அயோடின் இருக்கிறது. அதனால், அயோடின் உப்பு தேவையற்றது.  


சிப்ஸ், லேஸ், குர்குரே பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டாலோ, சோடா, பிரிசர்வ்டு டிரிங் குடித்தாலோ, மோனா சோடியம் குளுட்டமேட் (MSG) கலந்த உணவுகளைச் சாப்பிட்டாலோ உடம்பில் சோடியம் கலந்த உப்பு சேர்ந்துகொண்டே இருக்கும்.  சோடியம் உப்பு, சிறுநீரகத்தில் பிரச்னைகளை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.     


👆அதிகமானால்...


உடலில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.  தேவை இல்லாத நீர் சேரும். ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும்.  பித்தத்தை அதிகரித்து, சீக்கிரமே நரை முடி, முடி உதிர்தல், கொட்டுதல், வழுக்கை போன்ற பாதிப்புகள் வரும்.  

தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். 

தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.


எனவே, உப்பை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். 


👇குறைந்தால்...


உப்பு சாப்பிட்டால் தப்பு என்று, உப்பைக் குறைத்துவிடவும் கூடாது.  இதனால், எலும்பு மஜ்ஜை வலுவிழந்துபோகும். சிலருக்குக் கெண்டைக்காலில் தசைப் பிடிப்பு ஏற்படும். தசைகள் சோர்வடையும். தலைசுற்றல் வரும்.


கீரைத்தண்டு,வாழைத்தண்டு, 

முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், 

பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


💊#அறுசுவை_மருத்துவம் 💊


🈵 இனிப்பு பண்டங்கள்.🈵

(சதையை வளர்க்கும்)


வாழைப் பழம்.

மலை வாழைப் பழம்.

பேயன் வாழைப் பழம்.

கமலாப் பழம் 

சாத்துக்குடிப் பழம்.

கிச்சிலிப் பழம்.

அன்னாசிப் பழம் 

பேரீச்சம் பழம்.

ஈச்சம் பழம்.

களாப் பழம்.

நாவற் பழம் 

இலந்தைப் பழம் 

சீதாப் பழம் 

மாதுளம் பழம் 

மஞ்சட் பூசணிப் பிஞ்சு 

கரும்பு 

நாட்டு சர்க்கரை 

வெல்லம் 

அஸ்கா சர்க்கரை 

கற்கண்டு 

வங்கதால் செய்த மருந்துகள். 


🈳 உப்பு பண்டங்கள் (எலும்பு வளர்க்கும்,உஷ்ணம் உண்டாக்கும்)🈳


முளைக்கீரை 

வாழைத் தண்டு 

கீரைத்தண்டு 

வெள்ளை முள்ளங்கி 

மஞ்சள் முள்ளங்கி

சிவப்பு முள்ளங்கி

பெங்களூர் கத்திரிக்காய் 

வெண் பூசணிக்காய்.

புடலங்காய்

சுரைக்காய்

பீர்க்கங் காய் 

மணத் தக்காளிக் கீரை 

வெங்காயம்.

வெங்காய தாள்

முள்ளங்கி கீரை 

கோஸ் கீரை 

நூல்கோல் 

வெள்ளரிப் பிஞ்சு

கீரைக் காய் 

மஞ்சட் பூசணி 

நெல்லிக்காய் 

அரு நெல்லிக்காய் 

நுங்கு 

இளநீர் 

சுத்தமான குளிர்ந்த நீர்

பசுவின் பால் 

சோத்து உப்பு 

தனியா (கொத்துமல்லி விதை )

ஆப்பிள் பழம் 

கொடி முந்திரிப்  பழம்

பச்சை திராட்சை பழம் 

அன்னாசிப் பழம்

கமலாப் பழம் 

சாத்துக்குடிப் பழம்

சோடா (எலுமிச்சை கலக்காதது )

வில்வ இலை 

உப்பு சேர்ந்த மருந்துகள்,ரசம், தாமிரம் முதலியவைகளால் செய்யப்பட்ட மருந்து வகைகள். 


🈹 புளிப்பு பண்டங்கள் 🈵


(கொழுப்பை வளர்பவை )


எலுமிச்சம்பழ ரசம் (சாறு )

இட்லி,தோசை,வடை,முதலிய மாவு பண்டங்கள்

பழைய சோறு,

வெந்நீர் சோறு 

பச்சரிசி

புழுங்கல் அரிசி

ஜவ்வரிசி 

உளுந்தம் பருப்பு

உளுந்து 

பயற்றம் பருப்பு (பாசி பருப்பு )

பயிறு 

துவரம் பருப்பு 

துவரை 

கடலை பருப்பு 

கடலை 

பட்டாணி 

வாதுமை பருப்பு 

முந்திரி பருப்பு 

சாரப் பருப்பு

வேர்கடலை 

மொச்சைக்  கொட்டை

பூசணி பருப்பு

தயிர் 

மோர் 

வெண்ணெய் 

நெய் 

எருமைப் பால் 

சிற்றாமணக்கு எண்ணெய் 

சேனைக் கிழங்கு 

உருளை கிழங்கு 

ஆள் வள்ளி கிழங்கு 

வள்ளிக்கிழங்கு 

சர்க்கரை வள்ளி கிழங்கு 

வெற்றிலை வள்ளிக்கிழங்கு 

கொட்டி கிழங்கு 

கிட்டி கிழங்கு 

பனங் கிழங்கு 

பலாப்பிஞ்சு 

வாழைக்காய் 

அவரைக்காய் 

பீன்ஸ்,டபிள் பீன்ஸ்,

காராமணிக் காய்

பெங்களூர் அவரை 

வெண்டைக் காய் 

கொத்தவரங்காய் 

புளியங்காய் 

மாங்காய் 

தமரத்தங் காய் 

பலா கொட்டை 

புளிச்ச காய் 

சீமை தக்காளி பழம் 

பருப்பு கீரை 

வசலை கீரை 

பசளை கீரை 

புளியாரைக் கீரை 

 எலுமிச்சம் பழம் 

வாழைப் பழம் 

கிச்சிலிப்  பழம்

கிச்சிலிக்  காய் 

மாம்பழம் 

முலாம் பழம் 

வெள்ளரிப்  பழம் 

நாவல் பழம் 

பனம் பழம் 

பலாப் பழம் 

நாரத்தங்காய் 

சீமைக் களாக் காய் 

காடி நீர் (வினிகர் )

கேழ்வரகு 

சோளம் 

புளி 

புளியங் கொழுந்து 

டால்டா 

தங்கம் கலந்த மருந்துகள்.


🈯 துவர்ப்பு பண்டங்கள்🈯


(ரத்தம் ஊறவும்,அதிகமாக தடை இல்லாமல் போகின்ற நீரையும், இரத்தத்தையும் நிறுத்தவும்)


வாழைப் பூ 

வாழைப் பிஞ்சு 

அத்தி பிஞ்சு 

அத்திக்காய் 

காட்டு களாக்காய் 

மாவடு 

அத்திபழம் 

விளாங்காய் 

விளாம்பழம்

பேரீச்சங்காய் 

மாம்பருப்பு 

புளியங்கொட்டை 

கடுக்காய் பிஞ்சு 

கடுக்காய் 

அயம்,மண்டுரம்,காந்தம் முதலியவைகளால்  செய்யப்பட்ட மருந்துகள். 


🈺 காரம் (உமிழ் நீர் ஊற,உஷ்ணம்🈺 உண்டாக்க )


அறுகீரை 

சிறுகீரை 

கலவை கீரை 

நச்சுக் கொண்டைக் கீரை 

வேளைக் கீரை 

மிளகாய் 

கருணை கிழங்கு 

மிளகு 

இஞ்சி 

சுக்கு 

பொறி கடலை 

கோதுமை 

வெள்ளியில் செய்த மருந்துகள் 


🉐 கசப்பு (நரம்பு பலம் பெற )🉐


தேன் 

கத்திரி பிஞ்சு 

கத்திரி காய்  

சுண்டக்காய் 

மிதிபாகற்காய்

கொம்பு  பாகற்காய்

முருங்கைக்காய் 

பாவட்டங்காய்

முருங்கைக் கீரை

அகத்திக் கீரை

முன்னை இலை 

பொன்நாங்கண்ணிக் கீரை 

வல்லாரைக் கீரை 

தூது வேளைக் கீரை

தூது வேளைக் காய் 

குப்பைக்  கீரை 

வெந்தயக்கீரை 

சீமைக் காசினி 

கொத்தமல்லி கீரை 

ஆவாரம் பூ 

கரிசாலை (கரிசலாங் கண்ணி )

கறிவேப்பிலை 

துத்தியிலை 

முடக் கொற்றான் 

நாயுருவி இலை 

முருங்கை பூ 

முசு முசுக்கை இலை 

பூண்டு 

வெந்தயம் 

சீரகம் 

சோம்பு 

பெருங்காயம் 

கடுகு 

தேங்காய் 

துளசி 

வேப்பம் பூ

ஆதொண்டைக் காய் 

சுக்காங்காய் 

வேப்பிலை 

எள் எண்ணெய் 

கடலை  எண்ணெய்

கடுகு எண்ணெய்

எள் 

கசகசா 

ஓமம் 

கம்பு 

தினை 

வெந்நீர் 

தம்பூலம் 

காபி,டீ


⏩⏩ உடலே உணர்த்தும்


‘புளிப்பா  சாப்பிடனும் போல் இருக்கு. ஒரு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமே என்று தோன்றும்.  நாக்கு ஏங்கும்போது, வாயில் எச்சில் ஊறும்.  வாந்தி, சோர்வு, வயிறு மந்தமாக இருக்கும்போது உப்பில் போட்ட எலுமிச்சை, நார்த்தங்காய்,  மாங்காய் சாப்பிட்டால் நன்றாக பசி எடுத்து ஜீரணமாகும்.  


உடலில் எனர்ஜி குறையும்போது, சோர்வா இருக்கும்போது இனிப்புச் சுவை சாப்பிடத் தோன்றும்.  அப்போது உடனடியாக உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.  இப்படி உடலானது உணர்வின் மூலம், தன்னைத் தானே ‘ஹீல்’ பண்ணிக் கொள்ளும்.


⏩⏩ காலத்துக்கேற்ற உணவு


குளிர் காலத்தில், வெளியில் அதிகக் குளிர் இருப்பதால், உடலினுள் அக்னி கொழுந்துவிட்டு எரியும். இதனால், பசி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இனிப்பு ஆகாரங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் கொடுத்தால், நன்கு ஜீரணமாகும்.  வெளியில் சுட்டெரிக்கும் வெயில் இருந்தால், உடலில் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் அதிகம் பசி எடுக்காது. எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.


சாப்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்து, உடலில் உப்புச் சத்து வெளியேறுவதால், தண்ணீர், பழச்சாறு, மோர் குடித்தாலே போதும் என்ற மனநிலை ஏற்படும். இந்தத் தருணத்தில் கோடை காலப் பழங்கள், நீராகாரங்கள் சாப்பிடலாம். எந்தெந்த காலகட்டத்தில் என்ன மாதிரியான நோய்கள் வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ப சாப்பிட்டாலே, உடல் சீராக இருக்கும்.


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


 ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி