புடலங்காய்

 தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் "#புடலங்காய்_ஜூஸ்"

1. இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். குடல் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.

2. புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும்.

3. புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கும்.

4. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும்.

5. புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

6. புடலங்காய் இலையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும்.

7. இதய கோளாறு உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள் ஸ்புன் அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும்.

8. புடலங்காய் இலைச் சாறு மலேரியா நோயை குணப்படுத்தும்.

9. புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

10. புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.

11. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது.

12. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

#குறிப்பாக தூக்கமின்மைக்கு தூக்கலான காய்.!

மன அழுத்தம், மன பதட்டம் என்று தூக்கமின்மை பிரச்சனையை தீர்த்து வைக்கும். புடலங்காயில் வைட்டமின் பி6 அல்லது பைரிடாக்சின் அடக்கம் உண்டு. இது மூளையின் செயல்பாடுகளை கவனித்து நரம்புதூண்டுதல்களையும் மேம்படுத்துகிறது. இதனால் கடுமையான தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் உணவிற்குப் பிறகு இரண்டு டீஸ்பூன் புடலங்காய் சாறு எடுத்துகொள்ளும் போது நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கி தூக்கத்தை ஊக்குவிக்கிறது.

#புடலங்காய்_தீமைகள் : புடலங்காய் விதைகள் அதிகமாக உட்கொண்டல் குமட்டல், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. புடலங் காய் விதைகள் அதிகமாக அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புடலங் காய் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி