மூலம் எளிய வைத்தியம்

 இன்று ஒரு எளிமையான மருத்துவ குறிப்பைப் பாருங்கள்.


மூலம் ( pills ) 


அதாவது  ஆசனவழியால் கனலேறி ( சூடு ஏறி ) துவாரப்பட்டு ஒன்பது விதமான மூல நோயை ஏற்படுத்தி அதன் காரணமாக மற்றப் பல வியாதிகளை உண்டாக்கும் இதுவே மூலரோகம்.


அதில் ஒன்றுதான் முளை மூலம். 


இது பெரும்பாலான நபர்களுக்கு கருணைக் கிழங்கு முளைப்பது போல ஒரு கூறான முளை ஒதுங்கும். அது மலம் கழிக்கும் போது விம்மி வெளியே தள்ளும்.


இதை சரி செய்வது மிகவும் சுலபம். கொஞ்சம் மெனக்கிட வேண்டும் அவ்வளவுதான்.


மருந்து:- 


ஆவாரம்பூ 200 கிராம்


ஆவாரை செடியின் பட்டை 200 கிராம்


ஆவாரை இலை கொழுந்து 200 கிராம்


அறுகம்புல் வேர் மட்டும் 200 கிராம்


இது நான்கும் உலரவைத்து எடை போடுவது சிறந்தது.


அப்படி எடை பிரகாரம் எடுத்து இடித்து அல்லது மிக்சியில் நை.......சாக அரைத்து சலித்து எடுத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம்.


இதில் வேளைக்கு ஒரு கிராம் அளவு அதாவது திரிகடிப்பிரமாணம் ( மூன்று விரல்களால் எடுப்பது) அல்லது 1/4 டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து காலை மாலை என இரு வேளையும் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்த மூலமுளை கரைந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


ஆத்மரட்சாமிர்தம் 257

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி