குடியை நிறுத்த உதவும் வில்விலை கசாயம்

 #குடிப்பழக்கதை_நிறுத்த_வில்வ_இலை_கசாயம்.


 வில்வ இலை ஒரு அற்புத மருந்து. வில்வ இலை கஷாயத்தை மதுவிற்க்கு அடிமையானவர்கள் அருந்தினால் குடியை வெகு விரைவில் நிறுத்திவிடலாம்.


*#தேவையானவை*

வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு 

ஏலக்காய் – ஒன்று 

கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன் 

பனை வெல்லம் – தேவையான அளவு 

தண்ணீர் – 200 மில்லி 


#கசாயம்_செய்முறை:-*

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் ஒன்றாக உரலில் சேர்த்து நன்றாக இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். சரி பாதியாக நன்றாக தோண்டி கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்கள் டீ, காபி குடிப்பது போல தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம். இதனை மறைமுகமாகவும் கொடுத்து உதவலாம்.

பசுமையான வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் நிழலில் உலர்த்தி இலையை சுத்தம் செய்து பொடி செய்தும் மேற்கண்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து இந்த கசாயத்தை குடிப்பதனால் அல்லது குடிக்க கொடுப்பதினால் மது அருந்தும் பழக்கத்தை அவர்களே மறந்துவிடுவார்கள். இதையும் மீறி மது அருந்தினால் அவர்கள் அருந்திய மதுபானம் வாந்தியாக வெளியேறிவிடும். திரும்ப மது அருந்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு அறவே வராது.

Comments