பக்கஙாதம் குணமாக

 🇨🇭#பக்கவாதம்_குணமாக……❓❓❓


🇨🇭#வீட்டு_வைத்தியம்.❓❓❓


👉 #மருந்து01


1) அக்கரகாரம்                 -  25 கிராம்

          

அமுக்கரா                     -  25 கிராம்

          

மிளகு                            -  25 கிராம்

          

வால்மிளகு                  -  25 கிராம்

          

வாய்விளங்கம்           -  25 கிராம்

          

பூனைக்கா- விதை     -  100 கிராம்


சித்திர மூல வேர்ப்படை     -  100 கிராம்

                  மஞ்சள்                  -  25 கிராம்


இவற்றை தூள் செய்து அரை ஸ்பூன் வீதம் (2 கிராம்) காலை, மாலை தேனில் கொள்ள பக்கவாதம் தீரும்.


                

👉 #மருந்து02


சதகுப்பை - 40 கிராம், 


சீரகம் - 40 கிராம், 


மகிலம் விதை - 40 கிராம், 


அதிமதுரம் - 40 கிராம், 


சின்னலவங்கப்பட்டை - 40 கிராம், 


தேத்தான் விதை - 20 கிராம், 


தனியா (கொத்தமல்லி ) - 1/4 கிலோ, 


சீனிச்சக்கரை - 1/2 கிலோ 


இவை அனைத்தையும் நன்றாக காயவைத்து இடித்து பொடி செய்து, சர்க்கரை கலைந்து  வைத்துக்கொண்டு , 1/2 டீஸ்பூன் காலை மாலை 

இரு வேளையில் சாப்பிட தேகம் திடப்படும்.


💊 இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை  நீக்க செய்யப்படும் இயற்கை மருந்து❓❗


 

1 கப் எலுமிச்சை சாறு, 


1 கப் இஞ்சிச் சாறு, 


1 கப் புண்டு சாறு, 


1 கப் ஆப்பிள் சைடர் விநிகர் 


எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து  பாட்டலில் வைத்துக் கொள்ளுங்கள்.


 

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....

சுவையாகவும் இருக்கும். 


💊 தமுதாளை இலையுடன் சிறிது நச்சுக்கொட்டைக்கீரை, மஞ்சள் சேர்த்து அரைத்து, ஐந்து கிராம் அளவில் தொடர்ந்து சாப்பிட்டுவர பக்கவாதம் தீரும்.


💊 வாதநாராயணா இலையை மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்தரைத்துச் சாப்பிட பக்கவாதம் தீரும்.


💊பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு அடைப்பு குறையும்.


💊காலில் இரத்த ஓட்ட அடைப்புக்கு சிகிச்சையாக வெண்தாமரை இதழ், மருதம்பட்டை இதழ், சீந்தில், பூண்டு ஆகியவற்றைச் சூரணமாக்கி சாப்பிட்டால், அந்த அடைப்பு வெளியேறும்.


💊திரிபலா சூரணம் 10 கிராம் வரை காலை, இரவு உணவுக்கு பின் தினசி வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.


🇨🇭 பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.


💊வாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்துப் பொடிக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.


💊கொள்ளு வேகவைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்துத் தாளித்து ரசமாகக் குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.


💊 நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.


💢 #புதினா_சப்பாத்தி💊


புதினா ஒரு கட்டு சுத்தம் செய்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை அரை கப். கோதுமை மாவை புதினா சாறு சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு பிசையவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் சப்பாத்தியாக போடவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளது.


💢 #மிக்சட்_வெஜ்_புலவு💊


கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், முட்டைக் கோஸ், வெங்காயத் தாள், புதினா இலை ஆகியவை இரண்டு கப் கட் செய்து வைக்கவும். இரண்டு கப் பாசுமதி அரிசியை உப்பு சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சாதம் வேகும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாத்தூள், மஞ்சள் தூள், புதினா இலை, கட் செய்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பாதி வெந்த பின்னர், பாசுமதி சாதம் சேர்த்து கிளறி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இதில் புரதம், நார்ச்சத்து உள்ளது. 


💢 #சிறுகீரை_முட்டைப்_பொறியல்💊


சிறு கீரையை 2 கட்டுகள் நன்றாக சுத்தம் செய்து கட் செய்து கொள்ளவும். 2 முட்டையை தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம் மற்றும் வறமிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் கீரை சேர்த்து பாதி வெந்த பின் முட்டை சேர்த்து கிளறவும். முட்டை ஊற்றிய பின் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும். இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது.


💊#டயட்……💊


சர்க்கரை, 


ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கும், 


கிட்னியில் பிரச்னை உள்ளவர்களுக்கும் 

ரத்தக்குழாய் தடிமனாக 


இருக்கும். இவர்களது உடலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் வலியை உணர்வது கடினம். 


பக்கவாதத்துக்கான அறிகுறிகள் இருந்தாலும் தெரியாது. இது போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்க வாதம் திடீரென தாக்க வாய்ப்புள்ளது. உணவில் அதிகளவு கெட்ட கொழுப்பை எடுத்துக் கொள்ளுதல், எப்போதும் டென்ஷனாக இருத்தல், நீண்டகால ரத்த சோகை போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்கவாதம் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. 


இவர்கள் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை மாதம் ஒருமுறை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 


மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்தஅளவு பரிசோதனையும் செய்து கொள்ளவும். 


தினமும் வாக்கிங் மற்றும் சரிவிகித சத்துணவும் அவசியம். 


உணவில் எண்ணெய் மற்றும் தேங்காய் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்கவும். 


வெளியிடங்களில் உணவு சாப்பிடுவது, பாஸ்ட் புட், ஜங்க் புட், சாக்லெட், ஐஸ்கிரீம் வகைகள், நெய் ஆகியவற்றையும் கண்டிப்பாக விட்டுவிடவும். 


நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறிகள் கட்டாயம் உணவில் இருக்கட்டும். 


ராகி, கம்பு, சோளம் போன்ற முழு தானியங்களை உணவில் தினமும் ஒரு வேளை சேர்த்துக் கொள்ளவும். 


பழங்கள், காய்கறி சாலட் மற்றும் சூப் வகைகளும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். 


அசைவம் மாதம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 


நாட்டு கோழி மற்றும் மீன் எடுத்துக் கொள்ளலாம். 


மீன் எண்ணெயில் பொரித்ததாக இல்லாமல் குழம்பாக சாப்பிடலாம். 


முடிந்த அளவு எண்ணெய் இல்லாமல் சமைப்பது நல்லது.... .

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி