தலையில் நீர்கோர்த்து தலைபாரம் நீங்க

 தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டால் அதை சரி செய்யும் எளிய இயற்கை மருத்துவம்.


தேவையான மூலபொருள்


1.கிராம்பு -  4 எண்ணிக்கை

2.மிளகு -  5 எண்ணிக்கை

3.பால் -  சிறிதளவு


செய்முறை


 முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்..


பிறகு கிராம்பு மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக(வாசனை வரும் வரை)வறுத்து எடுக்கவும்.


பிறகு வறுத்த இரண்டு பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.


மேலும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலை(இரண்டு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.


மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு சூடுபடுத்தவும்.


மேலும் இந்த மருந்தை லேசான சூட்டில் நெற்றி மற்றும் மூக்கு மீது பூசி வந்தால் தலையில் இருந்து வியர்வை வெளியேறி தலை நீர் குறையும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி