பாலும் பசுவும்

 #நாம_பயன்படுத்தும்_பசும்பால்…❗


#உண்மையான_பசும்பால்_தானா…❓


💢  பாக்கெட்பால் Vs பசும்பால் 💢


⭐ குழந்தையின் முதல் உணவு பால் இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். 


ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை... ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’ என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85 சதவிகிதம்.


பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 முதல் 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்கிறது.


⭕ #பசும்பாலின்_உள்ளே……


இது, தாய்ப்பாலுக்கு இணையானது. ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் நிறைந்தது.


பசும்பாலில் அனைத்துவித அமினோஅமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு குறைவு. கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது.


லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது.


45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் ஏற்படும், `எலும்பு அடர்த்தி குறைதல்’ எனும் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையைப் போக்குகிறது.


வளரும் குழந்தைகள், சிறுவர்களது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் அடைவதைத் தடுக்கிறது.


பாலில் இருக்கும் லாக்டோஸை உடல் கிரகிக்காது. எனவே, வயிற்றுப்போக்கு, டைபாய்டு இருப்பவர்கள் பாலை அருந்தக் கூடாது.


5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது.


இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது.


🔴  1௦௦ கிராம் பசும்பாலில் உள்ள போஷாக்கு விவரம்……❓


தண்ணீர்    87.8 கிராம்


புரதச்சத்து  3.2 கிராம்


கொழுப்பு    3.9 கிராம்


பூரிதக் கொழுப்பு அமிலம்  2.4 கிராம் 


அபூரிதக் கொழுப்பு அமிலம் (Mono)

1.1 கிராம்


அபூரிதக் கொழுப்பு அமிலம் 

(Poly)0.1 கிராம்


சர்க்கரைச்சத்து  4.8 கிராம்


கொழுப்பினி  14 மில்லிகிராம்


சுண்ணாம்புச்சத்து

120 மில்லிகிராம்


எரிசக்தி  66 கிலோகலோரி


👉பால் மற்றும் பால் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளலாமா❓,என்று ஒரு பக்கம் விவாதம் நடந்தாலும், தினசரி காலையில் காபி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருட்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 


குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிட ஏற்றது பால். 


👉இப்படி பல நன்மைகள் இருந்தாலும்

ஹார்மோன் ஊசி மூலம் அதிக பால் சுரக்க செய்கிறார்கள் அதுதான் கேள்வி❓❗


💢 நாம் அன்றாடம் வாங்கும் பால் பாக்கெட்டுகளில் உள்ள பாலில் என்னென்ன இருக்கின்றன தெரியுமா❓


👉தெரிந்துகொள்ள, பாலுக்கு உள்ளே கொஞ்சம் பயணம் செய்யலாமா❓


பால் பண்ணைகளில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உடைத்து இயந்திரத்தின் மூலம் கலக்குகிறார்கள். அதன் கெட்டித்தன்மையை அதிகரிக்கவும், புரதம் மற்றும் கொழுப்பின் அளவைக் கூட்டவும் அப்படிச் செய்கிறார்கள். பின், தேவையான அளவுக்குக் கொழுப்பு அல்லது கொழுப்புப் பவுடரை கலக்கிறார்கள். இது வழக்கமான முறை.


👉#சில_நிறுவனங்கள்…… 


பாலில் ஸ்டார்ச், 


மைதா மாவு, 


குளுக்கோஸ், 


மரவள்ளிக்கிழங்கு மாவு, 


ஜவ்வரிசி 


போன்ற பொருள்களை, கெட்டியாக மாற்றுவதற்காகக் கலக்கின்றனர். 


⭕ #பால்_கெடாமல்_இருக்க………


அமோனியா, 


சோடியம் ஹைட்ராக்ஸைடு, 


கார்பன்-ட்ரை-ஆக்ஸைடு, 


பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு 


போன்றவற்றில் எதாவது ஒன்றைச் சேர்க்கிறார்கள்.  யூரியாவில் அமோனியா இருப்பதாலும், மிக எளிதாகக் கிடைப்பதாலும் சிறு வியாபாரிகள் பலரும் இதனைச் சேர்க்கிறார்கள்’ 


இந்த லட்சணத்தில், ‘#சிந்தடிக்_மில்க்’ என்று சொல்லப்படும் செயற்கைப் பால் வேறு இந்தியாவின் பல மாநிலங்களிலும் விற்பனையில் உள்ளது❗


👉#அதில்…… 


வெந்நீர், 


காஸ்டிக் சோடா, 


யூரியா, 


டிடர்ஜண்ட் பவுடர், 


ஷாம்பூ, 


மட்டரகமான எண்ணெய், 


வெண்மை நிறத்துக்காக கிழங்கு மாவு, 


இனிப்பதற்காக சாக்ரீம் எல்லாம் கலந்து, முப்பது நிமிடங்களில் தயாராகிறது நச்சுப்பால். 


‘இந்தச் செயற்கைப் பால் தயாரிப்பதற்கு மாடு அல்லது மாட்டில் இருந்து பெறப்பட்ட பால் - இரண்டுமே தேவையில்லை’ 


அதாவது, பாக்கெட் பாலிலும், சிந்தடிக் பாலிலும் #பாலைத் தவிர மற்ற எல்லாம் இருக்கின்றன❗


⭕ #பண்ணைப்_பசும்பால்


பாக்கெட் பாலும் வேண்டாம், பவுடர் பாலும் வேண்டாம், நேரடியாக பண்ணைகளில் இருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தலாமா என்றால், அங்கேயும் பல பிரச்னைகள் உள்ளன❗ 


அதிலென்ன பிரச்னை என்கிறீர்களா சொல்கிறேன்.❗❗❗❓


👉‘ஒரு நாட்டு மாடு.. தன்னுடைய கன்றுக்குட்டியின் எடையில் பத்தில் ஒரு பங்கு பாலை மட்டுமே சுரக்கிறது. 


👉கன்றுக்குட்டியின் எடை 15 கிலோ என்றால், பசு தரும் பால் 1.5 லிட்டர் மட்டுமே’ 


இதற்கு என்ன அர்த்தமெனில், ஒவ்வொரு நாளும் ஒரே அளவில் பண்ணைகளில் பால் கிடைக்காது. ஏனெனில், மாடுகளின் மடிகள் தங்கள் கன்றுகளுக்காக மட்டுமே பால் சுரக்கின்றன………


அவற்றின் எடைகளைப் பொறுத்தே அவற்றின் பால் சுரப்பும் இருக்கும். அப்படியானால், இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வார்கள்❓


‘தினமும் அதிக அளவில் பால் சுரக்க வைப்பதற்காக, எல்லா பசுக்களுக்கும் #ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் ஊசியைப் போட்டுவிடுவார்கள். 


👉ஆக்சிடோசின்………👇


என்பது பசுக்களுக்கு இயல்பாக சுரக்க வேண்டிய இயற்கை #ஹார்மோன். அதே ஹார்மோனை #செயற்கை ரசாயனமாக ஆய்வுக்கூடங்களில் தயார் செய்து பசுக்களுக்கு ஊசி மூலம் செலுத்திவிடுவார்கள்’  பசுவின் உடலில் அதிக தூண்டுதலைச் செய்து அதிகப்பால் சுரக்க உதவிய ஆக்சிடோசின் ரசாயனம், அந்தப் பாலைக் குடிக்கும் நம் உடலிலும் கலக்கிறது!


ஆக்சிடோசின் (Oxytocin) என்பது பசுக்களுக்கு மட்டுமல்ல, மனித உடம்புக்குள்ளிருந்து, குறிப்பாக மூளையின் ஹைபோதலாமஸ் என்ற பகுதியிலிருந்து உருவாகும் இயற்கையான ஒரு ஹார்மோனாகும். 


👉இனப்பெருக்கம், 


👉குழந்தை பிறப்பு, 


👉குழந்தை மீதான பாசப்பிணைப்பு 


ஆகியவற்றுக்கெல்லாம் அது உதவியாக இருக்கும். 


👉ஆனால், அதையே செயற்கையாக உருவாக்கி பசுக்களுக்கு போடப்படுகிறது.


⭕ துரித வளர்ச்சி ஹார்மோன் ஊசி


கன்று வளர்ந்து பசுவாகி பால் தர பல ஆண்டுகள் ஆகிறதே என வருந்தி, யோசித்து……


முதலாளிகளுக்கு உதவுவதற்காக மருத்துவத்துறை ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்தது. அதுதான், துரித வளர்ச்சிக்கான ஹார்மோன் ஊசி❗


மூன்று மாதத்திலிருந்து தொடர்ந்து அந்த ஊசியைக் கன்றுக்குப் போட்டு வந்தால், பதினைந்தாவது மாதத்திலிருந்து வழக்கமாக பசுக்கள் கறக்கும் பாலைவிட நான்கு மடங்கு அதிகமான பாலை அது சுரக்கும்❗


இந்த ஹார்மோன் பாலைக் குடிக்கும் குழந்தைகளின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் உருவாகும். 


இந்த பால் மாறாட்டம் கண்டு பயந்துபோன ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், ஹார்மோன்கள் மூலம் பசு வளர்ப்பதையும், பால் கறப்பதையும் தடை செய்துள்ளன.


❌ வீட்டுப் பசும் பால்❓


சரி போங்கப்பா, பாக்கெட் பாலும் வேண்டாம், பண்ணைப் பாலும் வேண்டாம், வீட்டில் வளர்க்கப்படும் பசும் பாலையாவது குடிக்கலாம் அல்லவா❓❗


பசுவின் பால் அதன் கன்றுக்கான பால். அது நம் வீட்டுக் குழந்தைகளுக்காகப் பால் சுரக்கவில்லை. தன் கன்றுக்கு ஏற்ற மாதிரி மட்டுமே அது சுரக்கிறது. 


⭕ கன்றுக்கு ஏற்ற மாதிரி என்றால்❓


கன்றுக்குட்டிக்கு பிறந்த உடனேயே பற்கள் இருக்கும்❗


ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு பல் முளைக்க கால அவகாசம் உண்டு. ஒன்பது மாசமோ ஒரு வருஷமோ ஆகலாம். 


அதோடு, கன்றுக்குட்டி ஒரே ஆண்டில் பூப்படைந்து பசுவாக மாறிவிடும்❗ 


ஆனால், நம் பெண் குழந்தைகள் பதினோறு வயது அல்லது அதற்குப் பிறகுதான் பூப்படைவார்கள், அல்லவா❓


ஹார்மோன் ஊசி மூலம் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தும் பசும் பாலில் அதிகமான செறிவூட்டப்பட்ட சத்துகள் காணப்படுகின்றன. அவ்வளவு ஆற்றல் வாய்ந்த பசும்பாலை நாம் பயன்படுத்தும்போது சிக்கல்கள் உருவாகின்றன. செறிவூட்டப்பட்ட அந்த சத்துப்பொருளை நாம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, நம் உடல் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. அதனால் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதுவும் ஒரு டம்ளர் பாலில் நான்கு முழுச் சாப்பாட்டின் சத்துகள் அடங்கியுள்ளது.


‘பால் - நம் உடலில் கழிவுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பால் சாப்பிடுவதை அறவே தவிர்த்தால், பல தொந்தரவுகளில் இருந்து உடனடியாக உடல் சரியாவதை நம்மால் உணரமுடியும். பசியை சரியாக உணர முடியாதவர்கள், உடல் பெருத்தவர்கள், அடிக்கடி சளி பிடிக்கும் இயல்புள்ளவர்கள், அடிக்கடி ஏப்பம், அஜீரணம்.. என செரிமானக் கோளாறுகள் உடையவர்கள், மலச்சிக்கல், வாயுக் கோளாறுகள் கொண்டவர்கள், ஆஸ்துமா  மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள்... 


இப்படி அனைத்துவிதமான தொந்தரவு உள்ளவர்களும் பாலைத் தவிர்த்தால், தங்கள் சிரமங்களில் இருந்து உடனடியாக மாற்றம் ஏற்படுவதை உணரமுடியும்’ 


‘பாலை நாம் குடிக்கும்போது நம் உடல் அதனை செரிக்க முயல்கிறது. செரிமானத்தின் இறுதியில் பாலில் இருந்து கேஸினோஜன் என்ற பொருள் எஞ்சிவிடுகிறது. இந்த சவ்வுப்பொருளை மனிதக்குடலால் முழுமையாக அழிக்க முடிவதில்லை. எனவே, அவை குடலிலும், வாய்ப்புள்ள இடங்களிலும் படியத் துவங்குகிறது. இது உடலையும், குடலையும் மந்தப்படுத்துகிறது. வயிற்றுப் பகுதியில் பலமான இயற்கையான தசைகளோடு, மந்தத்தை ஏற்படுத்தும் தொங்கு சதைகள் உருவாகின்றன. என்றும் கரைக்கமுடியாத தொந்தியோடு நம் உடல் பெருக்கிறது.


‘நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்வரை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். 


பசும்பால் கொடுக்கத் துவங்கிய பின்னால், கொழுகொழு குழந்தையாகவும், மந்தத்தன்மை மிக்கவர்களாகவும் மாறுவதை கண்கூடாகக் காணமுடியும். 


இவ்வளவு பிரச்னைகளோடு 

[ ஹார்மோன் ] பால் சாப்பிடத்தான் வேண்டுமா❓


⭕உடலுறவைப் பற்றி படித்த  நீங்கள் ஏன் இவற்றை உணர்வதில்லை..❓


👉நான் பசு மாடு பேசுகிறேன்…❗❗


👉புணர்வதற்குக் காளை தேவை…❗❗

          

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல்.

          

          

பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.

நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.


          

இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது.


இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என்போன்ற மாடுகளும் இருக்கிறோம்.


 பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். 


காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.


 சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள்.

காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.


காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள்.


மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.


மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள்.

காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள். 


 ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் குறிகள் மறுக்கப்படுகின்றன.


 இவ்வாறு ஆண்குறி, 

பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.


எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள்.

ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது.


காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.

பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம்.


அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே.


சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.


புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில்.

அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது.


இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா❓


        

நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.

                  

எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை.


     ❓எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.❗❗❗


             பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. 


 இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.

ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை.


              பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.


            உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.


           👉காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.


👉ஏர் இழுத்த காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய  எங்கள் காளைகள், 


👉வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த  எங்கள் காளைகள், 


👉ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், 


👉காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.


          மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன.

 

             ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.

           

             உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?

இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும்.

             

              நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்துகொண்டுள்ளது.


              என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார்.


                என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.

என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.


               இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.


               உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.

புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள். 


              உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.   எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’


இப்போதும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறீர்கள். 


             படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.


      "இப்போதும் உங்களால் மாற முடியும்." 


       மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள்.


         பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது……


காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.


         உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.

நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்❓


எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். 


❗கேவலம், நாங்கள் 

மாடுகள்தானே❗


பசுவின் கேள்வி நியாயம்தானே ❓

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி