திரிகடுக்காய்

 இந்த வைத்தியமே போதுங்க 

இனி வைத்தியரிடம் போகாதீங்க


  உடலிலே எந்த நோய்களும் வராமல் இருப்பதற்காக நாம் கையாளும் ஒரு பாதுகாப்பான வைத்திய முறை இது


தேவையான பொருட்கள் 


சுக்கு 

மிளகு 

திப்பிலி 

கடுக்காய்


  இவைகளை சம அளவாக எடுத்து சூரணமாக செய்து கொண்டு இந்த சூரணத்தில் வெள்ளாட்டு பால் ஊற்றி ஒரு நாள் முழுவதும் இதை ஊறவைத்து மறுநாள் சூரிய ஒளியில் வைத்து உலர்த்தி உலர்ந்த பின் மீண்டும் பொடியாக செய்து கொள்ள வேண்டும்


சாப்பிடும் முறை


  இந்த சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு காலை வேளையில் இளநீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இதன் விளைவாக

கொடிய நோயான வாத நோயானது  நமது வாழ்நாள் முழுவதும்  எந்த ஒரு காரணத்தினாலும் நம் உடலிலே தோன்றாது


  இதே சூரணத்தை நெய்யில் கலந்து மதிய வேளையில் சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்படுகின்ற எந்த ஒரு நோயும் எந்த காரணத்தினாலும் நமது உடலில் தோன்றவே தோன்றாது


 இந்த சூரணத்தை தண்ணீரிலே கலந்து இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் சிலேத்தும குற்றத்தால் உடலில் ஏற்படுகின்ற எந்த ஒரு நோயும் நம் வாழ்நாளில்  நமக்கு வரவே வராது


இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் நோய்கள் உண்டாவதற்கு மூலகாரணமாக இருக்கின்ற வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களின் விகிதாச்சாரத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது 


    முக்குணங்களில் மாறுபாடு ஏற்படுவதினாலே உடலில் நோய்கள் உண்டாகின்றது இந்த வைத்திய முறையை கடைபிடித்தால் உடலிலேயே முக்குணங்களில் மாறுபாடு எதுவும் எப்பொழுதும் ஏற்படாது 


இதன் விளைவாக உடலில்  ஒரு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி விடுகின்றது எனவே இந்த வைத்திய முறையை பயன்படுத்தி வருபவருக்கு வாழ்நாள் முழுவதும்  நோய்கள் எதுவும் வராத வண்ணம் உடலை காக்கின்ற ஒரு எளிய வைத்திய முறையாக இது இருக்கின்றது


எளிய மருத்துவம் 

ஆனால் 

நிறைய மகத்துவம் 


நன்றி 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி