உடலுக்கு ஆரோக்கியம் தரும் மோர்

 மோர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்


1.நெஞ்சு எரிச்சலைப் போக்கும்:


அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம்.

தினமும் மதிய உணவுடன் மோர் சேர்த்துக்கொள்வதையோ, அல்லது காலை வேளையில் ஒரு டம்ளர் மோர் பருகுவதையோ வழக்கமாக மாற்றிக்கொண்டால், அசிடிட்டிக்கு குட்பை சொல்லலாம். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.


2.எடையைக் குறைக்க


உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு அறவே இல்லை. அதேநேரத்தில் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.


3.நீரிழப்பு


உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர் தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.


4.எலும்புகள் வலுவடையும்

தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோரில் சுமார் 284 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எனவே மோர் பருகுவதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.


5.ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்


மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, ஒருவருடைய ரத்த அழுத்தம் 130/80 என்ற விகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். மோரில் பயோ ஆக்டிவ் (Bio-Active) புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.


6.மலச்சிக்கல்


வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் அன்றாட உணவில் மோரை சேர்த்துக்கொள்வதன் மூலம், குடல் பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி