குடல்புண்

 -------------------------குடல் புண்------------------


(ஒரு நோய்க்கான காரணமும் அது ஆரம்பமாகும் இடமும் தெரியாமல் ஒரு நோயை தவிர்க்கவும் முடியாது அதை நிவர்த்தி செய்யவும் முடியாது.)


 மணத்தக்காளி, வெந்தயக் கீரை அகத்தி, இதில் ஏதாவது ஒன்றை சுத்தம் செய்து  நறுக்கி,


துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் சேர்த்து கீரையுடன் வேக வைத்து கடைந்து கடுகு, காய்ந்த மிளகாய் கருவேப்பி லை சேர்த்து தாளித்து கூட்டாகப் உண்டு வருவது நலம்.


இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து  இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் உப்பு,  துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி சூப்பாக குடித்து வருவதும் நலம்.


பூசணிக்காயில்  விதைகளை நீக்கி தோல் சீவி பொடியாக நறுக்கி  மிக்சியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து   ஒரு வாரம் சாப்பிட்டாலே குடல் புண் குணமாகி நலமாக முடியும்.


மாதுளம் பழத்தை மிக்சியில்  அரைத்து வடிகட்டி  தேன் கலந்து குடித்து வர வயிற்றுப் புண், வயிற்று வலி ,பிரச்சனைகள் வராமலேயே பார்த்துக் கொள்ளலாம்.


அகத்திக் கீரையை வாரம் ஒருமுறையாவது உண்டு வருவது குடலுக்கு பலம். 


அத்திக் காயை சிறுபயிருடன்  சமைத்து சாப்பிட்டு வந்தாலும் குடல் புண் ஆறும்.


அம்மான் பச்சரிசியுடன், மஞ்சள், ஓமம், சேர்த்து அரைத்துச் உண்பதா லும் குடல் புண் குணமாகும். 


ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொண்டு இரண்டு கிராம் அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட  

குடல் புண், வயிற்று வலி குணமாகும். 

கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் உண்பதாலும் வயிற்று புண் குணமாகும்.


அனைத்திற்கும் மேலாக, கழிவுகளின் தேக்கமே நோய், இந்த திட திரவ வாய்வு கழிவுகளை, ஒரு மண்டலம், எடுத்துக்கொள்வது, மிகவும் நல்லது.


இதனால் மனமும் உடலும் நிரந்தர ஆரோக்யத்துக்குள் இருக்கும்.


வேறு எந்த பெரிய நோய்களும் நம்மை நெருங்க வாய்ப்பிருக்காது.

       

                      வாழ்த்துக்கள்

     ஆலோசனைகளுக்கு வாட்ஸ் அப்.

                            6385524094


             ------------------------------------------------

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி