தலையில் புழு வெட்டு

 #தலையில்_புழு_வெட்டு #ஏற்படுவதற்கான_காரணங்கள்❓


#அதற்கான_தீர்வுகள்..❓❓❓


தலையில் வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் இது புழுவெட்டு எனப்படுகிறது


புழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா - Alopecia Areata 

(அரேட்டா - அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும். இது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம். தலையில் சில இடங்களில் மட்டும் வட்டமாக காசு அளவில் முடி இன்மை. இது ஒரு தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் தலையில் புழு வெட்டு பரவும்.


இது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் 

(Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல 


அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.

புழுவெட்டு வகைகள் (Types of Alopecia Areata)


🉐 அலோபீசியா ஏரியேட்டா 

(Alopecia Areata) 


திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது


🈹 அலோபீசியா பார்சியாலிஸ் 

(Alopecia Partialis) 


பாதி பகுதியாக முடி கொட்டுவது.


🈯 அலோபீசியா பார்பே 

(Alopecia Barbae)  


தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.


🈺 அலோபீசியா டோட்டாலிஸ் 

(Alopecia Totalis) 


தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.


🔯 அலோபீசியா ஒபியாசிஸ் 

(Alopecia Ophiasis) 


தலையின் பின்புறமிருந்தோ, 

காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.


🆔 அலோபீசியா டிப்யூஸா (Alopecia Diffusa)  


பரவலாக முடி உதிர்தல்.


✳ அலோபீசியா யுனிவர்சாலிஸ் 

(Alopecia Universalis) 


உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.


⭕➡ இந்த நோய் வருவதற்கான காரணங்கள்❓❓❓


ஒவ்வாமை, 


கெட்டுப் போன அசைவ உணவுகள் உண்பது, 


குடல் கிருமிகள், 


பல் சொத்தை, 


மன இறுக்கம் என்ற டென்சன், 


இரத்தத்தில் போதுமான அளவு தேவையான சத்துகள் இன்மை, 


மார்பில் கழலை கட்டிகள், 


கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பின் விளைவுகள் ,


ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பின் விளைவுகள், 


சில வகை காய்ச்சல் சிபிலிஸ் கொனேரியா 


போன்ற பாலியல் நோய்கள் போன்ற ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருக்கலாம் இது தவிர சில காரணங்களும் உள்ளன.


⭕➡ #அறிகுறிகள்❓


* சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.


* சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.


* சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.


* ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).


⏩#கவனிக்க……⏪


* இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.


* சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.


* இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.


* முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.


🔴 #வீட்டு_வைத்தியம்❓❓❓


இந்நோயாளிகளுக்கு முதலில் பேதிக்குக் கொடுத்து உடலையும் குடலையும் சுத்தப் படுத்த வேண்டும்.


👉முருக்கன் விதை மாத்திரைகள்

சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


அதை வாங்கி  வந்து தனியாக் குடிநீருடன் (தனியா பனை வெள்ளம் சேர்த்துக் கொதிக்க வைத்த தீநீர் ) அதிகாலை சாப்பிட வேண்டும் அனைத்துக் கழிவுகளும் வெளியேறி விடும்.

 

பல் சொத்தை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

 


⭕➡ #புழு_வெட்டு_தைலம்


★தேவையானவை


செக்கு நல்லெண்ணெய்  ........ நூறு மில்லி 


மிளகு  .............  பத்து கிராம் 


வேப்ப விதைப் பருப்பு  ......  பத்து கிராம் 


கருஞ்சீரகம் ............  பத்து கிராம் 


ஆகிய மூன்று பொருட்களையும் செக்கு நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக எடுத்து கிடைக்கும் விழுதை மீதி இருக்கும் நல்லெண்ணையுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும் 

இந்த கலவையை  

எடுத்து புழு வெட்டு உள்ள இடங்களில் தேய்த்து வர படிப்படியாக புழு வெட்டு நீங்கி முடி முளைக்கும்.


⭕ ➡தலை தாடி மீசை போன்ற இடங்களில் வரும் சொட்டை வழுக்கை நீங்கி 

முடி வளர ……


அகத்திக் கீரை ..................  தேவையான அளவு 


சின்ன வெங்காயம் ..............  இரண்டு 


எலுமிச்சம் பழம் சாறு .................  அரைப் பழம் 


கல் உப்பு . ............... ஐந்து கிராம் 


சேர்த்து அரைத்து விழுதாக்கி சொட்டை விழுந்துள்ள இடங்களில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சீகைக்காய் தேய்த்துக் குளித்து வர மீண்டும் முடி  வளரும்.


⭕⏩மருந்து


வெள்ளைக் கரிசாலை சாறு நல்ல எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து காய்ச்சி தைலமாக்கி புழு வெட்டு உள்ள இடங்களில் தடவி வர முப்பது முதல் நாற்பது நாட்களில் முடி வளருவதைக் கண்கூடாகக் காணலாம்.

 

⭕⏩மருந்து இரண்டு


கார்போகி பொடி அவல் குஜாதி லேபம் ஆயில்மெட் இரண்டையும் நன்கு புளித்த கட்டித் தயிரில் அல்லது வினிகரில் அல்லது எலுமிச்சை சாற்றில் குழைத்து இரவில் தலையில் பூசி மறு நாள் காலையில் தலைக்கு சீகக்காய் கொண்டு குளித்து வர முடி வளரும்.


⭕⏩தினமும் காலை மாலை இள வெயில் தலையில் பட வேண்டும் ஆகவே வெயில் தலையில் படுமாறு வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.


⭕⏩மருந்து மூன்று


குளித்த பின் #சிரட்டை_தைலம் பஞ்சில் தொரட்டு புழு வெட்டு உள்ள இடங்களில் தேய்த்து வர முடி வளரும்.


⭕⏩மருந்து நான்கு


செவ்வரளி இலைகள் 20 No


கல் உப்பு   . அரை 1/2 தேக்கரண்டி


இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து பூச்சி வெட்டு இருக்கும் இடங்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு சீகக்காய் கொண்டு குளித்து வர முடி வளரும் அலோபீசியா என்ற புழு வெட்டு நோய் குணமாகும்


★கண்டிப்பாக


தினமும் காலை மாலை இள வெயில் தலையில் பட வேண்டும் ஆகவே வெயில் தலையில் படுமாறு வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.

 


⭕⏩ வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.


⭕⏩ மிளகுத்தூள், சின்ன வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.


🔯➡ #உள்_மருந்து


இந்த உள் மருந்து கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

 

🆗மருந்து


பரங்கிபட்டை சூரணம் 


தினமும் காலை மாலை உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி சூடான பாலி கலந்து சாப்பிட்டுவரவும்.


🆗 மருந்து இரண்டு  


நிலவேம்புக் கசாயம் நாள்தோறும் காலை மாலை 50 ml  என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.


🆗 நாட்டு மருந்துக்கடைக்கு சென்று சுத்தமான…… 


கருஞ்சீரக எண்ணெய் என்று கேளுங்கள். குடிப்பது போன்று வேண்டும் என்று கேளுங்கள். தருவார்கள் பிறகு ஒருவாரம் அதில் ஒரு மூடி எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் இரவில் குடியுங்கள். மேலும் ஒரு விரலில் எண்ணெய் தொட்டு அந்த இடத்தில் படர்த்தி தேய்த்து விடுங்கள். ஒருவாரத்தில் முடி வளர்ந்து விடும். 


💢➡ தலையில் புழு வெட்டு 


1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.


2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.


3. மிளகுத்தூள், சின்ன வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.


4. சோற்றுக் கற்றாழை மடலில் இலைப்பகுதியிலுள்ள சோற்றை மட்டும் எடுத்து புழுவெட்டு உள்ள பகுதியில் தேய்த்து வந்தால் சொட்டை மறைந்து முடி வளரும்.


5. வெள்ளைப் பூண்டுப் பற்களை தேனில் ஊறவைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். இவ்வாறு இருபது முப்பது நாட்கள் செய்ய முடி வளரும்.


⭕➡கும்மட்டிவிதை    -  5 கிராம்

                   

மஞ்சள்            -  5 கிராம்

                   

சின்ன வெங்காயம் -  5 கிராம்

                

மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசிவர புழு வெட்டு குணமாகும்.


               

⭕➡பழுத்த பூவரசு இலை -  3

                   

மஞ்சள்              -  5 கிராம்

                   

மிளகு               -  5எண்ணிக்கை


                

மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசிவர புழு வெட்டு குணமாகி, மயிர் செழித்து முளைக்கும்.


⭕➡அரைக்கீரை விதை  -  5 கிராம்

              

மஞ்சள்            -  5 கிராம்


                

இரண்டையும் விழுதாய் அரைத்துப் பூச புழுவெட்டு குணமாகும்.


⭕➡வசம்பு            -  5 கிராம்

                  

மஞ்சள்           -  5 கிராம்

                  

நிலவேம்பு     -  5 கிராம்


                

மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசி வர புழு வெட்டு குணமாகும்.


⭕➡புழு வெட்டு, வழுக்கை


1 கோப்பை நல்லெண்ணெ யில் 

7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும். இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக் கவும். பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.


⭕➡வீட்டுலேயே புழுவெட்டு தைலம் தயாரிக்கலாம்.


⏩எண்ணெய் தயாரிக்கும் முறை 


தும்மட்டி பழங்கள், 


நெல்லிக் காய்கள், 


கரிசலாங் கண்ணி இலைகள் 


★சம அளவு


இவற்றை சேகரித்து வைத்துக்கொண்டு, தும்மட்டிப் பழங்களின் விதை நீக்கிய சதைகளையும், நெல்லிக்காயின் கொட்டை நீக்கிய சதைப்பகுதிகளையும், அரைத்து விழுதாக்கிய கரிசலாங்கண்ணி இலைகளுடன் சேர்த்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, பாத்திரத்தின் வாய்ப் பகுதியை வெண்ணிற துணி கொண்டு மூடி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும்.


★முடி வளர்ச்சி அதிகரிக்கும்


இது போல, ஒரு வாரம் வைத்து எடுக்க, எண்ணையில் கரிசலாங்கண்ணி இலை விழுது, தும்மட்டி மற்றும் நெல்லி விழுதுகள் நன்கு கலந்து கரைந்திருக்கும்.


இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, அதை தினமும் தலையில் முடி உதிர்ந்த இடங்களில் மற்றும் உடலில் புழு வெட்டு பாதிப்பு ஏற்பட்ட மற்ற இடங்களில் நன்கு தடவி வர, சில தினங்களில் பாதிப்புகள் விலகி, மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.


இந்த எண்ணையை தலை முழுவதும் தடவி வர, முடி உதிர்தல் பாதிப்பு குறைந்து, முடி நன்கு கறுப்பாகும். தினமும் இந்த எண்ணையை தடவி, சற்று நேரம் ஊற வைத்த பின்னர், குளிக்கும்போது, சிகைக்காய்த் தூள் கொண்டு, தலையை நன்கு அலசி குளித்து வர வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி