கருஞ்சீரகம் பயன்

 ------------------மரணம் தவிர்த்து----------------


எழுதி வைத்த மரணம் தாண்டி அனைத்து நோய்கழுக்கும் மிக நல்ல தீர்வு "கருஞ்சீரகம்"


கப உடம்பு காரங்கழுக்கு அடிக்கடி சளி பிடிப்போர்க்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணி.


ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.


கருஞ்சீரக பொடியை, ஒரு ஸ்பூன் அளவு சுடுநீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். 


தொடர் இருமலால் பாதிக்கப்படு வோர், 1 ஸ்பூன் கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.


 நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகியோனின்' என்ற வேதிப்பொருள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு குறையும். 


தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். 


குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து பயன்படுத்துவது நல்லது.


கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில், இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் 'இன்டெர்பிதான்' என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.


சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் நல்ல மருந்து.


 அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். 


வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.


 கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இதை தனித்தனியாக சுத்தம் செய்து, ஒரு வாணலியில் இட்டு கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதை சாப்பிட்ட பின், எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது.


தினமும் இப்படி செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும், மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறி விடும். இதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணி.


உடல் கழிவுகளை 48 நாட்கள் நீக்கிய பின் பயன் படுத்துவதி முழு பலனை உணரலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி