நுரையீரல் சுத்தம் செய்ய

 நுரையீரல் சுத்தி :-


உங்க நுரையீரலை நீங்களே சுத்த‍ம் செய்வதற்கு அதிக நாட்கள் ஆகாது !!!


 மூன்றே மூன்று நாட்கள்தான் ஆகும்.‌..... 


இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக உங்கள் நுரையீரல் சுத்த‍மடை யும் என்று நம்பலாம்.


புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களு க்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளி னால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு......


அதே சமயம் 45 வருடமாக புகைபிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு.....


 இது ஆளாளுக்கு வித்தி யாசப்படலாம்.


எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவ தை நிறுத்தி விட வேண்டும்.

 உதாரணத்திற க்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை....


 உடலிருந்து நச்சுகளை நீக்கவேண்டியது அவசியம்.


 எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.


✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும்.


 இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். 


சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை.


 எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.


முதல் நாள்:


✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்....


✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான திராட்சைப் பழச் சாற்றை குடிக்கவும்..


 இதன் சுவை பிடிக்காவிட்டால் திராட்சை பழச்சாற்றுக்குபதிலாக அன்னாசிபழச் சாற்றை குடிக்கலாம்....


 எல்லாம் சுத்த மான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாகஇருக்கட்டும்....

 

இந்த சாறுகளில் இயற்கை யான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ள தால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.


✔ மதிய உணவிறக்கு முன்பாக 300மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும்.....


 இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது.....


கேரட்சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட் களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத் தன்மை க்கு மாற்றுகிறது.


✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன் பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும்.


 பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒருடானிக்காக உதவுகிறது.


 இதுஉடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக

சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது.


 கிரேன் பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள் அல்லது ஆரஞ்சு சாற்றை கலப்படம் இல்லாமல்

குடிக்கலாம்.


✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும்.


 குறைந்தது 20நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்து வேர்வையைவெளி யேற்றவும்....


 அல்லது 20நிமிடங்களில் சுடுதண்ணீரி ல் குளிக்கலாம்.


 வியர்வை வெளியேறும் போது நச்சுகளும் வெளி யேறும்.


✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 


5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும்.


 இவ்வாறு கொதி நீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.


✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை இருக்காது ்


அதன் பிறகு ........


முசுமுசுக்கை


முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.


 சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது.


 மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.


ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக....


 முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.


முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும்.


 இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.


கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். 


இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது.


 சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது.


 மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.


அமைதியின்மை போக்கும்


இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம்.


 இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. 


உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.


சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.


ஆஸ்துமா குணமாகும்


முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.


முசுமுசுக்கை தைலம்

முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும்.


 வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.


மூச்சிரைப்பு குறைய


பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.


இருமல் குணமாக


முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணம் ஆகும்


தகவல்:- வைத்தியர் மாலிக்


8220320197

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி