சாம்பல் பூசணி

 சாம்பல் பூசணி நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்.


👉சாம்பல் பூசணி நன்மைகள்.:


சாம்பல் பூசணியானது கொடி வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். 


இது பரங்கிக்காய் போன்ற தோற்றத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும். இது கோடைப்பூசணி என்றும் தடியங்காய் என்றும் அழைப்பார்கள். வைட்டமின் பி - 1, வைட்டமின் பி – 3, வைட்டமின் – சி ஆகிய வைட்டமின்களையும், கால்சியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களையும் அதிகளவில் கொண்டது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் அறவே இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச் சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது.


பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி, மற்றோன்று சாம்பல் பூசணி. இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. சாம்பல் பூசணியானது 96 சதவீத நீர்ச்சத்து கொண்டது. சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு அற்புத காய்கறியாக சாம்பல் பூசணி குறிப்பிடபடுகிறது.


👉சாம்பல் பூசணியின் மருத்துவ பயன்கள்


1.சாம்பல் பூணிக்கு உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.


2.சாம்பல் பூசணியை உட்கொண்டால் உடல் பருமனாவது தவிர்க்கபடும். மேலும் சாம்பல் பூசணியானது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.


3.சாம்பல் பூசணியானது வலிப்பு நோய்களை குணமாக்குகிறது.

உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் தணியவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது.


4.வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மற்றும் மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது.


5.சாம்பல் பூசணியானது ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது.


6.சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் பாதுகாக்கிறது. பார்வைத் திறன் மேம்படவும் சாம்பல் பூசணி உதவுகிறது.


7.நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் சாம்பல் பூசணியில் அதிகளவு உள்ளது.


8.நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும் சாம்பல் பூசணி காய்கள் பயன்படுகிறது.


9.உடல் சூடு, எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலிய பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது சாம்பல் பூசணி.


10.உடல் வலியால் அவதிபடுபவர்கள் சாம்பல் பூசணியை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விடுபடலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி