ஆண்மை குறைபாடு 2060

 ஷன்னாஸ்வான் என்ற மானிடவியல் நிபுணர், #_கவுண்ட்_டவுன் என்ற நூலை எழுதியுள்ளார்.! அந்நூலில் வரும் 2060 முதல் இனப்பெருக்கத் திறனற்ற ஆண்களாகவே, ஆண்கள் திகழ்வர்.. எனக் கூறியுள்ளார்.!


இந்த இதழில் கூறப்பட்டுள்ள தகவல்படி நாம் பயணிப்போமா? மாட்டோமா? மனித குலம் அழிந்துவிடுமா? என்ற கேள்விக்கு பதில் கூறுவது கடினம். இருப்பினும் இந்த நிலைக்கு முக்கிய காரணிகளுள் ஒன்று நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றியிருக்கும் வேதிப்பொருட்கள்தான். நம் இனப்பெருக்கத் திறனை காப்பாற்றிக்கொள்ளவும், இந்த உலகில் நம்முடன் இணைந்து பயணிக்கும் பிற உயிர்களையும் காப்பாற்ற வேதிப்பொருள் பிரச்னையை நாம் சரியாக கையாளுவது அவசியம்.


ஆண்களிடையே உயிர் அணுக்கள் குறைந்துவருவது கண்டறியப்பட்டிருப்பது என்பது முதல் முறை நிகழ்வு அல்ல. 1990களில் முதல் முறையாக நம் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்தது.


2017ம் ஆண்டு மேலும் வலுவான ஆய்வு முடிவு ஒன்று ஆண்களிடையே உயிர் அணுக்கள் குறைந்து வருவதை புள்ளிவிவரத்துடன் வெட்டவெளிச்சமாக்கியது. அதன்படி 1973 முதல் 2011 வரை மேற்கத்திய ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை 50 முதல் 60% வரை குறைந்துவிட்டதாகவும், இந்த சரிவு என்பது ஆண்டுக்கு 1% முதல் 2% வரை ஏற்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவே ஷன்னா ஸ்வான் குறிப்பிடும் கவுண்டவுன் ஆகும்.


ஆண்களின் விந்தணு குறைவு என்பது உடலுறவு கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தை குறைத்துவிடும். நம்முடைய பேரக்குழந்தைகளிடையே இனப்பெருக்க திறன் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலே போகக்கூடும் நிலைதான் ஏற்படும் என்றும், 2045ம் ஆண்டு முதல் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றால் உதவி இனப்பெருக்க முறைகளை கையாண்டாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இனப்பெருக்க குறைபாட்டிற்கான காரணிகள் என்ன?


இனப்பெருக்க குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், 1973ம் ஆண்டுக்கு பிறகு நம்மிடையே ஏற்பட்ட வாழ்வியல் மாறுபாடு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது தவிர உணவு முறை, உடற்பயிற்சி செய்யாதது, உடல் பருமன், மது குடிப்பது போன்றவை உயிர் அணுக்கள் குறைபாட்டிற்கு பெரிய காரணிகளாகும்.


நாம் பயன்படுத்தும் ரசாயணங்கள் நம் உடலில் ஏற்படுத்தும் ஹார்மோன் மாற்றங்களாலும் மனிதர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், உள்ளிழுக்கும் காற்று, தோலுக்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் போன்றவற்றின் மூலம் நச்சு வேதிப்பொருட்கள் நம் உடலை அடைகின்றன. ஏறக்குறைய வேதிப்பொருட்கள் நம்முடன் கலந்துவிட்டது என்றும் எங்கும், எதிலும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் நவீன காலத்திய வாழ்க்கை முறையில் வேதிப்பொருட்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில் மனிதன் இருக்கிறான் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


கர்ப்ப காலத்தில் தாயின் மூலம் கருவிற்குள் வேதிப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் எனவே உலகில் வருவதற்கு முன்னரே இந்த சூழலை கருவில் இருக்கும் குழந்தையும் சந்தித்துவிடுகிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


துணி துவைக்க பயன்படுத்தும் வேதிப் பொருட்கள் தொடங்கி பயிர்களுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், பிளாஸ்டிக் வரை மனிதனின் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கவுண்டவுன் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனிதனால் மாடுபடுத்தப்பட்ட ரசாயன மாசின் மூலம் சக உலகில் வாழ்ந்து வரும் மிருகங்களும் இனப்பெருக்க குறைபாட்டினை சந்தித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் ஆராச்சியாளர்கள்.


நன்றிகளும்

பிரியங்களும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி