மூலிகை தேநீர்

 சீரகம் 4 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 4 ஸ்பூன் 

சோம்பு 4 ஸ்பூன்

லவங்கபட்டை 2 

ஏலக்காய் 12

கிராம்பு 14

மிளகு 28 

லேசாக ஈரபதம் போக வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு இதில் 2 ஸ்பூன் அளவிற்கு சுக்கு பொடி சேர்த்து மிக்சியில் அரைத்து பத்திரபடுத்தவும் . 

இதில் ஒருவருக்கு 1 டீ ஸ்பூன் அளவு பொடியை 2 டம்ளர் அளவு நீரில் போட்டு அதில் துளசி இலை 5 போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுருக்கவும் . இறக்கும் முன் 1/4 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஓரிரு கொதி வந்த பின் இறக்கவும் .பிறகு அதை வடிகட்டி ஒரு நபர்க்கு 1/2 எலுமிச்சை சாறு விட்டும் அதில் தேன் ( சர்க்கரை வியாதி எனில் உப்பு ) சேர்த்து சாப்பிடவும் . இதை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு  வேறெதுவும் சாப்பிட கூடாது . 


பயன்கள் : 

1 . உடல் சூடு அதிகமாக இருப்பவருக்கு மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்து உடல் சூடு குறைந்து வெள்ளை நிறமாக மாறும் .

2 . நன்கு பசி எடுக்கும் ஜீரண உறுப்பு பலம் பெறும் .

3 . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

4 . சளி பிடிக்காது 

5 . அதிக வியர்வை உள்ளவர்களுக்கு அந்த பாதிப்பை படிப்படியாக குறைக்கும் .

6 . மூலம் உள்ளவர்களுக்கு மலம் இலகுவாக கழியும் .

7 . ராஜ உறுப்புகள் பலம் பெறும் 

8 . கொரனா போன்ற நோய் தாக்காமல் தடுக்கும் , இந்நோய் இருப்பவர்க்கு சிறந்த உடல் தேற்றியாக அமையும் .

மேலும் பல நன்மைகள் உண்டு 


*** தினமும் ஒரு வேளை மட்டுமே போதும் . இதை தொடர்ந்து எடுக்க நோயில்லாமல் நீண்ட ஆயுள் வாழலாம் .


நண்பர்கள் இதை பின்பற்றி நோயின்றி வாழ வாழ்த்துக்கள்......

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி