கண்டங்கத்தரி

 ♥ பசி  மற்றும்  நோய் தீர்க்கும் மருந்து  -  உணவு பாகம் - 22. ♥

♥ கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் - சித்தமருத்துவர் . ♥


              ♥  கோரோனோ   வைரஸ்   மனித  உடலுக்கு  வெளியே  10 மணி   நேரத்துக்கு  மேல்   உயிருடன்  இருக்க  முடியாது.    10 மணி   நேரத்துக்கு      பின்பு   தானே   அழிந்துவிடும்.  மனித  உடலுக்கு  வெளியே  இனப்பெருக்கமும்   செய்ய   முடியாது.

              ♥  மனித   உடலில்   தொண்டையில்  மட்டுமே  தங்கி   இனப்பெருக்கம்   செய்யும்.  கோளைச்சளியை  உற்பத்தி  செய்யும்.   அந்த  சளியுடன்  சில வைரஸ்  கிருமிகள்   நுரையீரலுக்குள்  சென்று,  நுரையீரல்   சுவர்களை  கடினப்படுத்தி  நுரையீரல்   சுருங்கி  விரிய   முடியாமல்   செய்துவிடும்.  அதனால்  சுவாசிக்க  காற்று கிடைக்காமல்  சிலர்   மரணம்  அடைகிறார்கள்.    ஆழ்ந்த  மூச்சு  இழுத்து   விட்டு    மூச்சு   பயிற்சி   செய்யுங்கள்.

              ♥  தொண்டையை  விட்டு  உணவுக்குழாயில்   விழுந்தால்,   விழுந்த   வினாடியில்  வைரஸ்  கிருமி   அழிந்துவிடும்.    அதனால்   தொண்டை  சுவரில்   அழுத்தமாக  ஒட்டிக்கொண்டு,  இனப்பெருக்கம்  செய்து   மனிதனை   அழிக்க  முயலுகிறது.   

              ♥  வாயில்  ஓரிரு  கிராம்பு  போட்டு  லேசாக  கடவாய் பல்லால்   நசுக்கி   வாயில்  ஒதுக்கிக்கொண்டால்,  உமிழ்நீருடன்   கிராம்பு   சாறு   துளித்துளியாக   சில  வினாடி  அல்லது  நிமிச   இடைவெளியில்     தொடர்ச்சியாக  தொண்டையில்  இறங்கும்போது   தொண்டையில்   ஒட்டிக்கொண்டிருக்கும்   வைரஸ்  கிருமி  தொடர்ந்து  ஒட்டிக்கொண்டிருக்க   முடியாமல்  தடுமாறுகிறது.  அப்போது   நீங்கள்  குடிக்கும்  தண்ணீரால்   பல  கிருமிகள்  உணவு  பாதைக்கு   தள்ளப்பட்டு  அளிக்கின்றன.  மீதமுள்ள   கிருமிகள்  இனப்பெருக்கம்  செய்தாலும்,  தொடர்ந்து   கிருமிகள்  உணவு  பாதைக்கு  இழுக்கப்பட்டு   அழிவதால் ஓரிரு   நாளில்   எல்லா   கிருமியும்  அழிக்கப்பட்டு,   நோயிலிருந்து   விடுபட்டு   ஆரோக்கியமாகிவிடுவோம்.  

              ♥  இதுபோல     தொண்டையில்   ஒட்டிக்கொண்டிருக்கும்   வைரஸ்  கிருமி  தொடர்ந்து  ஒட்டிக்கொண்டிருக்க   முடியாமல்  தடுமாற   என்னென்ன   செய்யமுடியுமோ   அனைத்தும்   செய்யலாம்.  கொதித்துக்கொண்டிருக்கும்   வெறும்   தண்ணீரில்   இருந்து  வரும்   நீராவியை (ஆவி  பிடித்தல்)  வாய்வழியாக   உள்ளிழுத்து   விழுங்கலம்;  மூக்கு   வழியாகவும்    உள்ளிழுக்கலாம். கிராம்பு   அல்லது   இன்ஜி  போன்றவை   ஊறிய   நீரை   அடிக்கடி   குடிக்கலாம்.   

              ♥   கீழே  உள்ள   ரெசிபிப்படி   தயாரித்த    மசாலா டீ       குடிக்கலாம்.

1. ஓமம் .....100 கிராம்

2. சோம்பு .....50 கி.

3. கிராம்பு .....50 கி.

4. பட்டை .....  50 கி

5. சுக்கு .....10 கி

6. ஏலக்காய் .....10 கி.

              ♥  இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து கொண்டு காலை மாலை டீ போடும்போது நான்கு  பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும்.   நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும்..

              ♥   சுக்கு மல்லி   காபி   குடிக்கலாம்......................  

              ♥   உடலுக்கு   குளிர்ச்சி    தரக்கூடிய    பழங்கள்,  காய்கறிகள்,  உணவுகளை  சாப்பிடக்கூடாது. 

              ♥   உடலுக்கு   உஷ்ணம்    தரக்கூடிய,  புரோட்டின்   நிறைந்த     பழங்கள்,  காய்கறிகள்,  முட்டை,  கோழி  போன்ற  அசைவ   உணவுகளை  சாப்பிடுங்கள். அரிசி  கோதுமை  குறைந்த  அளவில்  சேர்த்துக்க்கொண்டு,  சூப்   அதிகம்  சாப்பிடுங்கள்.  கண்டங்கத்திரியை    சமைத்து   உண்ணுங்கள்.

              ♥   கண்டங்கத்திரி பழத்தின் விதைகளை  நெருப்பில் போட்டு  எழும்    புகையை பற்களின் மேல்படும்படி செய்ய  கிருமிகள் நீங்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி