சுவாசம் சீராக

 *.               மூச்சு திணறல் குணமாக 

                       மூலிகை வைத்தியம்


தேவையான பொருள்கள்

துளசி 

அதிமதுரம் 

சிற்றரத்தை   

கற்பூரவள்ளி

முசுமுசுக்கை


   இவை அனைத்தையும் சம அளவாக பொடி செய்துகொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர சளி ஈளை  இருமல் மற்றும் தொண்டை கம்மல் போன்ற கபம் சார்ந்த நோய்கள் அனைத்தும் நீங்கும் மேலும் மூக்கடைப்பு குணமாகும் மூச்சுத்திணறல் நீங்கி சுவாசம் சீராக நடைபெறும்


சுவாசம் சீராக இயங்க


தேவையான பொருட்கள்


               அத்தி இலை 50 கிராம் 

              வில்வ இலை 50 கிராம்

               ஆடாதோடை 50 கிராமம்

                  வேப்பிலை 30 கிராம் 

                              சீரகம் 30 கிராம் 

                          தனியா 30 கிராம்


   இவை அனைத்தையும் அளவுகளின் படி பொடி செய்துகொண்டு இதில் ஐந்து கிராம் எடுத்து இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்டக்காய்ச்சி காலை வெறும் வயிற்றில் இதை பருகிவர மூச்சு திணறல் மற்றும் மூக்கடைப்பு மூக்கில் நீர் ஒழுகுதல் தும்மல் இருமல் சுரம் போன்ற கபம் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்


  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் சுவாச கோளாறுகள் நீங்கும் மேலும் ஜலதோஷம் முழுமையாக குணமாகும்

நுரையீரலில் தேங்கியுள்ள சளிகள் நீங்கி சுவாசம் சீராக நடைபெறும்


               வளமுடன் வாழ வாழ்த்துக்கள்     

                          சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி