காய்ச்சல் விளக்கம்

 பகிர்வு பதிவு..


அக்குபங்சர் பார்வையில் காய்ச்சல் 

என்பது என்ன?....


உடலின் வெப்பநிலை 98.4 டிகிரிக்கு மேலே செல்வதை காய்ச்சல் என்கிறோம்.....


மூன்றுவித நிலைகளில் நம் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது.....


I.சிறுகுடல்;

நம் உடலின் எந்த உறுப்பையும் விட அதிகமான வெப்பத்தை தாங்க கூடிய உறுப்பு....பல சமயங்களில் இந்த உறுப்பு... அதிகரிக்கும் உடலின் வெப்பத்தை தாங்குகிறது....

சிறுகுடல் அதிகப்படியான வெப்பத்தை தாங்கும் சக்திக்கு

கல்லீரலின் எசன்ஸான கிளைக்கோஜனனும், சிறுநீரகமும் உறுதுணையாய் இருக்கின்றன....


வயிறும் மண்ணீரலும் ஓரளவுக்கு துணை நிற்கின்றன...

நுரையீரலும், பெருங்குடலும் 

சிறுகுடலின் அதிகப்படியான வெப்பத்தை உடலை விட்டு வெளியேற முயல்கின்றன....


இந்த சிறுகுடலில் அதிகப்படியான வெப்ப தேக்கத்திற்கு காரணமாய் இருப்பது வயிறு தான்....

அதாவது நாம் உண்ணும் உணவால் வயிறு அதிக வெப்பம் அடைகிறது....

இந்த வெப்பம் மண்ணீரல் மூலம் நுரையீரலுக்கு கடத்தப் படுகிறது.....

ஆரம்பத்தில் இந்த நுரையீரலை அடையும் வெப்பம்....சுறு சுறுப்பான இயக்கத்தை தருகிறது....

ஆனால் நாளாவட்டத்தில்...நுரையீரலில் அதிகப்படியான வெப்பம் ஏற்படும் போது...நுரையீரல் சோர்வடைகிறது....இதனால் சளிபிரச்சனை ஏற்படுகிறது....


வயிற்றின் அதிகப்படியான வெப்பத்தின் ஒரு பகுதி சிறுகுடலால் கிரகிக்கப்பட்டு...

சிறுகுடல் அதை தாங்கி கொள்கிறது....அப்படி தாங்கி கொள்ள முடியாமல் போகும் போதுதான்....நுரையீரல் அந்த வெப்பத்தை தோலின் மூலம் வெளியேற்ற முயல்கிறது....இதை காய்ச்சல் என்கிறோம்....

சில சமயம் 

சிறுகுடலால் தாங்கி கொள்ளப்பட்ட வெப்பத்தை பெருங்குடல் வெளியேற்ற முயல்கிறது இதை வயிற்றுப்போக்கு என்கிறோம்......


உணவின் மூலம் இந்த வெப்பம் எப்படி அதிகரிக்கிறது எனில்....

சுவை கூட்டப்பட்ட உணவுதான் காரணம்....


அதாவது நம் உண்ணும் உணவிண் அளவிற்கு  ஏற்ப சுவை இருத்தல் வேண்டும்....


உதாரணமாக ஒரு வாழைப்பழத்தை உண்கிறோம் எனில்....

அதன் இனிப்பு சுவையை நாக்கு சுவைக்கிறது.....

இந்த சுவையானது....வயிற்றை சூடைய செய்கிறது....

பின் வயிற்றில் செல்லும் வாழைப்பழத்தின் செரிமாணத்திற்கு....

வாழைப்பழத்தின் சுவையால் ஏற்பட்ட வெப்பம் பெரும் பங்கு வகிக்கிறது.....


வயிற்றில் சென்ற வாழைப்பழத்தை சீரணிக்க தேவையான வெப்பத்திற்கும்  மேலாக அந்த வாழைப்பழம் செயற்கையாக சுவையூட்ட பட்டிருப்பின்....

வயிற்றை அதிகமாக சூடடைய செய்திருக்கும்....

அதிகப்படியான சுவையால் ஏற்படும் அதிகப்படியான சூடு....

ஜீரணம் செய்ய வேண்டிய உணவிற்கு  தேவையான வெப்பத்தை விட அதிகமாக இருக்கும்... எனவே ஜீரணத்திற்கு போக இருக்கும் சொச்சமான வெப்பம்...வயிற்றில் அப்படியே தேங்கிவிடும்....

இந்த வெப்பமானது சிறுகுடலுக்கு கடத்தப்படும்....

சிறுகுடல் அதிகப்படியான வெப்பத்தை தாங்க கூடியதுதான்...எனினும் ஒரு அளவுக்கு மெல் செல்லும் போது 

முதலில் வயிற்று வலி ஏற்படும்....


இந்த சமயத்தில் சிறுநீரகம்....கல்லீரலும் சிறப்பாக எசன்ஸுடன் இருக்கும் பட்சத்தில் சிறுகுடலில் தேங்கும் வெப்பம் தணிக்கப்பட்டுவிடும்....


அல்லது பெருகுடலில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு....சிறுகுடலின் வெப்பம் தணிக்கப்படும்....

அதாவது இது கழிவு நீக்கம் அல்ல....

அதிகப்படியான வெப்பம் வெளியேறுவதன் வழி....


சிறுநீரகத்திலும்....கல்லீரலிலும்  எசன்ஸ் குறைவாக இருக்கும் பட்சத்தில்....

நுரையீரல் இந்த வெப்பத்தை வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும்....அப்போதுதான் இதை காய்ச்சல் என்று சொல்கிறோம்....

உடலின் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுதல்ல....காய்ச்சல்....


உடலின் அதிகப்படியான வெப்பம் வெளியேற்ற பட வேண்டிய ஒன்று....

அதாவது கழிவுகள் என்றால் அதற்கான கழிவு நீக்கு உறுப்புகள் வழியாக அது வெளியேறிவிடும்....

ஆனால் காய்ச்சல்  என்பது அதிகப்படியான வெப்பம் வெளியேற வேண்டி இருக்கிறது...கழிவுகள் வெளியேறுவதற்கு அல்ல....


எனவே அதிகப்படியான வெப்பம் எளிதில் வெளியேற வேண்டிய வழியை பார்க்க வேண்டுமே ஒழிய... 

கழிவுகள் நீங்கதான் காய்ச்சல் வருகிறது என்று அப்படியே விட்டுவிடக் கூடாது....ஏனெனில் இந்த அதிகப்படியான வெப்பம் உடனடியாக வெளியேற்ற படவில்லை என்றால்...

உடலின் prenatal jing வீணாக்கப்பட்டுதான்....காய்ச்சல் குறையும்....


காய்ச்சலின் போது ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது.....என்ன நடக்கிறது என்றால்...


ஆங்கில மருந்துகள் பொதுவாக விஷம் தான்....வீரியம் குறைந்த விஷம்....

விஷத்தை சீரணிக்க கூடிய உறுப்பு கல்லீரல்....கல்லீரலில் உள்ள கிளைக்கோஜன் சுரக்கப்பட்டு இரத்தில் கலக்கப்படும் போது விஷத்தை ஜீரணிக்க முடிகிறது.....


மேலும் இந்த கிளைக்கோஜன் இரத்தில் கலந்து நுரையீரலை அடையும் போது...நுரையீரல் சிறப்பாக செயல்படும்...இதனால் தோலின் பின்னால் உள்ள பாய்மங்கள் வீர்யமாக செயல்பட்டு வியர்வையாக உடலின் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி விடுகிறது....


அதாவது விஷமானது கல்லீரல் கிளைகோஜன் சுரக்க காரணமாகிறது....இப்படி தூண்டப்படாவிட்டால்....கல்லீரல் தனது சேமிப்பில் வைத்திருக்கும் கிளைக்கோஜனை சுரக்காது....


கிளைக்கோஜன் சுரந்தாலே உடலில் ஒரு புத்துணர்ச்சியும் தெம்பும் எற்பட்டு விடும்....

ஆனால் கல்லீரலில் சேமிப்பாக கிளைக்கோஜன் இல்லாது போனால்...இந்த ஆங்கில மருந்துகள் தூண்டியும்....பயனில்லை....

அப்போது ஆங்கில மருந்துகள் வேலை செய்யவதில்லை....இதனால் மேலும் கல்லீரலும் அதிக சூடைகிறது...ஏற்கனவே இருந்த உடற்சூட்டுடன் இந்த கல்லீரல் வெப்பமும் சேர்ந்து கொண்டால்....காய்ச்சல் மிக மோசமான நிலையை அடைகிறது.....


II. கல்லீரல் வெளிப்புற காரணியான

Wind பாதிப்பால் ஏற்படுவது....கல்லீரலில் போதுமான எசன்ஸ் இல்லாத பட்சத்தில் வெளிப்புற wind பாதிப்பால்....கல்லீரல் வெப்பமடைந்து காய்ச்சல் ஏற்படும்....இதுவும் கழிவுகள் வகையில் சேர்க்க இயலாது....


உள்புற காரணியாலும் வெளிப்புற காரணியும் இணையும் போது

மிக மோசமான வைரஸ் காய்ச்சல் பரவுகிறது....


III. மூளை மற்றும் தண்டுவட செயல்பாட்டால் ஏற்படும் காய்ச்சல்....

அதிகப்படியான உடல் உழைப்பால் தண்டுவடம் அதிக சூடையும்....

அதேபோல் அதிகப்படியான மூளை உழைப்பு மூளையை சூடாக்கி விடும்......

இவ்விஷயத்தில் Du4 பலன்தரும்...

ஓய்வு மிக அவசியமானது...

இதிலும் கழிவு நீக்க தத்துவத்திற்கு எந்த வேலையும் இல்லை....


ஆக, கழிவு நீக்கு தத்துவத்திற்கும் காய்ச்சலுக்கும் எந்த சம்மந்தமுமில்லை....மேலும் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும் போது அதை வெளியேற்றி விட வேண்டும்....அதுவாக குறையும் என்பது ஒரு அக்குபங்சர் டாக்டர்களுக்கு உரியதல்ல....


நாம் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது இந்த உடல் உஷ்ணம் தணிவதற்குத்தான்....

கழிவுகள் வெளியேற்ற அல்ல....அல்ல...அல்லவே...அல்ல

Comments

  1. வைரஸ் காய்ச்சல் என்றாலும் சரி, வேறு எந்த விதமான காய்ச்சல் என்றாலும் சரி, இங்கு மோசமாக, கடுமையான குளிர் சளி காய்ச்சல் குணமாக மருந்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி