வாழை இலை

 வாழை மரமும் அதன் மருத்துவ 

பயன்களும் நன்மைகளும்........


வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் உள்நாட்டு தேவைக்கமைய பயிரிடப்படுகிறது.


வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது.

பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி, கிழக்கு என்று எதுவும் வீணாகாது.வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக்கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் 

பரவி தற்போது உலகம் முழுவதும் உணவு உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.


வாழைப்பழத்தில் பல வகை உண்டு

கதலி வாழை, செவ்வாழை, கறி வாழை,கப்பல் வாழை, இதரை வாழை (பிரபலமானவை)


வாழையின் பயன்கள்:

நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை இலை. நம்முடைய பண்பாடு மற்றும் உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.


வாழை மரத்தின் அனைத்தும் மனிதர்களின் உறுப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மை தருகிறது. வாழை மரம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக 

"சித்த, ஆயுள் வேத, கை வைத்தியம்" போன்றவற்றில் பல்வேறு வகையில் உதவுகிறது..


நாம் உட்கொள்ளும் உணவை வாழை இலையில் பரிமாறும் போது நமக்கு ஏராளமான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. இதற்க்கு காரணம் நாம் சூடாக உணவுகளை பரிமாறும் போது வாழை இலையில் உள்ள ஊட்ட சத்துக்களை உணவு பொருட்கள் உறிஞ்சுகின்றன.


நாம் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கண் பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம். இதில் உள்ள ஊட்ட சத்துகள் நமக்க  தேவையான வைட்டமின்களை தருகிறது. எனவே நமக்கு மாலை கண் வரும் அபாயம் தடுக்க படுகிறது.


குழந்தையை அதிகாலையில் சூரிய ஒளியில் காட்டும் போது வாழை இலையில் இன்ஜி எண்ணையை தடவி சூரிய ஒளி படும்படி வைப்பதால் குழந்தைக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே இதனை தவறாமல் செய்வதால் குழந்தையின்  சரும பிரச்சனைகள் நீங்கும்.


வாழை இழையில்  சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை 

தொடர்ந்து செய்வதால் நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது தடுக்க படுகிறது.


தீக்காயம் ஏற்பட்டால் வாழை இலையில் தான் படுக்கவைப்பார்கள். இதற்க்கு காரணம் வாழை இலையில் உள்ள குளிர்ச்சி சக்தி தான். வாழை இலை வெப்பத்தை வெளிப்படுத்தமல் இருக்கும். எனவே வாழை இலையில் இன்ஜி எண்ணையை ஊற்றி நம்முடைய தீக்காயம் உள்ள இடத்தில் வைத்தல், வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது வைத்து கட்டல் வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.


குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை இக்காலத்தில் "இன்குபேட்டரில் (ஆங்லேய மருத்துவம்) வைத்து பாதுகாத்து பிழைக்க வைக்கிறார்கள்.


அக்காலத்தில் குறைப்பிரசவ சிசுவை வாழை இலையில் வைத்து மற்றோர் வாழை இலையால் போர்த்தி பாதுகாத்தார்கள்.

 (ஆயுள் வேதம், சித்த வைத்தியம்)

அப்படி உயிர் வாழ இலை உதவியதால் அவ்விலையை "வாழ இலை " 

"வாழை இலை " என வழங்கலாயிற்று..


நாம் தினமும் வாழை இலையில் உணவுகளை உண்பதால் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன.இதனால் இளம் வயத்தில் ஏற்படும் இளநரை பிரச்சனை நீங்கும். மேலும் முடி உதிர்தலும் தடுக்கப்படும்.


வாழை இலையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. எனவே தினமும் வாழை  இலையில் உணவு உண்பது நல்லது.

வாழை இலையில் உணவுகளை கட்டி எடுத்து செல்வதால் நம்முடைய உணவு கெட்டு போகாமல் இருக்கும்.இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.


வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.


இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். 


இது ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும்.


வாழை மரத்தில் நீள்சதுர வடிவிலான பெரிய இலைகள் தண்டில் சுற்று அமைப்பாக வளர்ந்திருக்கும். இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. இலைக்காம்புப் பகுதி குறுகிய உறை போன்றது.


பூவடிச் செதில்கள், செங்கருநீலம். மலர்கள் ஒருபால் தன்மையானவை, மஞ்சரிக் கொத்தின் கீழே பெண் மலர்களும், மேலே ஆண் மலர்களும் காணப்படும். காய்கள், பெரிய குலையாக வளர்பவை.


எச்சரிக்கை

மூட்டுவலி உள்ளவர்கள் வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.


 வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து வாரம் இருமுறைகள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது; சிறுநீர் நன்றாகக் கழியும்.


ஒரு டம்ளர் அளவு வாழைப்பட்டைச் சாற்றைப் பாம்புக்கடி பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாகக் கொடுக்கலாம்.


வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்; மலச்சிக்கல் இருக்காது. நோயாளிகளின் உடல் தேற மிகவும் உகந்த பழமாகும்.


பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும். வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.


துவரம் பருப்புடன் வாழைப்பூ சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.


 வாழைப்பழம் தரும் சத்துகள்

ஈரம் : 61.3%

சர்க்கரை : 36.4%

புரதம் : 1.3%

கொழுப்பு : 0.2%

தாதுப்பொருட்கள் : 0.7%

சுண்ணாம்புச் சத்து : 0.01%

இரும்புச் சத்து : 0.04%


 சிறுநீரகக் கற்கள் கரைய வாழைத் தண்டைச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இரண்டு முறைகள் இவ்வாறு தொடர்ந்து செய்துவர வேண்டும்.


எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாக வாழைத்தண்டு கிழங்குகளை, பொடியாக அரிந்து, இடித்துப் பிழிந்த சாறு ½ டம்ளர் அளவு, தினமும் இரண்டு வேளை சரியாகும் வரை குடிக்க வேண்டும்.


அன்றாட வாழ்வில் 

மருத்துவத்தில் மட்டுமின்றி வாழையின் எல்லா பாகங்களும் நமது அன்றாட வாழ்வில் பல வகைகளிலும் பயன்படுபவை ஆகும்.


முகம் பொலிவு பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் இலையில் சாப்பிடுவது மிகுந்த பயன் தரும். பண்டிகைகள், விழாக்கள், சடங்குகளின்போது, வாழை இலையில் பரிமாறப்படும் சாப்பாடே சிறப்பிடம் வகிக்கின்றது.


வாழைப்பழம், மிக முக்கியமான பழ வகையாகும், முக்கனிகளுள் ஒன்றாகும். நமது சமய சமூக வழிபாடுகளில், பூசைகளில், படையலிலும் வாழைப்பழம் இன்றி செய்யப்படும் சடங்கு முழுமை பெறுவதில்லை. நார் பூக்களையும், பூ மாலைகளையும் கட்டுவதற்கு பயன்படும் கயிறாகும்.


வாழை மரம் நமது சமய வழிபாடுகளின் போது கிழங்கோடு கன்றுகளை(வாழைக் குட்டிகள்) பெயர்த்தெடுத்து மங்கள காரியங்களுக்கும் ஆலய விழாக்களிலும், திருமணம், புனித காரியங்கள், புண்ணிய காரியங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் வாயிலில் கட்டப்படுகின்றது. பின்பு அதனை வீட்டிலே நாட்டி பராமரித்து வளர்த்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.


வாழையடி வாழையாக நம் குலம், வம்சம், தலைமுறை தழைத்தோங்க வேண்டும் என்று...


வீட்டிற்கு ஒரு வாழை வளர்ப்போம். பசுமைப்புரட்சி செய்வோம்... இயற்கையான பசுமையான தோர் அழகான உலகை எங்கள் எதிர்கால சந்ததிக்கு கொடுப்போம்.


நன்றிகளும்

பிரியங்களும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி