உடல் சூடு தணிய

 உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை தேநீர் மருத்துவம்


தேவையான மூல பொருட்கள்


1.பன்னீர் ரோஜா  - 2 எண்ணம்

2.நன்னாரி வேர் - 2 கிராம்

3.செம்பருத்தி பூ - 2 எண்ணம்

4.பனை வெல்லம் - தேவையான அளவு

5.பெருஞ்சிரகம் -  2 கிராம்

6.தண்ணீர் - 200 மி.லி


செய்முறை


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉🏼பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.


👉🏼இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரக பொடியை சேர்க்க வேண்டும்.


👉🏼மேலும் இதனுடன் செம்பருத்தி  பூ,பன்னீர் ரோஜா,மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


👉🏼மேலும் நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉🏼இவ்வாறு உருவான நீரை உடல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடு நிரந்தரமாக குறைந்து விடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி